சந்நிதி ஆலய சூழலில் தேவாலயம் அனுமதி வழங்கவில்லை: முன்னாள் தவிசாளர் மறுப்பு!

சந்நிதி ஆலயத்திற்கு அருகில் தேவாலயம் அமைப்பதற்கு நான் அனுமதி வழங்கியதாக வெளியாகிய செய்திகளில் உண்மை கிடையாது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.  முறைப்படியாக வீடு ஒன்றிற்கே அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அவ் அனுமதியின் பிரகாரம் அமைக்கும் வீட்டைத் தேவாலயமாக மாற்றினால் உரிய சட்ட நடவடிக்கையினை பிரதேச சபை ஊடாக மேற்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  இதுபற்றி முழுமையான விபரம் வருமாறு, அச்சுவேலி ஊடாக சந்நிதி செல்லும் வீதியில் பிரதேச … Read more

“வசத் சிரிய – 2023” புத்தாண்டு போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் குவிகின்றன

வசத் சிரிய – 2023 புத்தாண்டு அழகிக்கு தங்கப் பரிசுடன் பணப்பரிசு. புத்தாண்டு அழகனுக்கு 150,000 பணப்பரிசுடன் பெறுமதியான பரிசுகள்.மரதன் ஓட்டப் (ஆண்கள்) போட்டியின் முதலிடத்திற்கு 75,000 ரூபா பரிசு, பெண்கள் பிரிவில் முதலிடத்திற்கு 50,000 ரூபா பரிசு.ஸ்டேண்டட் சைக்கிளோட்டம் (ஆண்கள்) பிரிவின் முதலிடத்திற்கு 100,000 ரூபா பெண்கள் பிரிவின் முதலிடத்திற்கு 50,000 ரூபா.கொழும்பு சங்கிரீலா திடலில் ஏப்ரல் 22 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ‘வசத் சிரிய – 2023’ தமிழ் – சிங்கள புத்தாண்டு போட்டி … Read more

இஸ்ரேலில் இலங்கையருக்கு செவிலியர் வேலை வாய்ப்புக்கள்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் இஸ்ரேலின் சனத்தொகை மற்றும் குடிவரவு அதிகார சபைக்கு இடையில் 2020ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் செவிலியர் வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அதன்படி, செவிலியர் தொழில் வாய்ப்புக்கள் கிடைத்த, 15 பேர் அடங்கிய 51வது குழுவிற்கு விமான டிக்கெட்டுக்கள் வழங்கும் நிகழ்வு (20.04.2023) தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நடைபெற்றது. இந்த குழுவில் 14 பெண்களும் ஒரு ஆணும் உள்ளனர், … Read more

இன்று பல மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்க கூடும்

இன்று (21) பல மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்க கூடும் எனவே மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. மேல், வடமேற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும், 39 முதல் 45 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் நாளைய தினம் சாதாரண … Read more

கடலட்டை பண்ணைகளை செழுமை படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

யாழ். மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகளை செழுமை படுத்துவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கடற்றொழில் அமைச்சின் யாழ் அலுவலகத்தில் நேற்று (20) கலந்துரையாடியுள்ளார். குறிப்பாக யாழ்ப்பாணம், மண்கும்பான் பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்ற கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தினை சிறப்பாக செயற்படுத்துவதற்கான நடைமுறைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார். இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் கடலட்டை பண்ணைகளை ஒழுங்கமைத்தல் மற்றும் பிரதேச கடற்றொழிலாளர்களின் கோரிக்கைக்கு அமைய, சாத்தியமான பிரதேசங்களில் கடலட்டை பண்ணைகள் … Read more

06ஆம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் ஒன்லைன் ஊடாக கோரப்பட்டுள்ளன

2022ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த ஆண்டு ஆறாம் வகுப்பில் பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் ஒன்லைன் மூலமாக கோரப்பட்டுள்ளன என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 20ஆம் திகதி மதியம் 12 மணி முதல் மே மாதம் 08ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை அதற்கான காலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. g6application.moe.gov.lk/#/ என்ற இணையதளம் ஊடாக ஒன்லைன் மூலமான மேன்முறையீட்டு விண்ணப்பங்களை … Read more

எம்பிலிப்பிட்டிய உட்பட நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளுக்கு விசேட மயக்க மருந்து நிபுணர்கள்

எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலை உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள பல வைத்தியசாலைகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 08 மயக்க மருந்து நிபுணர்களை சுகாதார அமைச்சு நியமித்துள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் ஆலோசனைக்கு அமைய இந்த வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலை, உடுகம ஆதார வைத்தியசாலை, கம்புறுப்பிட்டிய ஆதார வைத்தியசாலை, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை, திக் ஓயா பொது வைத்தியசாலை மற்றும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை ஆகியவற்றிற்கு … Read more

எந்தவொரு குடிமகனும் சிங்கள அல்லது தமிழ் மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் சேவைகளை கோர முடியும்.

எந்தவொரு குடிமகனும் சிங்கள அல்லது தமிழ் மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் இருந்து சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்று பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் அனுராதா விஜேகோன் தெரிவித்துள்ளார். சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் அரசியலமைப்பில் அரச கரும மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன, மேலும் ஒரு குடிமகன் இந்த நாட்டில் உள்ள அரசாங்க நிறுவனத்தில் சேவையைப் பெறும்போது, அவர் அல்லது அவள் தனக்கு தேவையான சேவைகளைப் பெற்றுக் … Read more

பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஏப்ரல் 20ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஏப்ரல் 20ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் … Read more

“வசத் சிரிய 2023” விண்ணப்பங்கள் 21 வெள்ளிக்கிழமை மதியம் 12.00 வரையில் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி செயலகம் மற்றும் அமைச்சுகள் இணைந்து ஏற்பாடு செய்யும் “வசத் சிரிய 2023” போட்டி நிகழ்ச்சிகளுக்கான விண்ணப்பங்கள் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மதியம் 12.00 மணி வரையில் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “வசத் சிரிய 2023” போட்டி நிகழ்ச்சிகள் ஏப்ரல் 22 சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் கொழும்பு ஷங்கிரீலா … Read more