ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு விஜயம்

  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். பாராளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி தனக்கான ஆசனத்தில் அமர்ந்ததுடன் பாராளுமன்ற விவாதத்திலும் கவனம் செலுத்தினார்.

வெளிவிவகார அமைச்சர், பாராளுமன்ற டுவிட்டர் ஊடாக நேரலையில்

இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை மற்றும் முன்னோக்கிய வழி தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் கௌரவ ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்கள் கலந்துகொள்ளும் நேரடி டுவிட்டர் கலந்துரையாடல் இன்று (10) பி.ப. 12.30 மணி முதல் பி.ப. 01.30 மணி வரை பாராளுமன்ற உத்தியோகபூராவ டுவிட்டர் (@ParliamentLK) கணக்கினூடாக இடம்பெறவுள்ளது. இது தொடர்பான பொதுமக்கள் கேள்விகளை #LKaskMP ஊடாக முன்வைக்க முடியும் என்பதுடன், அன்றைய தினம் நேரடியாக இணைந்து கொண்டும் கேள்விகளை முன்வைக்க முடியும். பொதுமக்கள் மைய பாராளுமன்றத்திற்காக மக்கள் … Read more

தேசிய உற்பத்தித்திறன் போட்டி : அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு சிறப்பு பரிசு

தொழில் அமைச்சின் கீழ் இயங்குகின்ற தேசிய உற்பத்தி திறன் செயலகத்தினால் கடந்த 2020ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் அரச நிறுவனங்களுக்கிடையிலான உற்பத்தி திறன் போட்டி நடைபெற்றது. இதில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் முதன்முறையாக பங்கு பற்றி சிறப்பு பாராட்டு பரிசினை ( ( Special Commendation ) ) வென்றது. இதற்கான பரிசளிப்பு நிகழ்வு நேற்று ( 09.11.2022 ) மொனராகலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அகமது ஷாபிர்  கலந்து … Read more

கடன் வழங்குநர்களுடன் தொடர் பேச்சுவார்த்தை! ரணிலுக்கு வலியுறுத்தியுள்ள உலக வங்கியின் தலைவர்

இலங்கை மக்களின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப நிலையான தனியார் துறையின் வளர்ச்சிக்கான அடித்தளத்தை உருவாக்குவதற்கான உலக வங்கி குழுவின் ஆதரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலக வங்கியின் தலைவருடன் ரணில் சந்திப்பு உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்த நிலையில் இது தொடர்பில் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கடன் மறுசீரமைப்புக்கு உடனடியாக உடன்படுவதற்கு இலங்கையின் உத்தியோகபூர்வ இருதரப்பு மற்றும் தனியார் துறை கடன் வழங்குநர்களுடன் தொடர்ந்தும் … Read more

உலகமே காத்திருக்கும்,இந்தியா-இங்கிலாந்து அரையிறுதி போட்டி இன்று

2022 ரி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் உலகின் கவனத்தை ஈர்த்துள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று (10) நடைபெறவுள்ளது.    இந்த போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா, இங்கிலாந்து அணிகள் போட்டியிடவுள்ளன.   அவுஸ்திரேலியா அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இன்று (10) பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் இறுதிப் போட்டிக்குள் நுழையும் மற்றொரு அணி எது என்பதை தீர்மானிக்கும் தீர்க்கமான போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் களமிறங்கவுள்ளன.   … Read more

மீட்கப்பட்ட பயணிகளின் முன்னேற்றம் குறித்து இலங்கை கண்காணிப்பு

கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, 2022 நவம்பர் 08ஆந் திகதி வியட்நாமில் உள்ள வுங் டௌ துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பயணிகளின் முன்னேற்றங்கள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றது. 2022 நவம்பர் 07ஆந் திகதி பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமுக்கு இடையிலான கடற்பரப்பில் சுமார் 303 பேரை ஏற்றிச் சென்ற கப்பல் குறித்த தகவல் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு இலங்கை கடற்படைக்கு அறிவித்துள்ளது. கப்பல் ஊழியர்கள் கப்பலில் இருந்த பயணிகளுடன் … Read more

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் – 2022 செத்தெம்பர்

2022 செத்தெம்பரில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் தொடர்ந்தும் வலுவடைந்த அதேவேளையில், உணவல்லா நுகர்வுப் பொருட்கள் மற்றும் முதலீட்டுப் பொருட்கள் என்பவற்றின் இறக்குமதிகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினைப் பிரதிபலிக்கும் வகையில் இறக்குமதிச் செலவினம் தொடர்ச்சியாக ஏழாவது மாதமாக ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் வீழ்ச்சியடைந்தது. இதன் விளைவாக, வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2022 செத்தெம்பரில் (ஆண்டிற்காண்டு) குறிப்பிடத்தக்கதொரு சுருக்கத்தினைப் பதிவுசெய்தது. தொழிலாளர் பணவனுப்பல்கள் 2022 செத்தெம்பரில் சிறிதளவில் அதிகரித்துக் காணப்பட்டன (ஆண்டிற்காண்டு), சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் 2021 செத்தெம்பருடன் ஒப்பிடுகையில் 2022இன் அதே காலப்பகுதியில் … Read more

நாட்டில் மரக்கறி விதைகளின் விலையை கட்டுப்படுத்த முறையான ஒழுங்குபடுத்தல் இல்லாமை கோபா குழுவில் புலப்பட்டது  

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கபீர் ஹஷீம் தலைமையில் (08) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் புலப்பட்டது. இதன்போது மரக்கறி விதைகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வதன் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் இதில் கமத்தொழில் அமைச்சு உள்ளிட்ட பல தரப்பினர் கலந்துகொண்டனர். 1997 இல் “விதைகள் மற்றும் நடுகைப் பொருட்கள் கைத்தொழில் தொடர்பான அரச கொள்கை” தயாரிக்கப்பட்டிருந்தாலும் அதனை 2021 ஜனவரி 01 வரை வர்த்தமானி ஊடாக வெளியிடாமை தொடர்பில் … Read more

COP 27 மாநாட்டுடன் இணைந்து கடன் முகாமைத்துவம்  தொடர்பான கலந்துரையாடலில் ஜனாதிபதி பங்கேற்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின்   முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா(Kristalina Georgieva), கானாவின் நிதி அமைச்சர் கென் ஒபோரி-அட்டா(Ken Ofori-Atta) மற்றும் மாலைதீவு மக்கள் மஜ்லிஸின் சபாநாயகர்  மொஹமட் நஷீட்(Mohamed Nasheed) ஆகியோருக்குமிடையில் கடன் முகாமைத்துவம் தொடர்பான சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது. எகிப்தின் ஷாம் அல்-ஷேக் நகரில் நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் தொடர்பான COP 27  மாநாட்டுடன் இணைந்ததாக இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில்  காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர்  … Read more