FBI on Top Secret: உளவுச் சட்டத்தில் டொனால்ட் டிரம்ப் மீது நடவடிக்கை பாயுமா?

டொனால்ட் ட்ரம்ப் உளவு சட்டத்தை மீறியதாகவும் அவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்பதும் இன்றைய தலைப்புச் செய்திகளாகி அனைவராலும் விவாதிக்கப்படும் உலகச்செய்தியாகிவிட்டது. டொனால்ட் டிரம்ப் வீட்டில் தேடுதல் வேட்டை நடத்திய எஃப்.பி.ஐ, பல ரகசிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளது. வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 12) ஒரு நீதிபதியால் சீல் செய்யப்பட்ட வாரண்ட் மற்றும் தொடர்புடைய பொருட்கள், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டொனால்ட் டிரம்பின் புளோரிடா எஸ்டேட்டில் நடைபெற்ற சோதனையின் போது கைப்பற்றப்பட்டது. டொனால்ட் டிரம்ப் உளவு சட்டத்தை மீறியதாக நம்புவதற்கு … Read more

உயிருக்கு போராடும் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி! கத்திக்குத்து தாக்குதல் வீடியோ வைரல்

பிரபல இந்திய வம்சாவளி எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. நியூயார்க்கில், நேற்று( வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 12) கத்தியால் குத்திய ஆசாமியின் அடையாளத்தை நியூயார்க் போலீசார் வெளியிட்டுள்ளனர். ‘சாத்தானின் வசனங்கள்’ என்ற சர்ச்சைக்குரிய புத்தகத்தின் ஆசிரியர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டதாகவும், அவர் மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது.  சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பான விசாரணையை நியூயார்க் போலீசார் மேற்கொண்டுள்ளனர். … Read more

தொடர்ந்து ஓடும் ராஜபக்ச! சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்தில் தஞ்சமடைந்தார்

இலங்கையில் இருந்து தப்பி சிங்கப்பூரில் அடைக்கல்ம் புகுந்த முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவிற்கு சிக்கல்கள் அதிகரித்துள்ளன. கோட்டாபய ராஜபக்ச, வியாழன் அன்று (2022 ஆகஸ்ட் 11) வெகுஜன எதிர்ப்புகளுக்கு மத்தியில் தாய்லாந்திற்கு சென்றுள்ளார். கடந்த மாதம் தனது தீவு தேசத்தை விட்டு வெளியேறிய பின்னர் முதலில் சிங்கப்பூரில் இருந்த அவர், இரண்டாவதாக தென்கிழக்கு ஆசிய நாட்டில் தற்காலிகமாக தங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து வெளியேறியதாக நகர-மாநில குடிவரவு அலுவலகம் … Read more

குறைந்தபட்ச ஊதியமே ரூ.64 லட்சம் : ஊழியர்கள் கொண்டாடும் நிறுவனம்

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் கிராவிட்டி பேமண்ட்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கிரடிட் கார்டு சேவை உள்ளிட்ட நிதி சேவைகளை செய்து வருகிறது.இந்நிறுவனத்தை லூகாஸ் மற்றும் Dan Price ஆகிய சகோதரர்கள் கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கினர். Dan Price தற்போது இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார்.  இந்நிறுவனத்தில் சுமார் 200 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தொடக்கம் முதலே ஊழியர்களுக்கு அதிக ஊதியம் வழங்கி வரும் Dan Price, தற்போது தனது நிறுவனத்தில் … Read more

கருந்துளைகளுக்குப் பின்னால் X-Ray கதிர்கள்: அவிழும் பிரபஞ்ச ரகசியம்!

800 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு விண்மீனின் மையத்தில் உள்ள பிரம்மாண்டமான கருந்துளையில் இருந்து எக்ஸ் ரேகதிர்களை பகுப்பாய்வு செய்யும் போது, ஒரு விசித்திரமான வடிவம் இருப்பதை  ​​ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கவனித்தனர். இந்த கதிர்களை பிரபஞ்சத்தில் வெளியேற்றுவது கருந்துளை என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.  இந்த நிகழ்வை விளக்கும் விஞ்ஞானிகள், கருந்துளைகளில் வாயு அதிவேகமாக உள்ளே நுழையும் போது எரிப்பு ஏற்பட்ட பின்னர், அதிலிருந்து எக்ஸ்-ரே கதிர்வீச்சு ஏற்படலாம் என்று அனுமானிக்கின்றனர். கருந்துளையில் வாயு நுழையும்போது ஏற்படும் எரிப்புகள் … Read more

கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீயால் தவிக்கும் பிரான்ஸ்! 57200 ஹெக்டேர் காடுகள் சேதம்

தென்மேற்கு ஐரோப்பாவில் தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத் தீ ஏற்படுத்தி வரும் சேதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெப்பம் குறைவதற்கான அறிகுறியே தென்படாத நிலையில், காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இதில், பிரான்ஸ் குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பிரான்சில் உள்ள ஜிரோண்டே பகுதியில் தீயினால் 6,200 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள காடுகள் எரிந்துள்ளன. இந்த ஆண்டு பிரான்சில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக ஒட்டுமொத்தமாக 57,200 ஹெக்டேர் பரப்பளவில் தீப்பிடித்துள்ளது.10,000 குடியிருப்பாளர்கள்வெளியேற வேண்டிய கட்டாயம் … Read more

தைவானை சீனா தாக்குவது அத்தனை எளிதல்ல… அதற்கான காரணங்கள் இதோ

சீனா தைவான் எல்லை பிரச்சனை: அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், அதற்கு வலுவாக கண்டனம் தெரிவித்த சீனா,   தைவானைச் சுற்றி ராணுவப் பயிற்சியைத் தொடங்கியது. தைவான் மற்றும் சீனா இடையே பல தசாப்தங்களாக பதற்றம் இருந்து வருகிறது. ஆனால் நான்சி பெலோசியின் வருகைக்குப் பிறகு தென் சீனக் கடலில் பதற்றம் வெகுவாக அதிகரித்துள்ளது. பெலோசியின் வருகைக்குப் பிறகு காட்சிகள் மாறின தைவான் சீனத் தாக்குதல்களைத் தவிர்க்கவும் சமாளிக்கவும் முயன்று … Read more

அதிர்ச்சியில் ஊழியர்கள்! 200 பேரை பணி நீக்கம் செய்த Microsoft

சான் பிரான்சிஸ்கோ: கிட்டத்தட்ட 1,800 ஊழியர்களை பணிநீக்கம் செய்த சில மாதங்களுக்குப் பிறகு, சத்யா நாதெள்ளாவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த முறை அதன் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட R&D திட்டங்களில் ஒன்றிலிருந்து பணி நீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்டின் மார்டன் லைஃப் எக்ஸ்பிரியன்ஸ் (MLX) குழுவில் கூடுதல் பணி நீக்கம் அதிகரித்துள்ளன என்று பிசினஸ் இன்சைடர் அறிக்கை முதலில் குறிப்பிட்டது. இந்த பிரிவு 2018 ஆம் ஆண்டில் … Read more

Viral News: ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.63 லட்சம் சம்பளம் தரும் SUPER நிறுவனம்

கொரோனா தொற்றுநோய் மற்றும் ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக, உலகின் பெரும்பாலான நாடுகள் மெதுவாக பொருளாதார மந்தநிலையை நோக்கி நகர்கின்றன. அதன் விளைவு நீண்ட நேரம் தெரியும். பெரும்பாலான நிறுவனங்கள் செலவுகளை மிச்சப்படுத்த ஊழியர்களை பணிநீக்கம் செய்கின்றன, பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை குறைத்துள்ளன. ஆனால் இத்தனைக்கும் நடுவில் இந்த இரண்டு விதமான அதிர்ச்சி எதையும் கொடுக்காமல் சம்பளத்தை உயர்த்திக் கொண்டே இருக்கும் ஒரு நிறுவனம் உள்ளது என்றால் ஆச்சர்யமகா உள்ளது இல்லையா. ஆம், அந்த … Read more

பயங்கரவாதிகளை காப்பாற்றும் சீனா – பாகிஸ்தான்; ஐநாவில் இந்தியா காட்டம்

சர்வதேச தடைகளில் இருந்து பாகிஸ்தான் பயங்கரவாதி அப்துல் ரஹ்மான் மக்கியை காப்பாற்றிய சீனா மற்றும் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) கூட்டத்தில், “உலகின் மிகவும் மோசமான பயங்கரவாதிகளை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மிகவும் வருந்தத்தக்கது” என்று இந்தியா கூறியது. இத்தகைய இரட்டைத் தரநிலைகள் பாதுகாப்புச் சபையின் பொருளாதாரத் தடைகள் மீதான நம்பகத்தன்மையை எப்போதும் இல்லாத அளவிற்குக் குறைத்துள்ளன என இந்தியா சாடியுள்ளது. பயங்கரவாதிக்கு … Read more