ஜப்பான் பிரதமருடன் ஜனாதிபதி சந்திப்பு

கொழும்பு இலகு ரயில் வேலைத்திட்டத்தை இடைநடுவில் கைவிட்டமைக்காக ஜப்பான் அரசாங்கத்திடம் ஜனாதிபதி கவலை தெரிவிப்பு. சிங்கப்பூர் பிரதி பிரதமர், ஜப்பானின் முன்னாள் பிரதமர்கள், ஜப்பான் நிதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு. ஜப்பான் உதவியுடன் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த இலகு ரயில் வேலைத்திட்டத்தினை இடை நடுவில் கைவிட்டுச் சென்றமைக்காக ஜப்பான் அரசாங்கத்திடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவலை தெரிவித்தார். இரு தரப்பினரதும் இணக்கப்பாடு இல்லாமல் பாரிய திட்டங்களுக்கான இருதரப்பு ஒப்பந்தங்களை இடைநிறுத்துவதை தவிர்ப்பதற்கு அவசியமான … Read more

சைமோல் மன்றத்தின் திட்டங்கள் கிராமிய அபிவிருத்திக்கு முக்கியமானவை – பிரதமர்

சபரகமுவ மாகாணத்தில் இரண்டு முன்னோடித் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியதன் பின்னர், கிராமிய உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்களை பரவலாக விரிவுபடுத்தி வருவதையிட்டு கொரியாவின் சைமோல் மன்றத்திற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்தார். “இந்த முயற்சிகள் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான எமது கிராம மக்களின் பயணத்தை துரிதப்படுத்த உதவியுள்ளன,” என்றும் பிரதமர் தெரிவித்தார். சைமோல் மன்றத்தின் தலைவர் லீ சியுங் ஜாங்(Lee Seung Jong), கியோங் சாங்பக்டோ மாகாண ஆளுநர், கொரியா உதவி நிறுவனத்தின் தலைவரும் … Read more

டெங்கு நோய் பரவுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க பிரதமர் அறிவுறுத்தல்

டெங்கு நோய் பரவுவதைத் தடுப்பதற்கு அனைத்து அதிகாரிகளும் தலையிட்டு துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடுவதற்காக நேற்று (25) அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் தினேஷ் குணவர்தன ஆளுநர்களிடம் தெரிவித்தார். ஆளுனர்கள், மாகாண சபை செயலாளர்கள், உள்ளூராட்சி ஆணையாளர்கள், மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்ட சூம் தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், டெங்கு பரவல் தொடர்பான தகவல்களை சேகரித்து நோயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதன் … Read more

கிளிநொச்சியில் கணிசமானளவு காணிகளை விடுவிக்க தீர்மானம் 

கிளிநொச்சி மாவட்டத்தில் வனவளப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றினால் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த கணிசமான காணிகளை விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்தமையினால் காடுகளாக மாறியிருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் மக்கள் குடியிருப்புக்களும் வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தினாலும் வனஜீவராசிகள் திணைக்களத்தினாலும் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது. இதுதொடர்பாக, துறைசார் அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா … Read more

கடற்பரப்புக்குள் வளங்களை அழிக்கும் எவ்விதமான நடவடிக்களையும் அனுமதிக்கப் போவதில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 

இலங்கை கடற்பரப்புக்குள் வளங்களை அழிக்கும் எவ்விதமான நடவடிக்களையும் அனுமதிக்கப்போவதில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து வருகை தந்து சந்தித்த தமிழ்நாடு அரச சார்பற்ற நிறுவனத்தின் மீன்பிடி முகாமைத்துவ ஆராச்சி நிலையத்தின் இயக்குநர் திரு. விவேகானந்தன் அவர்களுடனான சந்திப்பின்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். மேலும் இச்சந்திப்பின்போது கருத்து தெரிவித்த அமைச்சர் இலங்கை கடற்பரப்புகளில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியையும், கடல் வளங்கள் அழிப்பையும் தடுத்து நிறுத்த பல சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தைகளை நடத்திய போதெல்லாம் தமிழ்நாட்டு … Read more

தேசிய பொருளாதாரத்துக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வழங்கும் பங்களிப்பு தொடர்பில் துறைசார் மேற்பார்வைக்குழுவில் கலந்துரையாடல்

• வரி மேன்முறையீட்டுக்கு விசேட நீதிமன்ற முறைமை அரசாங்கத்துக்கு அறவிடப்பட வேண்டிய சுமார் 950 பில்லியன் ரூபாய் தொகையில் மேன்முறையீடு மற்றும் எதிர்ப்பு இல்லாத சுமார் 270 பில்லியன் ரூபாய் தொகையை அறவிடுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நடவடிக்கை எடுக்காமை குறித்து தேசிய பொருளாதார மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவில் கலந்துரையாடப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே தலைமையில் அண்மையில் (23) இடம்பெற்ற இந்தக் குழுக் கூட்டத்தில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு … Read more

அமரர்.ஆறுமுகன் தொண்டமானின் ஞாபகார்த்த கண்காட்சி

அமரர். ஆறுமுகன் தொண்டமானின் ஜனன மற்றும் சிரார்த்த தினத்தை முன்னிட்டு இ.தொ.காவின் தலைமை காரியாலயமான சௌமியபவனில் அமரர்.ஆறுமுகன் தொண்டமானின் ஞாபகார்த்த கண்காட்சியொன்று நேற்று (25) திறந்து வைக்கப்பட்டது. அமரர்.ஆறுமுகன் தொண்டமானின் ஜனன மற்றும் சிரார்த்த தினத்தை முன்னிட்டு நேற்று (25) முதல் ஒரு வாரக்காலத்துக்கு நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதற்கமைய  நேற்று பிற்பகல் 2.00 மணிக்கு சௌமியபவனில் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. இதனை இராஜலட்சுமி ஆறுமுகன் தொண்டமான் மற்றும் இலங்கைக்கான இந்திய உதவித் தூதுவர் (கண்டி) கலாநிதி எஸ்.ஆதிரா … Read more

கொழும்பில் அமைக்கப்படவுள்ள நினைவுத்தூபி! வெடித்தது சர்ச்சை

படைவீரர்களின் சமாதியில் சிறுநீர் கழிப்பதற்கு நிகரான செயலை அரசாங்கம் மேற்கொள்வதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. கொடிய பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டு எடுத்த படைவீரர்களுடன், பயங்கரவாதிகளையும் நினைவுகூரும் வகையில் கொழும்பில் அமைக்கப்படும் நினைவுத்தூபி குறித்து கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர கருத்து வெளியிட்டுள்ளார். செயற்பாட்டை உடன் நிறுத்த கோரிக்கை ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நினைவுத்தூபியை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ள நிலையில் இந்த … Read more

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மே 26 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது மழை நிலைமை:கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யும். காற்று:நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றானது மணிக்கு (20-30) கிலோமீற்றர் … Read more

வடக்கு கிழக்கில் திட்டமிடப்பட்ட இன அழிப்பு நடைபெறுகிறது: சிறீதரன் (Video)

”வடக்கு கிழக்கில் தமிழர் வாழும் பிரதேசங்களில் அவர்கள் கண்ணுக்கு தெரியாமல் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடைபெற்றுக்கொண்டிருப்பதாக”  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம்(25.05.2023) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், ”போரில் தமிழர்கள் அழிக்கப்பட்டதை விட தற்போது மோசமாக அழிக்கப்பட்டு வருகின்றனர். வடக்கு கிழக்கில் கிட்டத்தட்ட 200 இற்கும் மேற்பட்ட இராணுவ முகாம்கள் நிறுவப்பட்டுள்ளன. அந்த ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றது” என தெரிவித்துள்ளார். மேலும் இது … Read more