பஸ் கட்டணங்கள் 12.9ம% ஆல் குறைப்பு

எரிபொருள் விலை குறைந்துள்ளதன் பயனை 24 மணித்தியாலங்களுக்குள் மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம் 430 ரூபாவாக இருந்த டீசல் லீற்றர் ஒன்றின் விலை 325 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பஸ் கட்டணம் 12.9 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பதில் அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (29) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். பொருட்களின் விலை … Read more

2048 ஆம் ஆண்டாகும் போது நாட்டைப் பொறுப்பேற்கும் வகையில் நவீன தொழில்நுட்ப அறிவை நம் நாட்டு மாணவர் சந்ததி பெற வேண்டும் – ஜனாதிபதி

நாட்டின் மாணவர்கள் 2048 ஆம் ஆண்டளவில் நாட்டைப் பொறுப்பேற்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தின் அனைத்து அம்சங்களிலும் அறிவை பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்றும், தொழில்நுட்பத்தின் நவீன முன்னேற்றங்களை மேம்படுத்துவதன் மூலம் எதிர்காலத்திற்கு தயாராக வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் நான்கு வருடங்களில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய பின்னர், அதே பழைய முறையைப் பின்பற்றுவதா அல்லது புதிய முறையின் ஊடாக முன்னேறி வரும் உலகத்துடன் முன்னோக்கிச் செல்வதா என்பதை தீர்மானிக்க … Read more

அர்ஜூன ரணதுங்கவை பதவி விலகுமாறு கோரிக்கை

தேசிய விளையாட்டுச் சபையின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுமாறு அர்ஜுன ரணதுங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சரின் சிரேஸ்ட ஆலோசகர் சுதத் சந்திரசேகரவினால் எழுத்து மூலம் கோரப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பங்கேற்காத உறுப்பினர்கள் நேற்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு சூம் தொழிநுட்பம் ஊடாக நடைபெறவிருந்த சபையின் கூட்டத்திற்கு, அதன் உறுப்பினர்கள் எவரும் பங்கேற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சபையின் உறுப்பினர்கள் அர்ஜுனவின் தலைமைப் பொறுப்பினை ஏற்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  Source link

ஓரிரு வருடங்களில் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து நாடு மீண்டெழும் – கடற்றொழில் அமைச்சர்

ஓரிரு வருடங்களில் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து நாடு மீண்டெழும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாட்டை மீட்டெடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்கள் வெற்றியடைந்து வருவதாகவும் தெரிவித்தார். சகலருக்கும் சமமான கல்வி எனும் சிந்தனைக்கு அமைவாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு முழுவதிலும் மேற்கொண்டு வரும் மாணவர்களுக்கான இலவச பாடநூல்கள், சீருடைகள் வழங்கும் தேசிய நிகழ்வு நேற்று (29) முழங்காவில் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற போதே அமைச்சர் … Read more

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

கிரிப்டோகரன்சியின் பயன்பாடு மற்றும் அதில் முதலீடு செய்வதன் அபாயம் குறித்து கவனமாக இருக்குமாறு மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி மீண்டும் வலியுறுத்துகிறது. கிரிப்டோகரன்சியின் பயன்பாடு சில தரப்பினரால் இலாபகரமான முதலீடாக விளம்பரப்படுத்தப்படுகிறது, மேலும் இதுபோன்ற முதலீடுகளால் மக்கள் பெரும் நிதி இழப்பை சந்தித்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. நிதி மோசடிகள் விரைவான வளர்ச்சியைக் காட்டுவதால், தங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மேலும், Crypto நாணயம் தொடர்பான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எந்தவொரு நபருக்கும் … Read more

மன்னர் மூன்றாம் சார்லஸின் முதலாவது அரசுமுறைப் பயணம்

பிரிட்டன் மன்னர் 3ஆம் சார்லஸ் தனது முதல் வெளிநாட்டு பயணமாக ஜெர்மன் சென்றுள்ளார். மன்னராக அறிவிக்கப்பட்ட பின்னர் 3ஆம் சார்லஸ் தனது முதல் அரசு முறைப் பயணமாக பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் ஆகிய நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் தற்போது ஒய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுதும் வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன.    பயண விபரங்கள் இதனால் கடந்த 26 ஆம் திகதி மன்னர் சார்லஸின் பிரான்ஸ் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை … Read more

150 ஏக்கர் பரப்பளவில் கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் புலம் பெயர் தமிழரின் புதிய முயற்சி (Video)

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது றீ(ச்)ஷா பண்ணை. இயற்றை எழில் மிகுந்த தோற்றங்களையும், சூழலையும் அதனோடிணைந்த பண்ணையின் செயற்பாடுகளையும் நகர வாழ் மக்கள் அனுபவிக்கும் வகையிலான ஒரு வித்தியாசமான சுற்றுலா மையம்தான் இந்த றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை [Reecha Organic . இதேவேளை இங்கு பல விதமான காய்கறிகளும் பயிரடப்பட்டுள்ள நிலையில், எமது நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு தரமான காய்கறிகளை ஏற்றுமதி செய்யும் மாபெரும் எதிர்கால நோக்கத்தையும் … Read more

நேட்டோவில் இணைந்தால்…!இரு ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும் என ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் நேட்டோவில் இணைந்தால்,தங்களின் இலக்காக மாறும் என்றே குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் எச்சரிக்கை ரஷ்ய தூதர் விக்டர் டாடரின்ட்சேவ் இந்த இரு நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,“இது எப்படியாவது ஐரோப்பாவின் பாதுகாப்பை மேம்படுத்தும் என்று எவருக்கும் தோன்றினால் விரோதமான முகாமின் புதிய உறுப்பினர்கள் இராணுவ இயல்பு உட்பட ரஷ்ய பதிலடி … Read more

பேரின்பத்தை பெறப் போகும் இரு ராசிக்காரர்கள்! அதிலும் மகர ராசிக்காரர்களுக்கு – நாளைய ராசிப்பலன்

அடுத்த மாதம் நடைபெறவுள்ள குரு பெயர்ச்சி பெரும்பாலும் தீய பலன் தருவதில்லை என்றாலும், சில அமைப்புகளால் குருவால் சுப பலன்களை கொடுக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, சில ராசிக்காரர்கள் இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இவ்வாறு இருக்கையில் நாளைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு எவ்வாறான பலன்கள் கிடைக்கபோகின்றது என்று பார்க்கலாம். உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW  மேஷம் ரிஷபம் மிதுனம் … Read more

பயணிகள் பேருந்தில் குண்டு வைத்து கொலை முயற்சி! குற்றவாளிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

பேருந்தில் குண்டு வைத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குற்றவாளியான நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் கடூழிய சிறைத் தண்டனையுடன் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.  குறித்த வழக்கு இன்று (29.3.23) நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  2008 ஆம் ஆண்டு கொழும்பு ஹோர்டன் சுற்றுவட்டத்தில் பயணிகள் பேருந்தில் வெடிகுண்டு வைத்து கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் நாகலிங்கம் மதனசேகரன் வயது (27) என்ற பிரதிவாதிக்கு கடூழிய தண்டனையுடன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிடியாணை உத்தரவு  … Read more