நீர்வேளாண்மை செயற்பாடுகளை மேலும் விஸ்தரிப்பது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் ஆராய்வு

நீர்வேளாண்மை செயற்பாடுகளை மேலும் விஸ்தரிப்பது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நக்டா நிறுவனத்தின் தலைவர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். நக்டா எனப்படும் தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபையின் தலைமை அலுவலகத்திற்கு இன்று (14) நேரடியாக விஜயம் ஒன்றை மேற்கொண்ட போது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது தொடர்பாக ஆராய்ந்துள்ளார். இச்சந்திப்பில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க மற்றும் நக்டா நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தேர்தல் நடைபெறக்கூடாது என்ற எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை

தேர்தல் நடைபெறக்கூடாது என்ற எண்ணம்  சமகால அரசாங்கத்திற்கு இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு இன்று (14) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம் பெற்றது. அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்னவும் இதில் கலந்துகொண்டார். இதன்போது ,உள்ளூராட்சி தேர்தல் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரிடம் வினவிய போது ,அமைச்சர் பதிலளிக்கையில், “இதற்கு முன்னர் உள்நாட்டிலும் வெளிநாடுகளில் இருந்தும் கடன் … Read more

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் மேற்கொள்ளப்படும் மேலதிக நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். இந்த காலாண்டு முடிவடைவதற்குள் தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். … Read more

அரச நிறுவனங்களில் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சார்பாக எந்தவொரு அரச நிறுவனத்திலும் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நடைபெறவுள்ள தேர்தலுக்கு அரச நிறுவனங்களை பயன்படுத்தக் கூடாது என்பது தொடர்பாக ஆணைக்குழு நேற்று (13) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு அலுவலகம், பாடசாலை, உள்ளூராட்சிட்சி அமைப்பு, பொது நிறுவனம் அல்லது சட்டப்பூர்வ அமைப்பு ஆகியவற்றில் வேட்பாளர்கள் … Read more

அதிஷ்டம் கிட்டவுள்ள மூன்று ராசிக்காரர்கள்: அதிலும் கும்ப ராசிக்காரர்களுக்கு – இன்றைய ராசிபலன்

நாளை என்ன நடக்கும் என்று அறியும் சக்தி பொதுவாக மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்றாகும். ஆனால் வேதத்தின் கண்ணாக விளங்கும் ஜோதிடத்தின் மூலம் நமது இன்றைய தினத்தின் பலனை நாம் அறியும் சாத்தியம் உள்ளது. எனவே நாளொன்றுக்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் … Read more

மகளிர் உலகக் கிண்ண T20 கிரிக்கெட்: பங்களாதேஷ் – அவுஸ்திரேலிய அணிகள் மோதல்

மகளிர் உலகக் கிண்ண ரி 20 கிரிக்கெட் தொடர் போட்டி, பங்களாதேஷ், அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் இன்று (14) நடைபெறுகிறது. இதேவேளை நேற்று (13) நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 18.2 ஓவர்களில் 105 ஓட்டங்கள் பெற்றது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 14.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 107 ஓட்டங்கள் பெற்று 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணிக்கு இது 2ஆவது வெற்றியாகும். ஏற்கனவே மேற்கிந்திய தீவுகள் அணியை வெற்றிருந்தது. இதேவேளை … Read more

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி கொலை வழக்கு விசாரணைகளில் நெருக்கடி

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரளவின் கொலை வழக்கு விசாரணைகளில் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரள தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பதற்கு போதியளவு இரசாயன பொருட்கள் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது. மரபணு பரிசோதனைக்கான இரசாயன வகைகளில் தட்டுப்பாடு குறிப்பாக சந்தேகநபர்களிடம் மரபணு பரிசோதனை நடத்த இந்த இரசாயன வகைகள் தேவை எனவும், அதற்கான … Read more

இலங்கையிலுள்ள வாகனங்களில் ஏற்பட்டுள்ள ஆபத்து

இலங்கையில் எயார் பேக்குடன் கூடிய வாகனங்கள் தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். சில வாகனங்களில் எயார் பேக் இயங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்வாறான வாகனங்களில் இருந்து எயார் பேக்கை நீக்குவது தொடர்பான நடவடிக்கைகளை குறிப்பிட்ட நிறுவனங்கள் நாட்டில் இலவசமாக மேற்கொள்ளும். நிறுவனங்களின் ஊடாக தருவிக்கப்படும் வாகனங்களுக்கு மாத்திரம் இந்த சந்தர்ப்பம் வழங்கப்படும். நேரடியாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் எயார் பேக்கை … Read more

சுவிட்சர்லாந்தில் ஈழ தமிழர்களுக்கு இடையே உள்ள சர்ச்சைகள்! நந்தினி வெளிப்படுத்தும் உண்மைகள் பல (VIDEO)

சுவிஸ் நாட்டை பொறுத்தவரையில் சுவிஸில் இயங்கும் அனைத்து தமிழ் பாடசாலைகளும் தனியார் பாடசாலைகளாகும். எனவே பாடசாலைகள் தொடர்பில் தவறான தகவல்களை பரப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும் என சுவிஸ் நாட்டின் பிரதான மொழிப்பெயர்ப்பாளரும்,சமூக செயற்பாட்டாளருமான முருகவேல் நந்தினி தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து – பேர்ண் வள்ளுவன் பள்ளி தைப்பொங்கல் சிறப்பாக நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் பேர்ண் நகர முதல்வர் Alec von Graffenried முதன்மை விருந்தினராக பங்கேற்று விழாவினை தொடங்கி வைத்துள்ளதுடன்,தமிழ் … Read more

துருக்கி சிரியா பேரழிவு: முன்னரே கணித்து எச்சரிக்கை விடுத்த ஆராய்ச்சியாளர்

போருக்கு பதிலாக, நிலநடுக்கத்தை தடுக்கும் வகையிலான  வீடுகளைக் கட்டுவதற்குப் பணத்தைச் செலவழிக்க வேண்டும் என்று துருக்கி, சிரியா நிலநடுக்கத்தை முன்னரே கணித்து எச்சரித்த டச்சு ஆராய்ச்சியாளர் ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ் தெரிவித்துள்ளார். துருக்கியில் ஏற்பட்ட வரலாறு காணாத பூகம்பத்தால் துருக்கி மற்றும் அதன் அண்டை நாடான சிரியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,800 என்றளவைக் கடந்துள்ளது. இந்த நூற்றாண்டின் மிக மோசமான இயற்கை பேரழிவாக இதனை புவியியல் நிபுணர்கள் கருதுகின்றனர். டச்சு புவியியல் ஆராய்ச்சியாளரின் கணிப்பு இந்த மிகப்பெரிய நிலநடுக்கத்தை … Read more