மின்கலத்தில் இயங்கும் படகு இயந்திரங்களை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ்!
மில்ரன் மோட்டர்ஸ் எனப்படும் தனியார் தொழில் முயற்சியாளர்களினால் வடிவமைக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட மின்கலத்தில் இயங்கும் படகு இயந்திரங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார். கடற்றொழிலாளர்களுக்கு மீன்பிடிச் செலவை குறைக்கும் வழிவகைகள் தொடர்பாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உந்துதலுடன் தனியார் முதலீட்டாளர்களின் குறித்த மின்கல இயந்திரம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதனை பாணந்துறை பகுதியில் பரீட்சித்துப் பார்த்த கடற்றொழில் அமைச்சர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய மேம்படுத்தப்பட்டுள்ள படகு இயந்திரங்களை கடற்றொழில் அமைச்சர் நேற்று (19) பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. … Read more