இலங்கையிலிருந்து சில நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் செல்ல தடை..! வெளியானது விபரம் (Video)

சுற்றுலா விசாவில் ஓமான் மற்றும் துபாய், அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கு தொழிலுக்கு செல்ல வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தடை விதித்துள்ளது.  ஓமானில் இந்நாட்டு பெண்களை பாலியல் நடவடிக்கைக்கு விற்பனை செய்யும் தகவல் வெளியானதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதேவேளை சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக தராதரம் பாராது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார இன்று (19.11.2022) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். … Read more

வவுனியாவுக்கு ஜனாதிபதி விஜயம்,அமைச்சர் டக்ளசின் பங்கேற்புடன் வன்னி மாவட்ட உணவுப் பாதுகாப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

வவுனியா மாவட்டத்தின் செயற்பாடுகள் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்குபற்றலுடன், வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது. முன்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வவுனியா மாவட்டத்துக்கன விஜயம் ஒன்றை இன்றையதினம் மேற்கொண்டிருந்தார். வவுனியா வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வவுனியா விமானப் படைத் தளதில் வரவேற்றார்.. இந்நிலையில்.வவுனியா நகர சபை மண்டபத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற உணவுப் … Read more

யாழ் சிறைச்சாலையிலுள்ள போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் நலன் தொடர்பில் ஆளுநர் நடவடிக்கை

போதைப்பொருள் பாவனை குற்றச்சாட்டில் யாழ்ப்பாண சிறைச்சாலையில்; தடுத்து வைக்கப்பட்டுள்ள 48 பேரின் நலன்கள் தொடர்பில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இவர்களை ஆளூநர் நேற்று முன்தினம் (17) சந்தித்துள்ளார். தமது எதிர்காலம் எவ்வாறு அமையும் என்ற கவலையுடன் இருக்கும் இந்த இளைஞர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும சில நலத்திட்டங்களை இதன் போது ஆளூநர் சுட்டிக்காட்டியதாக ஆளூநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. போதைப்பொருளுக்கு அடிமையாவோரின் நலனுக்கான திட்டங்களை, வடமாகாணத்திலேயே முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் ஆளுநர் ஜீவன் தியாகராஜா மேலும் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் … Read more

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு, இலங்கையின் மூலோபாய அமைவிடம் பயன்படுத்தப்பட வேண்டும் – ஜனாதிபதி.

தொழில்துறை மற்றும் உற்பத்தி போட்டித் தன்மைக்கு முகம்கொடுக்கும் வகையில் வர்த்தக சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டத்துடன் கூடியதாக சுங்கத் தீர்வை மற்றும் சுங்கமற்ற தீர்வை ஆகியவற்றை எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு நீக்குவதற்கு அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். மேலும், அரசாங்கத் தரப்பு என்ற வகையில் உலக வங்கியுடன் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு, இலங்கையின் மூலோபாய அமைவிடம் பயன்படுத்தப்பட வேண்டும் – ஜனாதிபதி. • தனியார் துறையினரையும் பங்களிக்குமாறு … Read more

NVQ சான்றிதழ்கள் இல்லாத பயிலுனர்களுக்கு விழிப்புணர்வு திட்டம்

சான்றிதழ்கள் இல்லாத திறமையான கைவினைஞர்களுக்கான தேசிய தொழில் தகைமை (NVQ) சான்றிதழை பெற்றுக்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாத்தளை மாவட்ட இரத்தோட்டை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் (17) நடைபெற்றது. தேசிய பயிலுனர் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி அதிகாரசபை இரத்தோட்டை பிரதேச செயலகத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சித் திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இரத்தோட்ட உதவி பிராந்திய செயலாளர் திருமதி அஞ்சலா திஸாநாயக்க தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில்  கைவினை பயிலுனர்கள் கலந்துகொண்டனர்.

புலம்பெயர் இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அரசாங்கம் செயற்படவில்லை என்றும், நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள போதும் நிதி மோசடி இன்னும நிறுத்தப்படவில்லை என்றும் முன்னாள் இராணுவத் தளபதி, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், வரலாற்றில் ஒருபொதும் வரவு செலவு யதார்த்தமாகியதில்லை. அதில் கூறும் விடயங்கள் கனவு உலகத்துடன் தொடர்புடையதாகவே … Read more

'அமேசான்' ஊழியர்களை, பணி நீக்கம் செய்ய தொடங்கியது

ஆட்குறைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை 44 பில்லியன் டொலர் கொடுத்து வாங்கிய உலக பணக்காரர் எலான் மஸ்க் ட்விட்டரில் பணியாற்றி வந்த 7,500 ஊழியர்களில் சுமார் 4 ஆயிரம் பேரை பணியில் இருந்து அதிரடியாக நீக்கினார். இந்த நிலையில் டுவிட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களும் பணியில் இருந்து ஊழியர்களை நீக்கினார். இதனை தொடர்ந்து, உலகின் முன்னணி ஒன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் 10 ஆயிரம் ஊழியர்களை பணி … Read more