இலங்கைக்குள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பெருந்தொகை மருந்துகள்

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பெருந்தொகை மருந்து வகைகளை ஏனைய பிரதேசங்களுக்கு பகிர்வதற்கு முற்பட்ட வேளையில் குறிப்பிட்ட குழுவினர் கைது செய்யப்பட்டதாக தேசிய ஒளடத ஒழுங்கமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த அதிகார சபையைச் சேர்ந்த அதிகாரிகள் புறக்கோட்டையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த மருந்து தொகை கைப்பற்றப்பட்டது. இந்த மருந்துத் தொகையின் பெறுமதி ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமாகும். இந்தியா, துருக்கி, இத்தாலி உட்பட பல நாடுகளிலிருந்து இந்த மருந்து வகைகள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டுள்ளன … Read more

அரச ஊழியர்கள் ஓய்வு! ரத்து செய்யப்படும் சேவைகள்: மக்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடி

60 க்கும் மேற்பட்ட புகையிரத பயணங்கள் நாளை (02.01.2023) ரத்து செய்யப்படலாம் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ​ இது தொடர்பில் புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன கூறுகையில், மொத்த ஊழியர்களில் சுமார் 500 பேர் நேற்று (31) ஓய்வு பெற்றதால் ஏற்பட்ட வெற்றிடம் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. புகையிரத பயணங்கள் ரத்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தேவைக்கேற்ப சேவைகள் வழங்குவது இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மேலும் … Read more

பாடசாலைகளில் மூன்றாம் தவணை நாளை ஆரம்பம்

பாடசாலைகளில் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது. சிரமங்களை களைந்து மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு புத்தாண்டில் எதிர்பார்த்திருப்பதாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் சிறிலால் நோனிஸ் தெரிவித்துள்ளார். பாடசாலை வளவுகளைத் துப்பரவு செய்யும் பணிக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வலயக் கல்வி அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மற்றுமொரு கட்டண அதிகரிப்பு! வெளியானது அறிவிப்பு

மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் நீர் கட்டணமும் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.   நீர் கட்டண உயர்வை தடுக்க முடியாது மின்சாரக் கட்டண அதிகரிப்புடன் ஒப்பிடும் போது, ​​நீர் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளதுடன், நீர் விநியோகத்திற்காக அதிகளவு மின்சாரம் செலவிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.  குடிநீர் விநியோகத்தில் பம்பிங் செய்யும் பணிக்கு அதிக அளவு மின்சாரம் தேவைப்படுவதால், மின் கட்டணத்தை உயர்த்தினால், அதற்கேற்ப குடிநீர் கட்டணமும் … Read more

ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட வருமானத்தைப் பெறுவோரின்….

ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட வருமானத்தைப் பெறுவோரின் வருமானம் அடிப்படையிலான வரி அறவிடுதல் இன்று தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 6 பிரிவுகளின் கீழ் வரி அறவிடும் முறை முன்னெடுக்கப்படவுள்ளது. சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டத்தின் கீழ் மாதாந்த வருமானம் ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேற்படும் பட்சத்தில் 6 சதவீதம் தொடக்கம் 36 சதவீதம் வரையில் 6 பிரிவுகளின் கீழ் வரி அறவிடப்படவுள்ளது.

விசேட பஸ் சேவைகள்

நத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டத்திற்காக தமது சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் சேவை இடங்களுக்குத் திரும்புவதற்கு வசதியாக இன்று (01) தொடக்கம் விசேட பஸ் சேவை நடைமுறைப்படுத்தப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தமது போக்குவரத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அறிவிப்பதற்கு வசதியாக 1955 அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபை இவர்களுக்காக விசேட பஸ் சேவைகளை முக்கிய பஸ்தரிப்பு நிலையங்களில் இருந்து நடைமுறைப்படுத்துகிறது.

மகன் போதைப் பொருளுக்கு அடிமை: பொலிஸாரிடம் ஒப்படைத்த தாய்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் போதைவஸ்து பாவனை அதிகரித்துள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சரியாக கண்காணிக்க வேண்டும். பிள்ளைகளை கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் தவறும் பெற்றோர்களால் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகின்றது. இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட வலைஞர் மடம் கிராமத்தில் போதைக்கு அடிமையான 24 அகவையுடைய மகனை பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு 24 அகவையுடைய இளைஞன் வீட்டில் தந்தை இல்லாத நிலையில் தாயின் அரவணைப்பில் … Read more

42 ஆயிரத்துக்கும் அதிகமான விலங்குகள், தாவர இனங்கள், ஆபத்தான உயிரினங்களின் சிவப்பு பட்டியலில்

உலகில் 42 ஆயிரத்துக்கும் அதிகமான விலங்குகள் மற்றும் தாவர இனங்கள், உலக பாதுகாப்பு ஒன்றியத்தின் ஆபத்தான உயிரினங்களின் சிவப்பு பட்டியலில் இருப்பதாக இயற்கைக்கான உலகளாவிய நிதியம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் உயிரினங்களில் வியத்தகு விழ்ச்சியை காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 1970 ஆம் ஆண்டிலிருந்து காட்டு இனங்களின் எண்ணிக்கை சராசரியாக 69 விகிதம் குறைந்துள்ளது. இயற்கை பாதுகாப்பு அமைப்பு ‘உலகளாவிய இனங்கள் அழிவின் பேரழிவு மோசமடைந்து வருகிறது’ என்று எச்சரித்துள்ளது. பனிமான், எம்பெரர் பென்குயின்கள் … Read more

அரச ஊழியர்கள் உறுதிமொழி மேற்கொள்ளும் பிரதான வைபவம் பிரதமர் தலைமையில் நாளை

அரச சேவையில் மனித வளத்தை உரிய முறையில் முகாமைத்துவம் செய்து தற்போது நிலவும் சவால்களை வெற்றி கொள்ள முடியும் என்று அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில் ஊழியர்கள் முன்னரிலும் பார்க்க சிறப்பான முறையில் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, புத்தாண்டில் அரச ஊழியர்கள் தமது பணிகளை ஆரம்பித்து உறுதிமொழி மேற்கொள்ளும் முக்கிய வைபவம் பிரதமர் … Read more

வாகனங்களை பதிவு செய்யும் போது இன்று முதல் புதிய நடைமுறை

இலங்கையில் புதிதாக வாகனங்களை பதிவு செய்யும் போதும் உரிமை மாற்றத்தின் இன்று முதல் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்போது மாகாண எழுத்துகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். புதிதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் உரிமை மாற்றம் செய்யப்படும் போது மாகாண எழுத்துகள் காரணமாக வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அடிக்கடி மாற்றம் செய்ய நேரிடுகிறது. இந்த சிக்கல்களை தவிர்க்க வாகன இலக்கத்தகடுகளிலுள்ள மாகாணங்களைக் குறிக்கும் ஆங்கில எழுத்துக்களை … Read more