அரசு முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு எதிர்க்கட்சியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு எதிர்கட்சியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரணம் தொடர்பா இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதேவேளை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் கிடைக்காது, எரிபொருள் பிரச்சினை தீராது, மின்சாரப் பிரச்சினை தீராது என்றெல்லாம் எதிரணிகள் … Read more

பண்டிகை காலத்தில் வீதி ஓரங்களில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி  

பண்டிகைக் காலத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதி ஓரங்களில் பொருட்களை விற்பனை செய்வதற்காக தற்காலிக அனுமதி வழங்குவதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அனுமதி வழங்கியுள்ளார்.  காலியில் இடம்பெற்ற புதிய பேருந்துகளை கையளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாட்டின் கிராமப்புற வீதிகளில் பொது போக்குவரத்தை வலுப்படுத்த 500 … Read more

இலங்கை – நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி

சுற்றுலா இலங்கை அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஒக்லாந்தில் இன்று (25) நடைபெறுகிறது. நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் தொடரில் இலங்கை அணி தோல்வியடைந்து, உலக டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில், இன்று (25) ஒக்லாந்து மைதானத்தில் காலை 6.30 மணிக்கு முதலாவது ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது. அணி வீரர்கள் விபரம் : … Read more

தொலைபேசி அழைப்பால் உயிரிழந்த பாடசாலை மாணவன்

கண்டி முல்கம்பொல மேம்பாலத்திற்கு அருகில் ரயிலில் மோதி 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலில் மாணவர் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்டியில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விசாரணையில் மாணவன் தனது கைப்பேசியில் பேசிக் கொண்டு பாதசாரிகள் பயணிக்கும் மேம்பாலத்தில் பயணிக்காமல் ரயில் தண்டவாளம் ஊடாக பயணிக்கும் போது ரயிலில் மோதுண்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது. சடலம் … Read more

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் பணத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை பெற்றுள்ள முதல் கடன் தவணையின் ஒரு பகுதி மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் என திறைசேரி தெரிவித்துள்ளதாக  அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். “அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், கொடுப்பனவுகள் மற்றும் இதர அன்றாட செலவுகளை பராமரிப்பதற்கு 196 பில்லியன் ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்படும் … Read more

நான் திருடவில்லை! முன்னாள் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தீர்ப்பு தொடர்பான நட்டஈட்டை வழங்க இன்னும் மூன்று மாதங்களே உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.  தற்போது நண்பர்களிடமிருந்து இயன்றளவு பணம் வசூலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.  இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,  100 மில்லியன் ‘எனது ஆட்சிக் காலத்தில், நான் உலகின் நம்பிக்கையை வென்று ஜனநாயகத்தை நிலைநாட்டி, இதை ஒரு நல்ல நாடாக மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, … Read more

ரஷ்யா மீது இஸ்ரேல் மேற்கொண்ட அதிரடித் தாக்குதல் (Video)

இஸ்ரேலுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே யுத்தமா, அப்படி நடப்பதற்கு வாய்ப்பேயில்லையென எண்ணுபவர்கள் நம்மில் பலர் இருக்கவே செய்கின்றனர்.  ஆனால், இஸ்ரேலுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் சூழல் விரைவில் இடம்பெற்றே ஆகும் என்று இன்றைக்கும் உறுதியாக நம்புகின்றார்கள் பல இராணுவ ஆய்வாளர்கள். காரணம் ரஷ்யா இஸ்ரேலின் வடகிழக்கு எல்லையில் உள்ள சிரியாவில் தமது 63000 படைவீரர்களை நிலைநிறுத்தி வைத்துள்ளது. இஸ்ரேல் அடிக்கடி தாக்குதல் நடத்துகின்ற சிரிய அரசுக்கு ஆதரவாக தமது படைவீரர்களை நிலைநிறுத்தி வைத்துள்ளது ரஷ்யா.  இந்நிலையில், ரஷ்யாவின் யுத்த … Read more

இலங்கையில் ஜேர்மன் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

காலி – ஹபராதுவ பிரதேசத்தில் உடற்பிடிப்பு நிலையமொன்றுக்கு சென்ற ஜேர்மனிய பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 65  வயதுடைய ஜேர்மனிய சுற்றுலாப் பயணிக்கே பாலியல் தொந்தரவேற்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில் காலி – இமதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கைது இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (26.03.2023) காலி நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை … Read more

எரிசக்தி ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் இந்திய உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்துரையாடல்

எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பதற்காக கூட்டாக அடையாளம் காணப்பட்ட முன்னுரிமைப் பகுதிகளின் முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இந்திய உயர்மட்டக் குழு ஒன்று சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது.  இக் கலந்துரைாயடல் நேற்று (25.03.2023) நடைபெற்றுள்ளது.  இதனையடுத்து இது தொடர்பில் முன்முயற்சிகளை விரைவாக நடைமுறைப்படுத்துவது குறித்து ரணில் விக்ரமசிங்க ஆலோசனைகளை வழங்கியதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. சூரிய சக்தியில் இயங்கும் 500 உட்புற சமையல் அமைப்புகள்  இதேவேளை சூரிய சக்தியில் இயங்கும் 500 உட்புற சமையல் … Read more

தேர்தல் ஆணைக்குழு பிரதமருக்கு எழுதியுள்ள எழுத்து மூல கோரிக்கை

 தேசிய தேர்தல் ஆணைக்குழு, பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் எழுத்து மூல கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்துவது குறித்து இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கை இந்த தேர்தல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த நேரத்தை ஒதுக்கித் தருமாறு தேர்தல் ஆணைக்குழு, பிரதமரிடம் கோரியுள்ளது. எழுத்து மூலம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத் தாக்கல் செய்த அரசாங்க ஊழியர்களுக்கான … Read more