Long March 5B: சீனாவின் விண்வெளி ராக்கெட் பூமியில் விழுந்து நொறுங்கும்

புதிதாக ஏவப்பட்ட சீனாவின் மிக சக்திவாய்ந்த ராக்கெட்டான லாங் மார்ச் 5Bயின் சிதைபாடுகள் பூமிக்குள்மீண்டும் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராக்கெட்டின் சிதைபாடுகளின் இயக்கத்தை உன்னிப்பாகக் கண்காணிப்பதாக கூறும் சீனா, பூமியில் உள்ள எவருக்கும் சிறிய ஆபத்தை ஏற்படுத்தாது என்றும் கூறுகிறது.  சீனா டியூன்ஹி என்ற பெயரில் பிரத்யேக விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து வருகிறது. இந்த விண்வெளி ஆய்வு மையத்தில், விண்வெளி வீரர்கள் தங்கி ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக, கடந்த மாதம் 29 ஆம் தேதி, Long March … Read more

அகதிகளை பணத்தால் ஏழ்மையான நாடுகளுக்கு விரட்டும் மேற்குலக நாடுகள்

இங்கிலாந்து மற்றும் ருவாண்டா இடையே கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ், கடந்த ஜூன் 14, 2022 அன்று கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அகதிகளை நாடுகடத்த இங்கிலாந்து அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், திட்டமிட்டபடி,அகதிகளை அனுப்பும் விமானம் தனது பயணத்தை மேற்கொள்ளவில்லை. மனித உரிமைகள் அடிப்படையிலான சட்ட நடவடிக்கையின் மூலம் இம்முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த அகதிகள் சிரியா, சூடான், ஈரான் போன்ற போர் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நாடுகளிலிருந்து வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சமடைந்தவர்கள் என்பதும் படகு வழியாக … Read more

அண்டை நாடுகளை தேர்வு செய்ய முடியுமா? பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிரத்யேக பேட்டி

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துக் கொண்ட பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, ஜீ மீடியாவிற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். அமெரிக்காவிற்கு எதிரான பாகிஸ்தான் அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையில் பொருள் இல்லை என்று முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியதில் எந்த அர்த்தமும் இல்லை என்று கூறிய பிவாலவல் பூட்டோ சர்தாரி, அனைத்து நாடுகளுடனும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதாக தெரிவித்தார். இந்தியாவுடனான உறவைப் … Read more

ஆப்பிரிக்காவுக்கு வெளியே குரங்கு அம்மையால் முதல் மரணம்: ஸ்பெயின், பிரேசில் நாடுகளில் பீதி

மாட்ரிட்: கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை பாடாய் படுத்தியது. உலகம் முழுவதும் நிலைமை சற்று சீராகி, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வேளையில் மங்கி பாக்ஸ் என்ற புதிய தொற்று உலக நாடுகளை பற்றிக்கொண்டுள்ளது. தற்போது மங்கி பான்ஸ் நோயால் ஏற்பட்ட மரணம் பற்றிய செய்திகளும் வந்துகொண்டிருக்கின்றன. ஸ்பெயின் தனது நாட்டில் குரங்கு அம்மை நோயால் முதல் இறப்பு ஏற்பட்டதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது. ஸ்பெய்னில் ஏற்பட்ட மரணம், குரங்கு அம்மையால்  ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள … Read more

புகைபிடிக்க தடை: புகை பழக்கம் இல்லாத தலைமுறையை உருவாக்க நியூசிலாந்து இயற்றியுள்ள சட்டம்

நியூசிலாந்தில் சிகரெட் தடை: நியூசிலாந்தில் இனி, 2008க்குப் பிறகு பிறந்த இளைஞர்கள் சிகரெட் வாங்க முடியாது. இதனால், இனி வரும் தலைமுறையினர் புகை பிடிக்க இயலாது.  இதற்காக நியூசிலாந்து அரசு புதிய சட்ட மசோதாவை அறிமுகம் செய்துள்ளது. புதிய தலைமுறையினர் சட்டப்பூர்வமாக சிகரெட் வாங்குவதை தடை செய்யும் இந்த புதிய நியூசிலாந்து சட்டத்தின்படி,  இனி 2008க்குப் பிறகு பிறந்த இளைஞர்கள் 18 வயதை எட்டிய பிறகும் புகைபிடிக்க முடியாது. நியூசிலாந்து எம்.பி.க்கள் அனைவரும் இது குறித்த சட்ட … Read more

Bizarre! பாகிஸ்தானில் எருமையை விட மலிவான விலையில் விற்கப்படும் சிங்கங்கள்

நமது அண்டை நாடான பாகிஸ்தானின் மோசமான பொருளாதார நிலையை உலகமே அறியும். அதற்கு தனியான விளக்கங்கள் தேவை இல்லை. பல விதமான முயற்சிகளுக்குப் பிறகும் நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியவில்லை. இங்கு பணவீக்கம் விண்ணைத் தொடும் நிலையில் உள்ளது. இதனால் உணவு பொருட்கள், பானங்கள் மட்டுமின்றி, கால்நடைகளின் விலையும் வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது. இந்நிலையில், மற்றுமொரு அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் சிங்கத்தின் விலை, எருமை மாட்டின் விலையை விட குறைவு. … Read more

யுத்தத்திற்கு நடுவில் உக்ரைன் அதிபர் தனது மனைவியுடன் நடத்திய போட்டோஷூட்

Zelenskyy Photoshoot: ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் ஐந்து மாத காலங்களாக நீடிக்கும் நிலையில், உக்ரைன் மக்களின் வாழ்வாதாரங்களும் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் அவரது மனைவியுடன், வோக் பத்திரிகைக்காக  போட்டோஷூட் நடத்தியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.  ஒரு புகைப்படத்தில், ஜெலென்ஸ்கியும் அவரது மனைவியும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக அமர்ந்திருப்பதைக் காணலாம். மற்றொரு படத்தில், இருவரும் ஒருவரையொருவர் கைகளைப் பிடித்துக் கொண்டுள்ளனர். வோக் பத்திரிகை உக்ரைன் முதல் பெண்மணியின் புகைப்படத்தை வெளிட்டு, அதனை … Read more

Smuggling of Idol: தமிழக ஆலயத்திலிருந்து திருடப்பட்ட சிலை லண்டனில்!

நியூடெல்லி: தமிழகத்தில் இருந்து திருடுபோன பழங்கால சிலை லண்டனில் இருப்பது கண்டறியப்பட்டது. தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பழமையான கோவில்களில் கலை நயம்மிக்க நேர்த்தியான பழமையான விலை மதிப்பற்ற கற்சிலைகளும், உலோகச் சிலைகளும் ஆயிரக்கணக்கில் உள்ளன. கடந்த காலங்களில் தமிழக கோவில்களிலிருந்து விலை மதிப்பற்ற சிலைகள் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு அங்குள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் கலைப் பொருள் வியாபாரிகளுக்கும் சட்டத்திற்கு புறம்பாக விற்கப்பட்டன. தமிழகத்தின் ஆன்மீக மற்றும் கலைப் பொக்கிஷங்கள் கடத்தல் குறித்து கடந்த காலங்களில் இதுகுறித்து குற்ற வழக்குகள் … Read more

தேர்தலுக்கு 290 நாட்களுக்கு பிறகும் அதிபரோ பிரதமரோ பதவியேற்கவிலை: இராக்

ஈராக்: மதகுரு மொக்தாதா சதரின் ஆதரவாளர்கள் அதிஉயர் பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைந்து இராக் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர். ஈராக் ஷியா மதகுரு மொக்தாதா அல்-சதர் ஆதரவாளர்கள் ஊழலுக்கு எதிராக, ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்திற்குள் போராட்டம் நடத்தும்போது அத்துமீறி நுழைந்தனர். அக்டோபரில் நடந்த தேர்தலில் சதரின் குழுவே, நாடாளுமன்றத்தில் மிகப் பெரிய கட்சியாக வெற்றி பெற்றாலும், புதிய அரசாங்கத்தை உருவாக்குவதில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் இன்னும்  அகலவில்லை.. பாக்தாத்தின் உயர்-பாதுகாப்பு பசுமை மண்டலத்தில் அத்துமீறி நுழைந்த போராட்டாக்காரர்கள், புதன்கிழமைன்று … Read more

Viral Video: கடும் வெப்பத்தினால் பிளந்த பாலம்; அதிர்ச்சியூட்டும் வீடியோ

சீனாவில் கடுமையான வெப்பநிலை நிலவுவதாக கூறப்படும் நிலையில்,  கடுமையான வானிலை காரணமாக  பாலம் ஒன்று  பிளந்து இடிந்து விழும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. நவ் திஸ் நியூஸ் (Now This News) ட்விட்டரில் பதிவிட்ட வீடியோவில் கடுமையான வெப்பம் காரணமாக கியான்ஜோ பாலம் பிளப்பத்தை சித்தரிக்கிறது. பாலம் சுமார் 20 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. பாலம் இடிந்த அன்று அது 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்ப நிலை பதிவாகி இருந்தது.இந்த வீடியோ ஜூலை … Read more