நாணயக்கொள்கை மீளாய்வு தொடர்பான அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2023 இன் இலக்க நாணயக்கொள்கை மீளாய்வு தொடர்பான அறிவிப்பு பின்வருமாறு:
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
இலங்கை மத்திய வங்கினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2023 இன் இலக்க நாணயக்கொள்கை மீளாய்வு தொடர்பான அறிவிப்பு பின்வருமாறு:
இன்றும் வங்கிகள் அதிகபட்ச பொதுமக்கள் சேவைக்காக செயற்படும்- மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கித் தலைவர்கள் வலியுறுத்தல் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இன்றும் (01) சேவைகளை வழங்கத் தயாராக இருப்பதாக மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஆதரிவளிப்பதற்காக அனைத்து அரச ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்களும் தங்கள் பொறுப்பை நிறைவேற்றுவார்கள் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். வங்கித் துறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து நேற்று (28) ஜனாதிபதி … Read more
இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு உலக வங்கி தொடர்ந்து ஆதரவளிக்கும் என உலக வங்கியின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அபிவிருத்திக் கொள்கை நடவடிக்கைகளுக்கான சட்டங்களை உருவாக்குவதில் உலக வங்கி தொழில்நுட்ப ஆதரவை வழங்கும் என்றும், சர்வதேச ஊடகப் பயன்பாடு மற்றும் நலன்புரி நலன்கள் தொடர்பில் மேலும் வழிகாட்டுதல் மற்றும் தேவையான ஆதரவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்குப் பொறுப்பான உப தலைவர் மார்ட்டின் ரேசர் (Martin Raiser) உள்ளிட்ட குழுவினர் நேற்று (28) … Read more
போக்குவரத்து சேவை வழமையான முறையில் இடம்பெறவுள்ளது. மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து வழமையான முறையில் இடம்பெறும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷசி வெல்கம தெரிவித்துள்ளார். வழமையான முறையில் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, நாட்டில் இன்று ரயில் போக்குவரத்து இடம்பெறும் என ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இன்று பகல் 12 மணியளவில் எதிர்ப்பு ஆர்பாட்டத்தை ரயில்வே தலையகத்திற்கு அருகில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மோசடி நடவடிக்கை ஒன்று தொடர்பில் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி, லொத்தர் சீட்டில் பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசி அழைப்பு அல்லது வட்ஸ்அப் செய்தி மற்றும் குறுஞ்செய்தி ஆகியவை உங்களுக்கு வந்தால் அது குறித்து விழிப்புடன் இருக்குமாறு மத்திய வங்கி பொதுமக்களை கோரியுள்ளது. இவ்வாறான அழைப்புக்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் மோசடியான நடவடிக்கை எனவும் மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆதாரங்களை அனுப்புங்கள் நீங்களும் இவ்வாறான மோசடிக்கு … Read more
புதிய இணைப்பு ஜனாதிபதியை படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் தொடர்பில் தனியார் வானொலி அலைவரிசை ஊடாக இன்று (28.02.2023) காலை வெளியிட்ட செய்தி முற்றிலும் பொய்யானது என பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவ்வாறான செய்திகள் எதுவும் பதிவாகவில்லை எனவும், அவ்வாறான விசாரணைகள் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் இது தொடர்பான செய்திகள் குறித்து பொலிஸார் தனித்தனியாக விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. முதலாம் இணைப்பு ஜனாதிபதி ரணில் … Read more
புலத்சிங்கள பிரதேசத்தில் தனது இலங்கை கணவர் துன்புறுத்தல் செய்வதாக கூறி 2 பிள்ளைகளின் தாயான பிலிப்பைன்ஸ் பெண் பொலிஸ் அவசர இலத்திற்கு நேற்று அழைப்பேற்படுத்தியுள்ளார். அதன் பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு வந்த பெண் மீண்டும் தனது கணவருடன் வாழ வீட்டிற்கு செல்ல முடியாதென கூறி பொலிஸாரிடம் பாதுகாப்பு கோரியுள்ளார். புலத்சிங்கள கதன்வாடிய 50 ஏக்கர் பிரதேசத்தில் வசிக்கும் நபர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் பிலிப்பைன்ஸில் தொழிலுக்கு சென்ற சந்தர்ப்பத்தில் அந்த நாட்டு பெண்ணுடன் காதல் தொடர்பு … Read more
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் முன்னுரிமையுடன் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என்று சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அரசியல் நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவோ அல்லது தானோ ஐக்கிய மக்கள் சக்தியைப் பிளவுபடுத்த விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “நான் முதலில் அரசில் இணைந்தபோது, ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பல உறுப்பினர்களை அழைத்து வரும் … Read more
இந்தியா-இலங்கை இடையிலான 7 ஆவது வருடாந்த பாதுகாப்பு மாநாடு 2023 பெப்ரவரி 23-25 வரையில் புதுடில்லியில் நடைபெற்றது. பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னே, இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் எஸ்.கே.பத்திரண, இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையைச் செர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தனர். தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டங்கள் குறித்து இம்மாநாட்டில் ஆராயப்பட்டதுடன் இருதரப்பு ஈடுபாட்டிற்கான புதிய மார்க்கங்கள் குறித்தும் இம்மாநாட்டில் அடையாளங்காணப்பட்டது. 2. இதேவேளை … Read more
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாகப் பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்து அவருடைய கருத்து அல்ல என்பதை அவரே குறிப்பிட்டிருந்ததாகத் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (28.02.2023) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார். இந்த அறிவிப்பு வெறுமனே நிதி கேரிப்புக்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாகச் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார். பொய்யான கருத்துகள் இவ்வாறான நிதி சேகரிப்பு சுவிஸ்லாந்து நாட்டில் அண்மையில் … Read more