அரிசி கொள்முதல் விவகாரம்: மத்திய அரசுக்கு 24 மணி நேரம் காலக்கெடு விதித்த தெலங்கானா முதல்வர்!

தெலங்கானா மாநிலத்திலிருந்து 15 லட்சம் டன் புழுங்கல் அரிசியைக் கொள்முதல் செய்யக்கோரி அந்த மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் மத்திய அரசை எதிர்த்து தலைநகர் டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்தினார். நடப்பு பருவத்தில் தங்கள் புழுங்கல் அரிசியைக் கொள்முதல் செய்துகொள்ள வேண்டும் என்ற தெலங்கானா அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. அதைத் தொடர்ந்து தெலங்கானா அரசு தனது போராட்டத்தைத் தீவிரப்படுத்தி, இன்று டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. 2014-ல் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு … Read more

போர்க்களம்: ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்த நோபிள் அகாடெமி. வெற்றியைத் தொடரும் 'தடம் SA'.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‘போர்க்களம்’ கால்பந்து தொடர் நடந்துவருகிறது. கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கிய இத்தொடரில் இரண்டு சுற்றுப் போட்டிகள் முடிவடைந்திருக்கின்றன. இந்நிலையில், மூன்றாவது சுற்று இந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. போர்க்களம் வாரம் 1: முதல் வாரத்தில் 14 கோல்கள்! சனிக்கிழமை மதியம் நடந்த முதல் போட்டியில், தடம் சாக்கர் அகாடெமி, வோல்ஃப்பேக் எஃப்.சி அணியை எதிர்கொண்டது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியிருந்த வோல்ஃப்பேக் அணிக்கு … Read more

டெம்போ ட்ராவலரில் எடுத்துச் செல்லப்பட்ட 264 பவுன் நகைகள் மாயம்; தீவிர விசாரணையில் தனிப்படை போலீஸ்!

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் தங்கபெருமாள். இவர் மகன்களான பெரியசாமி, ஆனந்த ராசு ஆகிய இருவரும், அவர்களுடைய குடும்பத்தினர் 10-க்கும் மேற்பட்டோருடன் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள சொந்த ஊருக்கு டெம்போ ட்ராவலர் வேன் மூலமாக நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது, தங்களது உடைமைகளை சூட்கேஸில் வைத்து வேனின் மேற்பகுதியில் தார்ப்பாய் கொண்டு கட்டி சென்றுள்ளனர். சென்னையைச் சேர்ந்த பாண்டி என்பவர் வேனை இயக்கியுள்ளார். இந்நிலையில், … Read more

“முஸ்லிம்களை அமைதியாகவும் மரியாதையாகவும் வாழ விடுங்கள்!" – கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா

முஸ்லிம்களை அமைதியாகவும் மரியாதையாகவும் வாழ விடுங்கள் எனக் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா கூறியுள்ளார். இந்துத்துவா அமைப்புகள் கோயில்களுக்கு அருகில் உள்ள முஸ்லிம் கடைகளைத் தடை செய்ய வேண்டும், ஹலால் இறைச்சியைப் புறக்கணிக்க வேண்டும், பழ வியாபாரத்தில் முஸ்லிம்களின் வளர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். அதேபோல, முஸ்லிம் கைவினைக் கலைஞர்களால் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் அவர்களால் ஓட்டப்படும் டாக்சிகள், ஆட்டோக்களை புறக்கணிக்க வேண்டும், கர்நாடகா மசூதிகளிலுள்ள ஒலிபெருக்கிகளை எடுக்க வேண்டும் என முஸ்லிம்கள் மற்றும் … Read more

"எங்கள் உணவு, உடை, மொழி குறித்துப் பேச நீங்கள் யார்?" – அமித்ஷாவுக்கு பிரகாஷ் ராஜ் கேள்வி!

கடந்த வாரம் டெல்லியில் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை வகித்துப் பேசிய இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘நாட்டின் ஒருமைப்பாட்டை அதிகரிக்க அலுவல் மொழியின் முக்கியத்துவத்தையும், பயன்பாட்டையும் அதிகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. பல்வேறு மொழிகளில் உரையாடும் மாநில மக்கள், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது அவர்கள் பேசும் இணைப்பு மொழி இந்தி மொழியாக இருக்க வேண்டும். இந்தி உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்துக்கு மாற்றாக. பிற உள்ளூர் … Read more

அசைவ உணவு மோதல்… ஜே.என்.யு மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பல்கலைக்கழக நிர்வாகம்!

டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக காவேரி விடுதியில், சென்ற வார இறுதியில் அசைவ உணவு பரிமாறப்பட்டது. ராம நவமியில் அசைவ உணவு பரிமாறப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பா.ஜ.கவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) அமைப்பினர் விடுதிச் செயலாளரைத் தாக்கினர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் அசைவ உணவு விவகாரம்: ஏபிவிபி அமைப்பினர் எதிர்ப்பு; ஜே.என்.யு மாணவர்களிடையே கடும் மோதல் – 6 பேர் காயம் அதனை தொடர்ந்து ஜே.என்.யூ மாணவர் சங்கத்தினருக்கும், ஏ.பி.வி.பி அமைப்பினருக்கும் … Read more

டிவிட்டர் இயக்குநர் குழுவில் இணையாத எலான் மஸ்க் ; பராக் அக்ரவால் கொடுத்த விளக்கம்

ட்விட்டர் இயக்குநர் குழுவில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் இணைவார் என எதிர்பார்ப்பு எகிறியிருந்த நிலையில், அவர் ட்விட்டர் இயக்குநர் குழுவில் இணையவில்லை என்பது இன்று உறுதியாகியிருக்கிறது  ட்விட்டர் இயக்குநர் குழுவில் எலான் மஸ்க்கின் நியமனம் குறித்து ஏப்ரல் 5 ஆம் தேதி, ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியான பராக் அக்ரவால் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பில், `எலான் மஸ்க்கை எங்கள் குழுவில் நியமிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். அவர் … Read more

How to: வீட்டிலேயே டீடாக்ஸ் டிரிங்க் தயாரிப்பது எப்படி? I How to prepare detox drink?

உடலின் எடை குறைப்பில் ஆரம்பித்து, கழிவுகளை வெளியேற்ற, உடலை சுறுசுறுறுப்பாக இயங்க வைக்க, சருமம், கேச ஆரோக்கியத்தை பராமரித்து ஊட்டம் தர… இப்படி பல பலன்களைத் தரக்கூடியாது டீடாக்ஸ் டிரிங்க் (Detox drink) எனப்படும் சுத்திகரிக்கும் பானம். மிக எளிதாக வீட்டிலேயே தயாரிக்கக் கூடியே இந்த டீடாக்ஸ் டிரிங்கின் தயாரிப்பு முறையை விளக்குகிறார், பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா அவர்கள். Beautician Vasunthara How to: பாதவெடிப்பை சரிசெய்வது எப்படி? I How to get rid of … Read more

கும்பம் குருப் பெயர்ச்சி பலன்கள் 2022 – 2023 | Guru Peyarchi | Sakthi Vikatan #gurupeyarchi

கும்பம் guru peyarchi | ராசிக்கான குருப் பெயர்ச்சி பலன்கள் குரு பகவான் 13-4-2022 அன்று கும்ப ராசியில் இருந்து தன் சொந்த வீடான மீன ராசிக்குள் பிரவேசிக்கிறார். அடுத்த ஓர் ஆண்டு குருபகவான் மீன ராசியில் இருந்து பலன் கொடுப்பார். இந்த குருப் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் எப்படிப் பட்ட பலன்களைக் கொடுக்கும் என்று விளக்குகிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர் #Kumbam #GuruPeyarchi #GuruPeyarchiPalan Source link

23YearsOfPadaiyappa:` நான் வந்துட்டேன் கண்ணா'னு ரஜினி சார் சொன்னார்- படப்பிடிப்பு பற்றி ரமேஷ்கண்ணா

ரஜினி, ரம்யாகிருஷ்ணன், கே.எஸ்.ரவிகுமார் என பலருக்கும் ‘படையப்பா’ ரொம்பவே ஸ்பெஷல் படம்தான். ‘என் வழி… தனி வழி…’, ‘ஆண்டவனே நம்ம பக்கம்தான் இருக்கான்’ போன்ற எவர்க்ரீன் வசனங்கள் கொண்ட ‘படையப்பா’ படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆகிறது. அதில் படையப்பாவாக ரஜினி கம்பீரமென்றால்.. நீலாம்பரியாக ரம்யா கிருஷ்ணன் மிரட்டலாக நடித்திருந்தார். ரஜினியிடம் அவர் சொல்லும் ‘எல்லாருக்கும் உன்ன ஏன் பிடிச்சிருக்கு தெரியுமா.. வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்னை விட்டு போகல’ டயலாக், இப்போதும் சமூக … Read more