எலான் மஸ்க் "மனநலம் குன்றியவர்"….ட்விட்டர் நிர்வாகி விமர்சனம்!

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து அந்நிறுவன ஊழியர்கள் தங்களது எதிர்காலம் குறித்து குழப்பமான மனநிலையிலேயே உள்ளனர். ஒரு சில ஊழியர்கள் சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், சிலர் தானாக முன்வந்து நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர். துணைத்தலைவர்கள் உள்ளிட்ட ட்விட்டரின் மூத்த நிர்வாகிகள் நிறுவனத்தில் இருந்து விலகியுள்ளனர். எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பிறகு, நிர்வாகச் செலவைக் குறைப்பதற்காக புதிதாக ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், போலி கணக்குகள் குறித்த விவரங்களைத் தரும் வரை … Read more

காதலியைக் கொன்று சடலத்தை புதைக்கும் போது இறந்த காதலன்

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில், காதலியை கொன்ற ஒருவர் இறந்த விசித்திர சம்பவம் ஒன்று நடந்துள்ளது.  காதலியை கொன்று புதைக்கும் செய்யும் போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போன சம்பவம் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காதலியின் கழுத்தை நெரித்து கொலை இந்த விசித்திர சம்பவம் அமெரிக்காவில் நடந்ததாக, ‘நியூயார்க் போஸ்ட்’ நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது. தென் கரோலினாவைச் சேர்ந்த ஜோசப் மெக்கின்னன் என்ற 60 வயது என்பவர் தனது 65 வயது காதலியான பாட்ரிசியா டென்ட்டை கழுத்தை நெரித்து … Read more

சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் வேண்டுமென்றே விபத்திற்குள்ளாக்கப்பட்டது: அறிக்கை

கடந்த மார்ச் மாதம் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம் விபத்து விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்து நிலையில், அது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  கடந்த மார்ச் மாதம்  133 யணிகளுடன் சென்ற சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த 133 அனைவரும் உயிரிழந்தனர்.  விமானம் தென் சீனாவின் குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியான டெங்சியன் கவுண்டி என்னும் வமலைப் … Read more

முடிந்தவரை பல கருப்பினத்தவரை கொல்ல வேண்டும்…அமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் கைதானவரின் திடுக்கிடும் இலக்கு

அமெரிக்காவின் நியூயார்க்  மாகாணத்தில் உள்ள பஃப்பலோ நகரில்  உள்ள, பல்பொருள் அங்காடியில் துப்பாக்கி ஏந்திய நபர் நேற்று முந்தினம் கண்மூடித்தனமாக  நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக பேட்டன் ஜென்ட்ரான் என்ற 18 வயது இளைஞரை போலீஸார் கைது செய்தனர். அவர் 13 பேரைத் தாக்கிய நிலையில் அதில் 11 பேர் கருப்பினத்தவர் ஆவர்.  பேட்டன் ஜென்ட்ரானிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், 2019-ம் ஆண்டு நியூசிலாந்தில் 2 மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை முன்மாதிரியாகக் … Read more

ஆரஞ்சு நிறத்தில் மாறிய வானம்…மணற்புயலால் அரபு நாடுகள் அவதி

பாலைவனங்கள் அதிகமுள்ள அரபு நாடுகளில் மணற்புயல் ஏற்படுவது வழக்கம் என்றாலும் கடந்த 2 மாதங்களாக வழக்கத்தை விட தீவிரமான மணற்புயல்கள் ஏற்பட்டுள்ளன. சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில், மணற்புயல் காரணமாக சில நூறு மீட்டர் தூரத்திற்கு புழுதி சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் மாறியுள்ளது. மேலும் படிக்க | இங்கையில் ஒரு நாளுக்கான பெட்ரோல் மட்டுமே இருப்பில் உள்ளது: ரணில் விக்கிரமசிங்க வாகனங்களை குறைந்த வேகத்தில் இயக்கும்படி பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ரியாத் நகரின் மத்தியப் பகுதியில் … Read more

மனித உரிமைகள் ஆணையம் எதுவும் தேவையில்லை; தாலிபான் அரசின் புதிய உத்தரவு

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து நிர்வாக அமைப்பில் அதிரடியாக பல மாற்றங்களைச் செய்துள்ள தலிபான்கள், இப்போது மேலும் சில அதிர்ச்சி அளிக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். தற்போது முன்னாள் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஐந்து துறைகளை முற்றிலுமாக கலைக்க முடிவு செய்துள்ளனர். அவர்கள் கலைக்க நினைக்கும் முக்கிய துறைகளில் ஒன்று மனித உரிமை ஆணையம். இது அமெரிக்க ஆதரவு பெற்ற ஆப்கான் அரசாங்கத்தின் முக்கிய அம்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கான் அரசு சுமார் 501 மில்லியன் டாலர் பட்ஜெட் … Read more

வட கொரியா: கொரோனா அச்சத்துக்கு மத்தியில் ஒரே நாளில் 2.7 லட்சம் பேருக்கு காய்ச்சல்

வடகொரியாவில் கொரோனா வைரஸ்: வடகொரியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் 2,69,510 பேரில் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாகவும், 6 பேர் மேலும் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.  இந்த தகவலை அந்நாட்டின் அதிகாரப்பூர்வ ஊடகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இருப்பினும், கோவிட்-19 காரணமாக எத்தனை பேருக்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை வடகொரியா இன்னும் தெளிவுபடுத்தவில்லை. மக்கள் காய்ச்சலின் பிடியில் வேகமாக சிக்கி வருகிறார்கள்  வட கொரியாவின் வைரஸ் எதிர்ப்பு தலைமையகத்தின் கூற்றுப்படி, … Read more

அமெரிக்க மக்களை அச்சுறுத்தும் பொருளாதார மந்தநிலை; காரணம் என்ன

கொரோனா வைரஸ் தொற்றுநோய், பொருளாதார மந்தநிலை போன்றவற்றை சந்தித்து மீண்டு வர அமெரிக்கா முயற்சித்து வரும் நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கா பொருளாதார மந்தநிலை மீண்டும் ஏற்படலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.  அமெரிக்காவிலுள்ள 80% க்கும் அதிகமான வயது வந்தோர் இந்த ஆண்டு அமெரிக்காவில் மீண்டும் பொருளாதார மந்தநிலை ஏற்படலாம் என்று நம்புகிறார்கள். மார்ச் கடைசி வாரத்தில் மொமென்டிவ் நிறுவனம் நடத்திய இந்த கணக்கெடுப்பில், 4000திற்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்தை பதிவு செய்திருந்தனர். … Read more

இங்கையில் ஒரு நாளுக்கான பெட்ரோல் மட்டுமே இருப்பில் உள்ளது: ரணில் விக்கிரமசிங்க

இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, திங்களன்று நாட்டு மக்களிடம் ஆற்றிய உரையில், நாட்டில் ஒரு நாளுக்கான பெட்ரோல் மட்டுமே இருப்பில் உள்ளது என்று கூறினார்.  1,190 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிரப்படும் வரை, அடுத்த மூன்று நாட்களுக்கு வரிசையில் நிற்கவோ அல்லது நிரப்பவோ வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர திங்கட்கிழமை தெரிவித்தார். கொழும்பில், நகரத்தின் மிகவும் பிரபலமான போக்குவரத்து சாதனமான ஆட்டோ ரிக்ஷாக்கள் நீண்ட வரிசையில் எரிபொருளுக்காக … Read more

இனி தொடர்வது எங்கள் மதிப்புக்கு இழுக்கு… McDonald's எடுத்த முக்கிய முடிவு

ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் முடிவில்லாமல் தொடரும் நிலையில், ஃபாஸ்ட்ஃபுட் உணவக சங்கிலியான மெக்டொனால்டு  நிறுவனம் திங்களன்று தனது ரஷ்ய வணிகத்தை விற்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளதாகக் கூறியது. நிறுவனம் ரஷ்யாவில் 850 உணவகங்களைக் கொண்டுள்ளது, இதில் 62,000 பேர் பணியாற்றுகின்றனர். உக்ரைன் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு ரஷ்யாவிலிருந்து வெளியேறும் மற்றொரு பெரிய மேற்கத்திய நிறுவனம் மெக்டொனால்டு. போரினால் ஏற்பட்ட மனிதாபிமான நெருக்கடியை சுட்டிக் காட்டிய  மெக்டொனால்ட் நிறுவனம், ரஷ்யாவில் வணிகம் செய்வது இனி மெக்டொனால்டின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் … Read more