கொமாண்டோ படையணியின் 350 சிப்பாய்கள் தேசத்தின் பணிக்காக

இராணுவத்தின் கொமாண்டோ படையணியில் நடைபெற்ற ஒரு விழாவின் போது அவர்களின் புதிய 265 ‘கபில தொப்பிகள்’ மற்றும் 85 ‘நீண்ட இலக்கு ரோந்து ‘ வீரர்களின் விடுகை அணிவகுப்பு புதன்கிழமை (மார்ச் 15) குடாஓயா கொமாண்டோ படையணி பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்றது. கொமாண்டோ படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பீஜிபீஎஸ் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்களின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந்த … Read more

2026 ஆம் ஆண்டு – பிஃபா உலகக் கிண்ண போட்டிகள்

2026 பிஃபா உலகக் கிண்ணத்தில் மொத்த போட்டிகளின் எண்ணிக்கை 64இல் இருந்து 104ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா நாடுகள் இணைந்து நடத்தும் போட்டியில் பங்கேற்கவுள்ள அணிகளின் எண்ணிக்கை 32 இல் இருந்து 48ஆக அதிகரிக்கப்பட்டிருக்கும் நிலையில் நான்கு அணிகளைக் கொண்ட 12 குழுக்களில் ஆரம்ப சுற்றுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதில் புதிதாக 32 அணிகள் கொண்ட சுற்று ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஒவ்வொரு குழுவிலும் முதல் இரு இடங்களை … Read more

மலாவி நாட்டில் பிரெட்டி சூறாவளி புயல், உயிரிந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்

கிழக்கு ஆப்பிரிக்காவின் மலாவி நாட்டில் பிரெட்டி என்ற பருவகால சூறாவளி புயல் தாக்கியதால், தெற்கு பகுதியில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மலாவியின் ‘தெற்கு மலாவியில் பெரு வெள்ளம் ஏற்படும். சூறாவளி புயலால் நேற்று பரவலாக பாதிப்பு ஏற்பட்டது’ என்று அந்நாட்டின் இயற்கை வளங்கள் மற்றும் பருவகால மாற்றங்களுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவை சூறையாடிய பருவகால சூறாவளியால்  உயிரிந்தோரின்  எண்ணிக்கை 326-ஐ தாண்டியுள்ளதாகவும், நூற்றுக் கணக்கானவர்களைக் காணவில்லை என்றும், தெற்கு மலாவியில் நிலைமை மோசமடைந்து உள்ளதாகவும், பல … Read more

உளுந்து உற்பத்தி: வவுனியா விவசாயத் திணைக்களத்தால் விசேட வேலைத்திட்டம்

வவுனியாவில் விதை உளுந்து சேகரிப்புத் திட்டத்தின் கீழ் 125,000 கிலோ உளுந்து விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டு விவசாய திணைக்களத்தினால் சுத்தப்படுத்தப்பட்டு விதைப்புக்கு ஏற்ற விதைகளாக விற்பனை செய்யப்பட்டுவருவதாக வவுனியா விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் த.யோகேஸ்வரன்  (17) தெரிவித்துள்ளார். சந்தையில் உளுந்திற்கு அதிக கேள்வி காணப்படுகின்றது. இதுவரை விவசாயத் திணைக்களத்தின் விதை மற்றும் நடுகைப் பொருட்கள் அபிவிருத்தி நிலையத்தினால் வவுனியா மாவட்ட விவசாயிகளிடமிருந்து 125,000 கிலோ உளுந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இருந்து தலா 900 ரூபாய்க்கு கொள்முதல் … Read more

இராணுவத்தின் விவசாயம் மற்றும் கால்நடை பணிப்பகத்தின் புதிய அலுவலக வளாகம்

இராணுவத்தின் விவசாயம் மற்றும் கால்நடை பணிப்பகத்தின் புதிய அலுவலகக் கட்டிடத் தொகுதியானது இன்று பிற்பகல் (14) பனாகொடை இராணுவ வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கபட்டது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாகக் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுடன் இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களும் கலந்து கொண்டு புதிய வசதிகளைக் கொண்ட கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இராணுவத்தின் விவசாயம் மற்றும் … Read more

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குறித்து வெளியான தகவல்!

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, மார்ச் மாதத்தின் முதல் இருவாரங்களுக்குள் சுமார் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இம்மாதம் (மார்ச்) முதல் 13 நாட்களில் 53,838 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் அவர்களில் 12,762 பேர் ரஷ்யப் பிரஜைகள் எனவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதற்கு மேலதிகமாக 7,348 இந்தியர்கள், … Read more

சர்வதேச நாணய நிதியத்தின் பிடிக்குள் இலங்கை மத்திய வங்கி..! வெளியான தகவல்

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளால் இலங்கை மத்திய வங்கி அதன் பிடிக்குள் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், எமக்கு கிடைத்த தகவலின்படி, இந்த மசோதாவை தாக்கல் செய்வதும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையாகும். ஆனால் இன்று நாம் கடன் வாங்குவோம். நாளை அந்தப் … Read more

சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 21ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக் கூட்டத்திற்குப் பின்னர் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என குறிப்பிடப்படுகின்றது. எதிர்வரும் மார்ச் மாதம் 21 ஆம் திகதி இலங்கை நேரப்படி 08.00 மணிக்கு கொழும்பில் விசேட செய்தியாளர் மாநாடு நடைபெறவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் உத்தியோகபூர்வமாக இன்று தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை, … Read more

11 இலட்சம் நலன்புரிக் கொடுப்பனவு விண்ணப்பங்கள் சரிபார்ப்பு நிறைவடைந்துள்ளது

விண்ணப்பதாரர்கள் மார்ச் 31 க்கு முன் சரியான தகவல்களை வழங்கி நன்மைகளை இழப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்- நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைய முன்னெடுக்கப்படும் நலன்புரிக் கொடுப்பனவுகளுக்காக தற்போது நடைபெற்று வரும் தகுதியானவர்களை அடையாளங் காணும் நடவடிக்கையில் இதுவரை செயற்படுத்தப்பட்டுள்ள தகவல் கணக்கெடுப்பு மற்றும் தகவல் சரிபார்ப்பு நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்ட 11 இலட்சம் விண்ணப்பங்களின் தகவல் சரிபார்ப்பு நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க … Read more

இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய எண்ணும் இலங்கையர்கள் ஒருபோதும் நுழைய முடியாது என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஆணையர் பால் ஸ்டீபன்ஸ் எச்சரித்துள்ளார். எனவே ஆட்கடத்தல் செயற்பாடுகளை கட்டுப்படுத்த இலங்கை அரசும், அவுஸ்திரேலிய அரசும் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் அவுஸ்திரேலிய உயர் ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஆண்டு இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சூழலில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த நிலையில் இவ்வாறு சென்ற பலர் இலங்கை கடற்படையினராலும், அவுஸ்திரேலிய படையினராலும் … Read more