சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு ஜனாதிபதி உத்தியோகபூர்வ விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (23) அதிகாலை இலங்கையிலிருந்து புறப்படவுள்ளார். சிங்கப்பூருக்கான தனது ஒரு நாள் விஜயத்தின் போது ஜனாதிபதி, சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே. சண்முகம் மற்றும் அந்நாட்டின் பல உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடல் நடத்தவுள்ளார். மே மாதம் 24 முதல் 27 வரை ஜனாதிபதியின் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவுடன் ( Fumio Kishida) கலந்துரையாடல் நடைபெறவுள்ளதுடன், ஜப்பானுக்கும் … Read more

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த பாடசாலை மாணவிக்கு நேர்ந்த விபரீதம்

இம்முறை கல்விப்பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த பாடசாலை மாணவி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். முந்தலம – புளிச்சங்குளம் குளத்தில் நீராடச்சென்ற இந்த மாணவி நேற்று (22.05.2023) உயிரிழந்துள்ளார். இவர் உடப்புவையில் வசிக்கும் 17 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த மாணவி தனது நண்பிகள் நான்கு பேர் மற்றும் நண்பியின் உறவினர் ஒருவருடன் ஏரியில் நீராடச்சென்ற நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் … Read more

நீதவானை அச்சுறுத்திய மூவர்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

நீர்கொழும்பு பிரதான நீதவானை அச்சுறுத்தி அதனை காணொளியாக பதிவு செய்து, நீதவானுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய நபர்களை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு பெண்கள் மற்றும் ஓர் ஆணுக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நீதவான் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் றாகம பிரதேசத்தில் காணப்படும் தனியார் வைத்தியசாலைக்கு சென்றிருந்த போது குறித்த நபர்கள் குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணை இந்த சம்பவம் தொடர்பில் நீதவான் றாகம … Read more

யாழில் புலம்பெயர் சமூகம் பார்க்க வேண்டிய களங்களை அதிகரிக்க வேண்டும்! தொழிலதிபர் பாஸ்கரன்(Video)

புலம்பெயர்ந்த தேசங்களில் இருந்து வரும் மக்களுக்கு யாழில் ஒரு சில இடங்களே பார்வையிடவுள்ளன என்று தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண தொழில்நுட்ப கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விரிவுரையாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“நல்லூர் கோவில், கசூரினா கடற்கரை, றியோ ஐஸ் கிரீம் கடை மற்றும் யாழ்.கோட்டை என்பன புலம்பெயர் மக்கள் பார்க்க கூடிய இடங்களாக உள்ளன. இவற்றை தவிர, யாழில் பார்ப்பதற்கு பெரிதாக எந்த களங்களும் இல்லை. … Read more

யாழ். பல்கலைக்கழகத்தில் கையாடல்: 20 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மாயம்..!

யாழ்ப்பாண பல்கலைக்கழக பராமரிப்புப் பகுதியின் களஞ்சியத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பொருட்கள் கையாடப்பட்ட விவகார விசாரணைகளில் பல திடீர் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. கையாடப்பட்ட பொருள்களின் பெறுமதி சுமார் மூன்றரை இலட்சம் என சம்பந்தப்பட்ட பகுதியின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் அறிக்கையிட்டிருந்தாலும், அது 20 இலட்சங்களைக் கடந்திருக்கலாம் எனப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்கள் சிலர் சந்தேகம் தெரிவித்துள்ளதாக எமது  எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதனால் முறையான விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்கவேண்டும் என பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். புதிய பேரவை … Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகள் நடமாட்டம் திடீரென அதிகரிப்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பயணிகள் நடமாட்டம் சுமார் 20 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாகவும், விமானப் போக்குவரத்து 7 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை விமான நிலைய மற்றும் விமானப் போக்குவரத்து சேவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. விமானப் போக்குவரத்துக்கள் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் காலாண்டு பகுதியை விடவும் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் விமானப் போக்குவரத்துக்கள் அதிகரித்துள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாளாந்தம் 18,000 பயணிகள், பயணங்களை மேற்கொள்வதாகவும் … Read more

திருகோணமலையில் குடிநீர் விநியோகத்திற்கான குழாய் பொருத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்

திருகோணமலை பகுதியில் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் புல்மோட்டை நிலாவெளி, சம்பல்தீவு மற்றும் ஆனந்தகுளம் ஆகிய பகுதிகளை இணைக்கும் குடிநீர் விநியோகத்திற்கான குடிநீர் குழாய் பொருத்தும் நடவடிக்கை, நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். 67.3 மில்லியனுக்கும் அதிகமான நிதி உதவியின் ஊடாக மேற்கொள்ளப்படும் இத்திட்டம் 28 கிலோ மீற்றர் பரப்பைக் கொண்டது. இந்த திட்டம் நிறைவடைந்தவுடன் 300ற்கும் அதிகமான புதிய குடிநீர் இணைப்புகள் … Read more

திரிபோஷ உற்பத்திக்கு தேவையான சோளத்தின் இறக்குமதி வரி குறைப்பு – அமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிடிய

திரிபோஷ உற்பத்தி நிறுவனத்திற்காக, இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி, குறைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிடிய தெரிவித்துள்ளார். இதன்படி, சோள இறக்குமதியின் போது சுமத்தப்பட்டுள்ள விசேட வர்த்தக வரி கிலோ ஒன்றிற்கு 75ரூபாவிலிருந்து 25 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவிஸ்ஸாவெல தல்துவ பிரதேசத்தில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகத்திற்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்… கடந்த 18ஆம் திகதியிலிருந்து நடைபெறும் … Read more

சீனாவிடம் இருந்து கிடைக்கப் பெற்ற மண்ணெண்ணெய் – நாளை மீனவர்களுக்கு இலவச விநியோகம்

அண்மையில் சீன அரசாங்கத்திடம் இருந்து இலவசமாக கிடைக்கப் பெற்ற மண்ணெண்ணெய், மீனவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு நாளை (23) காலை 8 மணியளவில் பாணந்துறை மீன்படி வளாகத்தில் இடம்பெறவுள்ளளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா, மற்றும் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, இலங்கைக்கான சீனத் தூதுவர் சி ஷென் ஹொன் ஆகியோரின் தலைமையில் இந் நிகழ்வு நடைபெறவுள்ளது. இதன்போது, மண்ணெண்ணெய் எரிபொருளைப் பயன்படுத்தும் 26,000 படகுகளுக்கு 150 லீற்றர் மண்ணெண்ணெய் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.    

நாளை (23) நள்ளிரவு முதல் சாதாரண தரப் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புக்கள் நடத்த தடை

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே மாதம் 29ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 08ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 3568 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. குறித்த பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நாளை (23.05.2023) நள்ளிரவு முதல் நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளது. மேலும், எதிர்பார்ப்பு வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல், அவற்றை விநியோகித்தல், பதாகைகள், … Read more