மின்கலத்தில் இயங்கும் படகு இயந்திரங்களை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ்!

மில்ரன் மோட்டர்ஸ் எனப்படும் தனியார் தொழில் முயற்சியாளர்களினால் வடிவமைக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட மின்கலத்தில் இயங்கும் படகு இயந்திரங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார். கடற்றொழிலாளர்களுக்கு மீன்பிடிச் செலவை குறைக்கும் வழிவகைகள் தொடர்பாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உந்துதலுடன் தனியார் முதலீட்டாளர்களின் குறித்த மின்கல இயந்திரம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதனை பாணந்துறை பகுதியில் பரீட்சித்துப் பார்த்த கடற்றொழில் அமைச்சர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய மேம்படுத்தப்பட்டுள்ள படகு இயந்திரங்களை கடற்றொழில் அமைச்சர் நேற்று (19) பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. … Read more

நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டுச் செல்லும் பணி துரிதப்படுத்தப்படும்

ஒரு மாதத்திற்குள் அறிக்கையொன்றை சமர்பிக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை. டிஜிட்டல் மற்றும் பசுமை பொருளாதாரம் ஆகியவற்றை ஒன்றாக மேம்படுத்துவதற்கு இளைஞர்களின் பரிந்துரைகளை எதிர்பார்க்கிறோம்.நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டுச் செல்லும் பணியை துரிதப்படுத்துவது தொடர்பிலான அறிக்கையொன்றை ஒரு மாதத்திற்குள் சமர்பிக்குமாறு துறைசார் இராஜாங்க அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். கொழும்பு 08, எல்விட்டிகல மாவத்தையில் நிறுவப்பட்டுள்ள டராஸ் தலைமையகத்தை திறத்து வைக்கும் நிகழ்வில் (18) உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். உள்நாட்டு … Read more

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகா…!

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தாம் வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக முன்னாள் இராணுவ தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியினருடனான கலந்துரையாடலின் பின்னர் இது தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலே சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதித் தேர்தல் இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக தம்மை போட்டியிடுமாறு பலர் கோரியுள்ளனர். அதனடிப்படையில் தேவை ஏற்பட்டால் மற்றும் வாய்ப்பு … Read more

இலங்கை வங்கியின் 2022 ஆண்டறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கை வங்கியின் 2022 ஆண்டிற்கான ஆண்டறிக்கை இலங்கை வங்கியின் தலைவர் சட்டத்தரணி ரொனால்ட் சீ பெரேராவினால் நேற்று (18) நிதி அமைச்சில் வைத்து பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. இலங்கை வங்கியின் www.boc.lk மற்றும் பங்குச் சந்தையின் www.cse.lk இணையத்தளங்கள் ஊடாக 2022 ஆண்டிற்கான ஆண்டறிக்கையை பார்வையிடலாம். பொதுமக்கள் மற்றும் வியாபாரத்துறையினர் தெரிந்துகொள்வதற்காக மேற்படி அறிக்கை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்போது, இலங்கை வங்கியின் நிறைவேற்று அதிகாரி … Read more

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

எவ்விதமான முன் அறிவிப்பும் இன்றி ஒருநாள் சேவைப் பணிபுறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.  நேற்று (18.05.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் அதிகளவு புகை வெளியேற்றம் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் இருந்து, அதிகளவு புகை வெளியேறுவது தொடர்பில், மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இந்த சோதனை நடவடிக்கைகள், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு நடவடிக்கை … Read more

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதோடு பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்க முடியும் என ஜனாதிபதி தெரிவிப்பு

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கோரும் நிதிச் சலுகைகள் உள்ளிட்ட வரப்பிரசாதங்கள் குறித்து அரசாங்கம் பரிசீலிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (18) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். சகல பல்கலைக்கழகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி கல்விசார் ஊழியர் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டதுடன், தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு முகங்கொடுத்து, பல்கலைக்கழகக் … Read more

ஜூன் மாதம் 15ஆம் திகதி 7800 கல்வியற் கல்லூரி ஆசிரியர்களுக்கு நியமனம்

ஜூன் மாதம் 15ஆம் திகதி 7800 கல்வியற் கல்லூரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கி, தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அத்துடன், அடுத்த வருடம், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் இரண்டையும் ஒரே வருடத்தில் நடத்தும் வகையில் பரீட்சை அட்டவணை புதுப்பிக்கப்படும். மேலும், எதிர்காலத்தில் விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பம் போன்ற அதிக ஆசிரியர் பற்றாக்குறை உள்ள … Read more

சிங்கப்பூரில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை பெண்! விசாரணையில் வெளியான தகவல்

சிங்கப்பூரில் வீட்டுப்பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த இலங்கை பெண் ஒருவர் அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். தங்கொடுவ – மொட்டேமுல்ல பகுதியைச் சேர்ந்த 41 வயதான நதிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற திருமணமான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் சிங்கப்பூருக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற நிலையில், அவர் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளர்களிடம் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வெளியான காணொளி இது குறித்து உயிரிழந்த பெண் உரிய தரப்பினரிடம் முறைப்பாடு செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் … Read more

பாராளுமன்றத்தை பார்வையிட வடக்கில் இருந்து 700 மாணவர்கள் வருகை

யாழ்ப்பாணத்தில் உள்ள பல பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் அண்மையில் (மே 12) பாராளுமன்றத்தை பார்வையிட வருகை தந்திருந்தனர். மாணவர்கள் பாராளுமன்றத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கான ஏற்பாடுகளை பாராளுமன்றத்தின் பொதுமக்கள் சேவை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். பாராளுமன்றத்தின் கலரியிலிருந்து சபா மண்டபத்தில் நடைபெறும் செற்பாடுகளைப் பார்வையிட மாணவர்களுக்கு வாய்ப்புப் கிடைத்ததுடுன், பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்புறமாக குழுப் புகைப்படத்தையும் எடுத்துக்கொண்டனர். இதன்போது பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ அங்கஜன் இராமநாதன், முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான … Read more

பாராளுமன்றம் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை…

ஓய்வுபெறும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க மீதான பாராட்டுப் பிரேரணை மே 25ஆம் திகதி முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கேல் பெரேரா தொடர்பான அனுதாபப் பிரேரணைக்கு 26ஆம் திகதி ஒதுக்கப்பட்டுள்ளது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை நீக்குவதற்கான பிரேரணை மே 24ஆம் திகதி விவாதத்துக்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் (மே 11) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டன. … Read more