இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2022 ஒத்தோபர்

தயாரிப்பு நடவடிக்கைகளில் மாதத்திற்கு மாதம் அடிப்படையில் சுருக்கத்தினை எடுத்துக்காட்டி, தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2022 ஒத்தோபரில் வீழ்ச்சியடைந்தது. அதற்கமைய, தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், அனைத்து துணைச் சுட்டெண்களிலும் பதிவாகிய வீழ்ச்சிகளால் தூண்டப்பட்டு முன்னைய மாதத்திலிருந்து 4.2 சுட்டெண் புள்ளிகளைக் கொண்ட வீழ்ச்சியுடன் 2022 ஒத்தோபரில் 38.4 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது. பணிகள் கொ.மு.சுட்டெண், 2022 ஒத்தோபரில் 47.9 சுட்டெண் பெறுமதிக்கு நடுநிலையான அடிப்படை அளவிற்குக் கீழ் வீழ்ச்சியடைந்தது. புதிய வியாபாரங்கள், தொழில்நிலை மற்றும் நிலுவையிலுள்ள … Read more

வரவு செலவுத்திட்டத்தில் ,சமூக நலன்புரி நடவடிக்கைக்கு 85 கோடி ரூபா நிதி

சமூக நலன்புரி நடவடிக்கையின் கீழ் ஐந்து லட்சத்து 78 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு சமகால அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாபிற்றிய தெரிவித்துள்ளார். 2023 ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் மொத்த அரச செலவீனத்தில் சுமார் 85 கோடி ரூபா சமூக நலன்புரித்திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும்  நிதி இராஜாங்க அமைச்சர் கூறினார். வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நேற்று (15) இடம்பெற்றது.விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய  நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் … Read more

வெளிநாடுளுக்கான இலங்கை மாணவர்களுக்கு கல்வி வீசா – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அவுஸ்திரேலியா மற்றும் கனடாவில் கல்வி கற்க மாணவர் வீசா வழங்குவதாகக் கூறி கல்வி ஆலோசனை நிறுவனத்தை நடத்தி நிதி மோசடி செய்த நபரை கொழும்பு மோசடி விசாரணைப் பணியக அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர். செவன் ஸ்டார் மற்றும் ஐ.எம்.சி க்ளோப் என்ற இரண்டு உலகளாவிய கல்வி ஆலோசனை நிறுவனங்களை நடத்தி இந்த பாரிய நிதி மோசடியில் மொஹமட் ரெம் அஹமட் பஸ்லி என்றபவர் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு மோசடி விசாரணை பிரிவு குறிப்பிட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு … Read more

வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக வெளிநாடு செல்லுவோருக்கு என்.வி.கியூ.சான்றிதழ் ,பயிற்சி கட்டாயம்.

வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக வெளிநாடு செல்லும்பொழுது, என்.வி.கியூ.சான்றிதழ் மற்றும் 45 நாள் பயிற்சி கட்டாயமாக்கப்படவுள்ளது.. இந்த நடை முறை அடுத்த ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்தவிடத்தை கூறினார்.. இதற்கமைவாக, வெளிநாட்டுப் பணிப்பெண்களுக்கான பயிற்சிகளை வழங்குவதற்காக தொழில் பயிற்சி நிறுவனங்களுடன் … Read more

சீனப் பல்கலைக்கழகங்களில் பட்டப்பின்படிப்பு: விண்ணப்பங்கள் கோரல்

சீனப் பல்கலைக்கழகங்களில் 2023ஆம், 2024ஆம் கல்வியாண்டுகளுக்கென, பட்டப்பின்படிப்பு கலாநிதி கற்கை என்பனவற்றை தொடர்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இலங்கையைச் சேர்ந்த 40 வயதிற்கு மேற்படாத, பட்டதாரிகள் இதற்காக விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான மேலதிகத் தகவல்களை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.

அரச நிறுவனங்களில் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை

அரச நிறுவனங்களின் விடுமுறை விண்ணப்பப் படிவங்களை இணையவழி முறையின் மூலம் பூர்த்தி செய்யும் முறையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அச்சிடும் செலவைக் குறைக்கும் வகையில் பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த திட்டம் தொடர்பான முன்னோடி திட்டம் உள்துறை அமைச்சகத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த முயற்சித்து வெற்றியடைந்ததன் பின்னர் நாடளாவிய ரீதியில் உள்ள அரச அலுவலகங்களுக்கும் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படும் என அவர் மேலும் … Read more

சவூதி அரேபியாவில் தொழில்வாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் இலங்கையர்களுக்கான அறிவித்தல்

சவூதி அரேபியாவில் நிர்மாணத் துறையுடன் தொடர்புடைய பல தொழில் வாய்ப்புக்கள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதா, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. அந்நாட்டில் ஆரம்பிக்கப்படவுள்ள நிர்மாணத்துறையுடன் தொடர்புடைய வேலைத்திட்டங்களில் இலங்கைத் தொழிலாளர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, தற்போது சவூதி அரேபியாவுக்கான விஜயத்தில் ஈடுபட்டிருப்பதாக பணியகம் தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் வேலைக்காக வெளிநாடு செல்வதற்கு முன்னர்,அந்நாட்டு பொறியியல் கவுன்சிலில் பதிவு செய்வது கட்டாயம் … Read more

உலக சனத் தொகை 8 பில்லியன்- ஐக்கிய நாடுகள் சபை தெரிவிப்பு

11 ஆண்டுகளுக்கு பின்னர் உலக சனத் தொகை 7 பில்லியனில் இருந்து 8 பில்லியனை விட கடந்து உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். பொது சுகாதாரம், ஊட்டச்சத்து, தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் முன்னேற்றம் காரணமாக மனித ஆயுட்காலம் படிப்படியாக அதிகரிப்பதன் விளைவே இவ் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகும் எனவும் செயலாளர் நாயகம்  குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு பெரும் தலையிடி – தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள அரச ஊழியர்கள்

அனைத்து அரச ஊழியர்களும் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு குறிப்பிடப்படாததையடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு முதல் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு கிடைக்கவில்லை. அந்த வருடம் பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கூட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் நிலையத்தின் செயலாளர் தம்மிக்க முனசிங்க தெரிவித்தார். எனினும் கடந்த முதலாம் திகதி நிதியமைச்சில் அரச … Read more