வெளிநாட்டு தொழில் வாய்ப்பு

சவூதி அரேபியாவில் ஆரம்பிக்கப்படவுள்ள பாரிய நிர்மாணத் திட்டங்களில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்காக நாட்டில் உள்ள தகுதி வாய்ந்தவர்களின் , தகவல்களை சேகரிக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் கட்டிடக் கலைஞர்கள (Architects), பொறியியலாளர்கள் (Engineers) மற்றும் அளவு கணக்கெடுப்பாளர்கள் (Quantity Surveyors) ஆகியோருக்கு பல வேலை வாய்ப்புக்கான சந்தர்ப்பம் உருவாகலாம் என்று பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் என்பன … Read more

இலங்கைக்கு ஆதரவு – ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுதிப்பாடு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பொறுப்புக்கூறல் மற்றும் ஜனநாயக சுதந்திரங்களைப் பாதுகாப்பதில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய வெளி நடவடிக்கை சேவையின் ஆசிய மற்றும் பசிபிக் பிரிவின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் பௌலா பம்பாலோனி(Paula Pambaloni) நேர்காணல் ஒன்றில் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். நல்லிணக்க முயற்சிகளை ஊக்குவிக்கும் இலங்கையை ஆபிரிக்கா, கரீபியன் மற்றும் பசுபிக் நாடுகளின் அமைப்பில் இணைத்துக் கொள்ள விரும்புவதாக ஜனாதிபதியின் தூதுவர் நிரஞ்சன் டி … Read more

15,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ,வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்கு விண்ணப்பம்

ஏராளமான அரசு ஊழியர்கள் வெளிநாட;டு தெரிழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், அரசாங்க ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக செல்ல விரும்பும் அரச ஊழியர்களை பதிவு செய்யுமாறு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையத்தளத்தின் ஊடாக அண்மையில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, … Read more

குரங்கு அம்மை நோய்: சர்வதேச சுகாதார அவசர நிலை – WHO

குரங்கு அம்மை நோய் பரவல் தீவிரமடைந்துள்ளதால் சர்வதேச சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. உலகளவில் குரங்கு அம்மை நோய் பரவல் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில்இ மறுபுறம் புதிய நோய் தொற்று பரவல் எண்ணிக்கை சில நாடுகளில் இன்னும் அதிகரித்து வருகிறது. குரங்கு அம்மை நோய் பாதிப்பு 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் 70 ஆயிரம் பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பதிவாகின. இந்நிலையில்இ சர்வதேச பொது சுகாதார அவசர அச்சுறுத்தலாக குரங்கு அம்மை நோய் … Read more

2022 வாக்காளர் டாப்பு குறித்து, தேர்தல் ஆணைக்குழு…

2022ஆம் ஆண்டு வாக்காளர் டாப்பில் பெயர் சேர்க்கப்படாதவர்களின் பெயர்களை உள்ளிடுவதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, வாக்காளர் டாப்பை உறுதிப்படுத்தும் பணி இடம்பெறுவதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்திருந்தார். அதன்படி, இதுவரை வாக்காளர் டாப்பில் தமது பெயரை  பதிவுசெய்யத்தவறியவர்கள் அடுத்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் தமது பெயரை சேர்க்க முடியும் எவ்வாறாயினும், முதன்முறையாக வாக்களிக்க உள்ளவர்களுக்கு மாத்திரம் நவம்பர் மாதம் வாக்காளர் டாப்பில் தமது பெயரை  உள்ளிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரம் குறித்த விசேட அறிவிப்பு

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டவர்களுக்கு, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என்று மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் அட்டைகள் தட்டுப்பாடு காரணமாக சுமார் 06 லட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அதற்கான அட்டைகளை ஆஸ்திரியாவில் இருந்து இறக்குமதி செய்ய தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் உரிய அட்டைகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாகவும் அவர் மேலும் … Read more

கொழும்பு நோக்கி வரும் மக்களுடன் இணைந்த சரத் பொன்சேகா (Video)

கொழும்பில் இன்றைய தினம் மாபெரும் போராட்டத்தை நடத்த தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளின் தீவிர பங்கேற்புடன் இன்று (02.11.2022) மாலை 3 மணிக்கு கொழும்பு எல்பின்ஸ்டோன் திரையரங்கிற்கு அருகாமையில் மாபெரும் போராட்டம் ஆரம்பமாகவுள்ளது. மருதானையில் இருந்து கோட்டை புகையிரத நிலையம் வரை பேரணி முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னர் பொதுக்கூட்டம் ஒன்றும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிற்கு வரும் மக்கள் இந்த நிலையில் இந்த மாபெரும் போராட்டத்தில் இணைவதற்காக கொழும்பு நோக்கி வரும் பேரணியில் … Read more

கெப்பட்டிகொல்லாவ பொலிஸ் உத்தியோகத்தரின் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 15 பேர் கைது

காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி கிராமவாசி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கெப்பட்டிகொல்லாவ, ரம்பகெப்புவாவ கிராம மக்கள் கடந்த 31 ஆம் திகதி இரவு அமைதியின்மையை ஏற்படுத்தி கெப்பட்டிகொல்லாவ பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை காயப்படுத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக தேரர் ஒருவர் உட்பட 15 கிராமவாசிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களில் 2 பெண்களும் அடங்குவர் , இந்த கொலையுடன் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். மக்களை தூண்டிவிட்டு, பொலிஸாருடன் … Read more

கிளிநொச்சியில், நீதி அமைச்சின் நடமாடும் சேவை

வடக்கு மக்களுக்கான நீதி அமைச்சின் நடமாடும் சேவை திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை கிளிநொச்சியில் நேற்று (01) நடைபெற்றது.