சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உட்பட 39 படையதிகாரிகளுக்கு சர்வதேச தடை

30 ஆண்டு காலமாக நடைபெற்ற உள்நாட்டுப் போர் வெற்றிக்கு பங்களிப்பு வழங்கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உட்பட 39 இராணுவ அதிகாரிகளுக்கு சர்வதேச தடைவிதிக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் கருதது வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். பாதுகாப்பு தரப்பினருக்கு மாத்திரமல்லது எதிர்காலத்தில் ஏனைய துறைகளை சார்ந்த நபர்களுக்கும் இந்த நிலைமையை எதிர்நோக்கும் ஆபத்து இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். … Read more

பிரித்தானியாவில் வேகம் எடுக்கும் புதிய காய்ச்சல்! முதல் மரணம் பதிவானது

இங்கிலாந்தின் கிழக்கு பகுதியில் லஸ்ஸா காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் உறுதி செய்துள்ளன. லஸ்ஸா காய்ச்சலால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி கடுமையான வைரஸ் நோயால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்கு ஆபிரிக்காவின் சில பகுதிகளில் விலங்குகளால் பரவும் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயால் அந்த நபர் உயிரிழந்துள்ளதாக இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் (UKHSA)தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த தொற்றினால் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்து “மிகக் குறைவு” என்று இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. … Read more

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மின்சார மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு – எப்போ சந்தைக்கு வருகிறது?

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக, மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிளொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் சசிரங்க டி சில்வாவினால், இந்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மின்சார மோட்டார்  சுமார் 4 மணிநேரம் மின்சாரத்தில் சார்ஜ் செய்யக்கூடிய வகையில்,120 கிலோமீற்றர் வரை பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிளை 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்தைக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சசிரங்க டி சில்வா தெரிவித்துள்ளார். Source link

தேசிய பல்கலைக்கழகமாக வவுனியா வளாகம் மாற்றம்… “சமூக மாற்றத்தை எதிர்கொள்ளும் புத்திஜீவிகளை கல்வியினூடாக உருவாக்குவதே அரசாங்கத்தின் குறிக்கோள்…”

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த வவுனியா வளாகம், “வவுனியா பல்கலைக்கழகம்” என்ற பெயரில் தேசிய பல்கலைக்கழகமாக அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தலைமையில் இன்று (11) இடம்பெற்றது. இதன்படி, இந்நாட்டின் 17ஆவது அரச பல்கலைக்கழகமாக “வவுனியா பல்கலைக்கழகம்” வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பிரயோக விஞ்ஞான பீடம், வர்த்தக பீடம் மற்றும் ஆங்கில மொழிப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய வவுனியா வளாகம், 1997ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த வவுனியா வளாகத்தை தேசிய பல்கலைக்கழகமாக … Read more

பூஸ்டர் தடுப்பூசிகள் இரத்த உறைவை ஏற்படுத்துமா? விசேட வைத்தியர் வெளியிட்ட தகவல்

பூஸ்டர் டோஸாக வழங்கப்படும் பைசர் தடுப்பூசியால் உலகில் எந்த நாட்டிலும் இரத்த உறைவு ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என தொற்றுநோய் தொடர்பான விசேட வைத்தியநிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் பரவிவரும் பிரசாரம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பைசர் தடுப்பூசி தற்போது உலகளவில் பில்லியன் கணக்கான மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இரத்த உறைவு எதுவும் பதிவாகவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு முன்னர் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு இரத்த … Read more

இராவணன் தொடர்பில் ஆய்வு செய்ய வேண்டும்! – புத்திக பத்திரன கோரிக்கை

இலங்கை மன்னன் இராவணன் தொடர்பாக உறுதியான வரலாற்றுச் சான்றுகள் இல்லாததால் இராவணன் தொடர்பாக முறை சார்ந்த ஆய்வொன்றை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவினால் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த பிரேரணை நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அவர் முன்வைத்துள்ள பிரேரணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘இலங்கை மன்னன் இராவணன் தொடர்பாக உறுதியான வரலாற்றுச் சான்றுகள் இல்லாத … Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள மொழி பாடநெறி:சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

அரசாங்கத்தினால் அரச உத்தியோகத்தர்களின் மொழித்திறன் ஆற்றலை விருத்தி செய்யும் நோக்கில் அரச மொழிகள் திணைக்களத்தினால் மொழிப்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலகங்களில் தமிழ்மொழி மூலம் கடமை புரியும் உத்தியோகத்தர்களின் சிங்கள மொழித்திறன் ஆற்றலை விருத்தி செய்யும் நோக்கில் அரச மொழிகள் திணைக்களத்தினால் சிங்களப்பயிற்சியைப் பூர்த்தி செய்த கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஓட்டமாவடி அந் நூர் மண்டபத்தில் இடம்பெற்றது. மொழித்திணைக்களத்தின் போதனாசிரியர் எம்.எம்.செயினுதீன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், அதிதிகளாக … Read more

ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவிப்பு! (PHOTO)

சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2022.02.11ம் திகதியிடப்பட்ட 2266/55 இலக்க அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்படி, மின்சார விநியோகம், வைத்தியசாலை, முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் இதனுடன் ஒத்ததான நோயாளர் பராமரிப்பு சேவைகள், வரவேற்பு, உபசரிப்பு மற்றும் சிகிச்சை ஆகியவை தொடர்பிலான அனைத்து அவசியமான சேவைகள் … Read more

அனுராதபுரம் சல்காதுவ மைதானத்தில் (09) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தின் முதலாவது கூட்டத்தின்போது கௌரவ பிரதமர் ஆற்றிய முழுமையான உரை

அனுராதபுரம் சல்காதுவ மைதானத்தில் (09) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தின் முதலாவது கூட்டத்தின்போது கௌரவ பிரதமர் ஆற்றிய முழுமையான உரை இன்று அனுராதபுரத்தில் இருந்து புதிய பயணத்தை ஆரம்பிக்கின்றோம். 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் அனுராதபுரத்தில் ஆரம்பிக்கப்பட்டதாக ஞாபகம். போரில் வெற்றி பெற்ற பின்னர் 2010ஆம் ஆண்டு இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை அனுராதபுரத்தில் இருந்து ஆரம்பித்தோம். அதேபோன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களும் அனுராதபுரத்தில் இருந்து தனது ஜனாதிபதி … Read more

பௌத்த பிக்குவாக துறவறம் பூண்ட பொலிவூட்டின் பிரபல நடிகர்!

இந்திய பொலிவூட் திரைப்பட சூப்பர் ஸ்டார் ககன் மலிக் நேற்று (10) பேங்கொக்கில் துறவறம் பூண்டார். இதன்படி அவர் அடுத்த 15 நாட்களை துறவியாக தமது வாழ்க்கையை கழிக்கவுள்ளார். தர்மத்தைக் கற்றுக் கொள்ளவும், இந்தியாவில் மதத்தை வளர்க்கவும் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “தம்மம் கற்க வேண்டிய நேரம். நிலையற்ற தன்மையைப் புரிந்து கொள்ளும் நேரம். அறிவைப் பெறுவதற்கான நேரம் இது என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான அவருக்கு தாய்லாந்து உட்பட பல ஆசிய … Read more