நயன்தாரா விக்கியால் மருத்துவமனைக்கு வந்த சோதனை; என்னவா இருக்கும்?

Nayanthara -Vignesh Shivan surrogacy row: நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவனை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். மேலும் 2 வாரத்திற்கு முன்பு இவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்கி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில், “நயனும் நானும் அம்மா & அப்பாவாகிவிட்டோம். நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். நமது பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள் என அனைத்து நல்ல வெளிப்பாடுகளும் இணைந்து 2  குழந்தைகளின் வடிவில் வந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்கு வேண்டும்” … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டலுக்கு பா.ஜ.க. அஞ்சாது: வானதி சீனிவாசன்

பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவர் மற்றும் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் கோவை சிலிண்டர் வெடிப்பு மற்றும் பயங்கரவாத சக்திகளுக்கு அதில் உள்ள தொடர்பு, அரசாங்கத்தின் இயலாமை ஆகியவை குறித்தும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் திடீர் கோவை வருகை குறித்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர், “கோவை மாநகருக்கு நேற்று (அக்டோபர் 27) வருகை தந்த தமிழக மின்சாரத் துறை அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சித் தலைவர், … Read more

விக்ரம் 100-வது நாள் கொண்டாட்டம்: அதிரடி ஏற்பாடுகளுடன் தயாராகும் கமல்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஜூன் மாதம் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு, மிகவும் வித்தியாசமான பாணியில் கமல் ரசிகர்கள் அவரை இந்த படத்தில் கண்டனர். அதிரடி ஆக்‌ஷன் படமாக எடுக்கப்பட்ட விக்ரம் படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவானது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சூர்யா (கௌரவ வேடம்), பகத் பாசில், செம்பன் வினோத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இருந்தது.  பான் இந்தியா படமாக எடுக்கப்பட்ட … Read more

கேரளாவில் பறவைக் காய்ச்சல்: நிலைமையை கண்காணிக்க விரைந்தது மத்திய குழு

திருவனந்தபுரம்: கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதை அடுத்து இதற்கான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை மத்திய சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை அனுப்பி வைத்தது. இக்குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பறவைக் காய்ச்சல் பற்றிய பரிந்துரைகளையும் குழு சமர்ப்பிக்கும்.  கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரிபாத் நகராட்சியில் … Read more

இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் ஆன்லைன் கேமிங் செயலிகள் – எப்படி?

உலகம் முழுவதும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் களைகட்டியுள்ளது. ஐபிஎல் மற்றும் ஆசிய கோப்பைகளுக்கு பிறகு நடக்கும் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழா என்பதால், உலகம் முழுவதும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் இப்போட்டிகளை ஆவலுடன் பார்த்து வருகின்றனர். இந்த நேரத்தை சரியாக பெருநிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டு கவர்ச்சியான விளம்பரங்களை ஒளிபரப்பி வருகின்றனர். தொலைக்காட்சி, செயலிகளில் மட்டுமல்லாது பல்வேறு இணையதளங்களிலும் கிரிக்கெட் தொடர்பான விளம்பரங்கள் இணையத்தில் இடம்பெறுகின்றன.  இவற்றில் பெரும்பாலானவை இந்தியாவுக்கு சொந்தமில்லாத வெளிநாடுகளில் இருந்து இயங்கும் … Read more

வசூலில் பிரின்ஸ்-ஐ ஓரம்கட்டிய சர்தார்; உலகம் முழுவதும் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷன்

இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடித்த ’சர்தார்’ திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியானது. படம் வெளியான நாள் முதல் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்ற சர்தார், பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனிலும் அசத்தியது. முதல் நாள் வசூல் சுமாராக இருந்தாலும், அடுத்தடுத்த நாள் வசூல் எகிறிக் கொண்டே சென்றது. குறிப்பாக, சர்தாருக்கு போட்டியாக களமிறங்கிய சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம், கடும் விமர்சனங்களை பெற்றது. இது பாக்ஸ் ஆஃபீஸிலும் எதிரொலித்தால் சர்தாருக்கு மவுசு கூடியது.  வெள்ளிக்கிழமை … Read more

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி; வீடியோ எடுத்து பகிர்ந்த கணவன்!

கான்பூரில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட  தனது மனைவின் செயலை கணவர் வீடியோ எடுத்து பதிவிட்டு பகிர்ந்த வீடியோ இணையத்தை அதிர வைத்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் ஒரு நபர் தனது மனைவியின் தற்கொலையை பதிவு செய்த அதிர்ச்சி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் பரவி வருகிறது, அதில் பெண் முதல் முயற்சியில் தோல்வியடைந்த நிலையில், கழுத்தில் துப்பட்டாவால் தூக்கு போட்டுக் கொள்ள … Read more

ரிஷி சுனக் இந்தியரே இல்லை – அடித்து சொல்லும் பாஜக மூத்த தலைவர்

இங்கிலாந்தின் வரலாற்றில் முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்றுள்ளார். சுமார் 200 ஆண்டுகளாக, இந்தியாவை தனது காலனியாதிக்கத்தின் மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இங்கிலாந்து போன்ற நாட்டில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் பிரதமராக வந்திருப்பது பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில், ரிஷி சுனக் முழுமையான ஒரு ஆங்கிலேயர் தான் என பாஜக மூத்த தலைவர் உமா பாரதி கருத்து தெரிவித்துள்ளார். மூன்று தலைமுறைகளுக்கு முன்னரே அவரது குடும்பத்தினர் இந்தியாவில் இருந்து சென்றுவிட்டதாகவும், இந்துவாக … Read more

ஜெய் ஆஞ்சநேயா…! மண்டியிட்டு வேண்டி கோயில் உண்டியலை தூக்கிச்சென்ற திருடன் – வைரலாகும் வீடியோ

கோயில்களில் விலை மதிப்பற்ற சிலைகள், தங்க நகைகள், உண்டியல்கள் ஆகியவற்றை திருடர்கள் திருடிக்கொண்டு செல்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், நடுராத்திரயில் காரில் வந்திறங்கி, கடவுளை வேண்டி கோயிலில் திருடி செல்வது என்பது மிகவும் அரிதுதான்.  அதேபோன்ற ஒரு சம்பவம்தான் தீபாவளிக்கு முந்தைய நாள், மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் நடந்துள்ளது. ஜபல்பூரில் உள்ள ஒரு கோயில் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சியில், வெள்ளை நிற காரில் வந்திறங்கும் அந்த திருடன், கடவுள் சிலை முன் இருக்கைகளையும் கட்டிக்கொண்டு, பணிவுடன் தெய்வத்திடம்  … Read more

தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

வானிலை தகவல்: தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29 ஆம் தேதி ஒட்டி துவங்கக்கூடும். இன்று தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  27.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் … Read more