கனடாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கல்வி, திறன் விருத்தி மற்றும் விவசாயத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க நடவடிக்கை
கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ், பிரதமர் தினேஷ் குணவர்தனவை நேற்று முன்தினம் (17) கொழும்பு அலரி மாளிகையில் சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகள் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் திறமையான தொழில்நுட்ப வல்லுனர்களை உருவாக்குவதற்காக அம்பாறையில் ஹார்டி உயர் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவுவதற்கும் பயணிகள் போக்குவரத்து ரயில்களை அபிவிருத்தி செய்வதற்கும் கடந்த காலத்திலிருந்து கனடா இலங்கைக்கு அளித்து வரும் உதவிகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். ஹார்டி நிறுவனத்தை பட்டம் வழங்கும் … Read more