Marburg virus: மார்பர்க் வைரஸ் கொரோனா விட கொடியதா.. பீதியை கிளப்பும் WHO

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து உலகம்  இன்னும் முழுமையாக  மீளவில்லை. முன்னபி போது லட்சக்கணக்கில் தொற்று பாதிப்பு பதிவாகவில்லை என்றாலும், தினசரி பாதிப்புகள் ஆயிரக்கணக்கில் பதிவாகின்றன. இந்நிலையில், மற்றொரு ஆபத்தான வைரஸ் தாக்குதல் தொடங்கியுள்ளது. இந்த கொடிய வைரஸின் பெயர் மார்பர்க். இந்த வைரஸை சாதாரணமாக நினைக்க வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.  மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் இரண்டு மார்பர்க் வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ் பாதிப்பு … Read more

மாலத்தீவிற்கு தப்பி சென்று விட்டாரா ராஜபக்சே… வெளியான பரபரப்பு தகவல்

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பி சென்று விட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் எந்த நாட்டில் தஞ்சமடைந்துள்ளார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அவர் தனது விமானத்துடன் மாலத்தீவில் தரையிறங்கியதாக நம்பப்படுகிறது. அதிபர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தில் கோத்தபய ராஜபக்ச கையொப்பமிட்டுள்ளதாகவும், அது இன்று அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோட்டாபய ராஜபக்ஷ தனது மனைவி, மெய்ப்பாதுகாவலர் மற்றும் விமானியுடன் மாலைதீவு சென்றடைந்துள்ளதாக … Read more

துபாய் தப்பி செல்ல முயன்ற கோத்தபய ராஜபக்ச; தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

இலங்கையில் கடும் நெருக்கடி நிலையினால் மக்கள் கொதித்து போயுள்ள நிலையில்,  அதிபர் கோத்தபய ராஜபக்சநாட்டை விட்டு தப்பி செல்ல முயன்ற போது, விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினர். நாட்டின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக பெரிய அளவில் எதிர்ப்பு வெடித்ததை தொடர்ந்து, கோட்டாபய ராஜபக்ச புதன்கிழமை பதவி விலகுவதாக உறுதியளித்தார். ஆனால், அதிபர் பதிவியில் இருந்து விலகினால், தான் உடனடியாக கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில், அவர் நாட்டை விட்டு எப்படியாவது … Read more

SpaceX Accident: ஸ்பேஸ்எக்ஸ் பூஸ்டர் ராக்கெட் சோதனையில் விபத்து

SpaceX Accident: ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப்பின் பூஸ்டர் ராக்கெட், சோதனையின்போது ஏற்பட்ட வெடிப்பில், ராக்கெட்டின் அடிப்பகுதியில் தீப்பிழம்புகள் எழும்பியதுடன், அந்த வளாகத்தையே புகை சூழ்ந்தது. 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 2021 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும், ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் சோதனைகளில் இதுபோன்ற விபத்துகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.   தற்போது ஏற்பட்ட வெடிப்பால், ராக்கெட்டின் அடிப்பகுதி முழுவதும் தீப்பிழம்புகள் எழும்பியதுடன், வளாகமே கடுமையான புகையில் சூழ்ந்தது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில் கேமராவும் அடைவது தோன்றியது. இந்தத் தகவலை எலன் மஸ்க் இன்று (2022, … Read more

இந்திய ராணுவத்துடன் நேரிடையாக மோத அஞ்சி, ஹேக்கர்கர் உதவியை நாடும் சீனா

இந்தியாவின் அதிகரித்து வரும் இராணுவ சக்தியை கண்டு அஞ்சும் சீனா தனது மோசமான திட்டங்களை நிறைவேற்ற சைபர் ஹேக்கர்களின் உதவியை நாடுவதாக இந்தியா மற்றும் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. டோக்லாமில் இந்திய ராணுவ வீரர்களுடன் சீன ராணுவ வீரர்கள் மோதிய போது, இந்தியா வலுவான பாடம் புகட்டியதால், இனி தியாவுடன் நேரடியாக போராடுவது எளிதல்ல என்று சீனா புரிந்து கொண்டுள்ளது. எனவே சீனா இந்திய ராணுவம் தனது வீரர்களை தாக்காமல், பாதுகாக்க முயல்கிறது. … Read more

எனக்கு இருந்தது ஒரே வீடு தான்… கண் கலங்கிய இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

பொருளாதாரம் நெருக்கடி காரணமாக திவாகி விட்ட இலங்கையில், எரிபொருள் பற்றாக்குறையால் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டு, தேசம் சீர்குலைந்துள்ள இந்த நேரத்தில் மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் முதல் தடவையாக மிக தீவிரமான  நெருக்கடி நிலையை எதிர்கொள்கிறது. வெளிநாட்டுக் கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இலங்கை ஆசியாவின் வளமான நாடுகளில் ஒன்றாக இருந்த இலங்கையில், தற்போது மக்கள் அத்தியாவசிய பொருட்களைக் கூட வாங்க முடியாத நிலையில் தவிக்கின்றனர்.  இதனால், கொதித்தெழுந்த … Read more

பிரிட்டன் பிரதமர் யார்? செப்டம்பர் 5ம் தேதி வரை காத்திருக்கவும்

இங்கிலாந்தின் புதிய பிரதமர் யார்: இங்கிலாந்தின் புதிய பிரதமர் செப்டம்பர் 5ஆம் திகதி அறிவிக்கப்படுவார் என்றும், தற்போது போரிஸ் ஜான்சனுக்குப் பின் பிரிட்டனின் பிரதமராக பதவியேற்க 11 பேர் போட்டியிடுகின்றனர்.  போட்டியின் ரிஷி சுனக் முன்னணியில் இருக்கிறார், ஆனால் உடனடி வரிக் குறைப்புகளின் வாய்ப்புகள் தொடர்பான அவரது கருத்து அவருக்கு எதிராக மாறலாம். “ஆறுதல் தரும்” உடனடி வரிக் குறைப்பு என்பது, எதிர்கால சந்ததியினரை மோசமாக்கும் என்று ரிஷி சுனக் கூறினார்.  பிரிட்டனின் புதிய பிரதமர் செப்டம்பர் 5ஆம் தேதி … Read more

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் முதல் வண்ணப்படம் – மனிதன் இதுவரை காணாத பிரபஞ்ச காட்சி!

ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா உருவாகியுள்ள தொலை நோக்கி கருவிதான், ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி. நாசா நிறுவனத்தின் மூலம் விண்ணில் ஏவப்பட்ட உலகின் மிகப்பெரிய சக்தி மற்றும் திறன் வாய்ந்த தொலைநோக்கியாக இது பார்க்கப்படுகிறது.குறிப்பாக இது ஒரு அடுத்த தலைமுறை விண்வெளி தொலைநோக்கியாக இருக்கும் என்றே நம்பலாம். இந்திய மதிப்பில் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பல ஆண்டுகள் கடின உழைப்பில் மிகவும் … Read more

ரஷ்யாவுக்கு ட்ரோன்களை வழங்க ஈரான் திட்டமிட்டுள்ளதா: அமெரிக்கா

Ukraine Invasion and Drones: உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்ரமிப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், ஈரான் ரஷ்யாவிற்கு நூற்றுக்கணக்கான ட்ரோன்களை வழங்க திட்டமிட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்யாவுக்கு இரான் வழங்கவிருக்கும் ட்ரோன்களில் சில ஆயுதங்களை தாங்கும் திறன் கொண்டவை. ஆளில்லா வான்வழி வாகனங்கள் ஜூலை மாத தொடக்கத்தில் ஆயுதங்களைத் தாங்கிச் செலும் திறன் கொண்ட ட்ரோன்களை பயன்படுத்துவதது தொட்ர்வான பயிற்சி அமர்வுகளை வழங்கியிருக்கலாம் என்று நம்புவதாக அமெரிக்கா கூறுகிறது. வெள்ளை மாளிகையில் நேற்று (திங்கள்கிழமை, ஜூலை 11) செய்தியாளர்களை … Read more

கொந்தளிப்பில் இலங்கை; அடுத்தது சீனாவில் வலையில் சிக்கிய பாகிஸ்தானா…

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் முதல் தடவையாக மிக தீவிரமான  நெருக்கடி நிலையை எதிர்கொள்கிறது. வெளிநாட்டுக் கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டு , இப்போது முதல் முறையாக திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இலங்கை ஆசியாவின் வளமான நாடுகளில் ஒன்றாக இருந்த இலங்கையில், இப்போது மக்கள் அத்தியாவசிய பொருட்களைக் கூட வாங்க முடியாத நிலையில் உள்ளனர்.  கொதித்தெழுந்துள்ள பொதுமக்கள், அதிபர் மாளிகையை சூரையாடியதில், அவர் நாட்டை விட்டு தப்பியோடும் நிலை ஏற்பட்டுள்ளது.  ஒரு நாடு எப்போது திவாலானதாக … Read more