தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் பேணப்பட்ட பௌத்த சின்னங்கள்(Video)

தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் காலத்திலும் பௌத்த சின்னங்கள் பேணப்பட்டன என்று சிவகுரு ஆதின முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“வடக்கு-கிழக்கில் இப்போது ஆக்கிரமிப்பு செய்யப்படும் பகுதிகளில் பௌத்தர்கள் இல்லை. இலங்கை அரசாங்கத்தின் இயந்திரங்களாகிய சிங்கள இராணுவத்தினர்,சிங்கள பொலிஸார் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் உட்பட பல அதிகாரிகள் அங்கிருந்து வழிபடுவதற்காக பௌத்த கட்டுமானங்கள் உருவாக்கபடுகின்றதே … Read more

புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கான அரசாங்க வீடமைப்புத் திட்டங்கள்

அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் தமது சொந்த காணியில் வீடு கட்டவும் வசதிகள் வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களின் வீட்டுக்கனவை நனவாக்கும் வகையில் அவர்களுக்கான வீடமைப்புத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணாயக்கார தற்போது மேற்கொண்டுள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து இந்த வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் தேவைக்கு ஏற்ப, நகர்ப்புற … Read more

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை

2009இல் முடிவடைந்த நாட்டின் கொடூரமான உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில், மே 18 அன்று இலங்கையில் உள்ள தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் அனுஷ்டிக்கப்டவுள்ளது. இந் நிலையில், சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ‘தாக்குதலற்ற வலயங்கள்’ என்ற இடங்களை அறிவித்து பொதுமக்கள் அங்குச் சென்ற பின்னர் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். அத்துடன், விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பின்னர், அரசாங்கப் பாதுகாப்புப் படையினரிடம் பிடிபட்ட ஏராளமான … Read more

நாடு பூராவும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் தொடர்ந்து முன்னனெடுப்பு

டெங்கு ஒழிப்பு செயலணியுடன் இணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, சுகாதார அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி, தற்போது டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் விரிவான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் 2023 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியை ஒப்பிடும்போது, தற்போது சுமார் 2000 டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் நளின் … Read more

மத போதகர் ஜெரோமிற்கு எதிராக CIDக்கு சென்ற ஞானசார தேரர்

மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு வலியுறுத்தியுள்ளது. குறித்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார். இந்த போதகரின் செயற்பாடுகளால் நாட்டின் மத நல்லிணக்கம் இழக்கப்படும் எனவும் புத்தரை அவமதித்துள்ளதாகவும் அவர் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளார். கிறிஸ்துவ அடிப்படைவாத கும்பல் மிக வேகமாக மதமாற்றத்தை பரப்பி வருவதாகவும், அந்த சதியில் இந்த மத போதகரும் ஒரு … Read more

கோர விபத்தில் ஸ்தலத்தில் பலியான பாடசாலை மாணவன்

அனுராதபுரத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகி உள்ளார். இப்பலோகம, மஹஇலுப்பள்ளம பகுதியில் காரும் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெக்கிரவ நடுநிலைப் பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் புஸ்பிக கசுந்த சமரதுங்க என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். தகவல் தொழிநுட்ப பாடம் தொடர்பான பயிற்சி வகுப்பை முடித்து விட்டு சைக்கிளில் வீடு திரும்பும் … Read more

நீடிக்கும் கடுமையான வெப்பம்! இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று(17.05.2023) கடுமையான வெப்பம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று இவ்வாறு வெப்பம் அதிகரித்து காணப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிகரிக்கும் வெப்பம் வளிமண்டலவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி, வெப்ப சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் சிலவற்றிலும்,  ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள இடங்களிலும்  “கவனம்” செலுத்தப்பட வேண்டிய  மட்டத்தில் … Read more

3ஆம் வகை (TYPE 3) ஆரம்பக் கல்வி பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக அரிசி

மலையக பகுதிகளில் உள்ள 3ஆம் வகை (TYPE 3) ஆரம்பக் கல்வி பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக அரிசி வழங்குவதற்கான திட்டத்தை முன்னெடுப்பதற்காக 1000 மெட்ரிக் தொன் அரிசி வழங்கப்பட்டுள்ளது. தாய்வான் நாட்டின் வெளிவிவகார அமைச்சின் இந்திய தூதரக பணிப்பாளர் நாயகத்தின் ஊடாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நேற்று (15) உத்தியோகபூர்வமாக பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபைக்கு இவ்வரிசி கையளிக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை … Read more

அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பததற்கும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அரசாங்கம் என்ற வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது

அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகளின் பிரிவு 14 இன் படி, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் தான் விரும்பிய இடத்தில் நடமாடுவதற்கும், அவர் விரும்பும் இடத்தில் வாழ்வதற்குமான உரிமை உண்டு. இந்த உரிமையைத் தடுக்கும் வகையில் எத்தரப்பினரேனும் செயற்படுமிடத்து, அதனைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, பாதுகாப்புப் பிரிவிற்கும், ஏனைய பிரிவினருக்கும் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார் என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று … Read more

25,000 மெற்றிக்தொன் யூரியா உரம் இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

25,000 மெற்றிக்தொன் யூரியா உரம் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளமை தொடர்பாக விவசாய அமைச்சர் அவர்களினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைக்கு அமைச்சரவை நேற்று (15) அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (16) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார். இதுதொடர்பான அமைச்சரவை முடிவு வருமாறு :