காத்தான்குடி மத்திய கல்லூரியின் ROAD 2 NATIONAL திட்டத்தின் ஆரம்ப வைபவம்

காத்தான்குடி மத்திய கல்லூரியின் 1988 O/L மற்றும் 1991 A/L பழைய மாணவர்களினால் மத்திய கல்லூரியில் முன்னெடுக்கப்படவுள்ள விஞ்ஞான ரீதியாக வடிவமைக்கப்பட்ட விளையாட்டு மேம்பாட்டு திட்டமாகிய ROAD 2 NATIONAL திட்டத்தின் ஆரம்ப வைபவமும் மாணவர்களுக்கான தேர்வு பரீட்சையும் (Talent Identification Test) நாளை 02.11.2022 திகதி மத்திய கல்லுரியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலய கல்விப்பணிப்பாளர், காத்தான்குடி பிரதேச செபலாளர், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி, காத்தான்குடி தள வைத்தியசாலை அத்தியட்சகர், பொலீஸ் … Read more

வாடகை முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க நடவடிக்கை

வாடகை முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க நடவடிக்கை தொழில் ரீதியாக ஈடுபடும் வாடகை முச்சக்கர வண்டிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்கும் முதல் கட்ட நடவடிக்கை இன்று (01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி மேல் மாகாணத்தில் தொழில் ரீதியாக ஈடுபடும் முச்சக்கரவண்டிகளை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த பதிவு நடவடிக்கைகளின் பின்னர், மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பயணிகள் போக்குவரத்து முச்சக்கரவண்டிகளுக்கும் வாரத்திற்கு 5 லீற்றர் என்ற எரிபொருள் கோட்டா எதிர்வரும் 6 … Read more

பல மாதங்களுக்கு பின் இலங்கை வரலாற்றில் இன்று கொழும்பில் பதிவான மிகக் குறைந்த தங்க விலை

கோவிட் தொற்று பரவலையடுத்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கத்தின் விலையானது வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது. இதனை தொடர்ந்து 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது கடந்த சில நாட்களாக குறைந்து 160,000 என்பதை அண்மித்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய நிலவரம் இவ்வாறான சூழலில் இன்றைய … Read more

ஆட்சி அதிகாரத்தில் இளைஞர்களை அதிகமாக உள்ளீர்க்கும் ஜனாதிபதியின் கொள்கையை வலுப்படுத்தும் வகையில் தனிநபர் பிரேரணை முன்வைப்பு

நாட்டில் தீர்மானம் மேற்கொள்வதற்கு இளைஞர்களுக்கு அதிக சந்தர்ப்பங்களை வழங்க வேண்டும் எனும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் கொள்கையை வலுப்படுத்தும் வகையிலான தனிநபர் பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொவத்த முன்வைத்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தும் விசேட சந்திப்பு நேற்று (31) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 262ஆவது உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அதிகார கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்காக இந்த தனி நபர் பிரேரணை சட்டமூலமாக முன்வைக்கப்பட்டுள்ளது. இச்சட்டமூலத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முதலாவது மற்றும் … Read more

விஷேட படையணி பயிற்சி பாடசாலையில் மேலும் இரண்டு விஷேட படையினர் குழுக்கள்

இலங்கை இராணுவத்தின் விஷேட படையணி இலங்கையின் உயர்மட்ட சிறப்பு நடவடிக்கைப் படைகளில் ஒன்றாக காணப்படுவதுடன் நாடு பெருமை கொள்ளக்கூடிய சிறந்த பயிற்சி பெற்ற பிரிவு எந்தவொரு வழக்கத்திற்கு மாறான இரகசியப் பணிகளைச் செய்ய நன்கு தயாராக உள்ளதுடன் மேலும் பாடநெறி எண் – 52 மற்றும் 53 ஊடாக உயர்மட்ட பயிற்சி பெற்ற 19 அதிகாரிகள் மற்றும் 595 சிப்பாய்கள் தங்களின் தீவிர ஒன்பது மாத பயிற்சியினை நிறைவு செய்ததன் பின்னர், சனிக்கிழமை (29) மாதுருஓயாவில் உள்ள … Read more

 கடற்பரப்புகளில் இடியுடன் கூடிய மழை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 நவம்பர் 01ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்காற்றானது வடமேற்கு முதல் மேற்கு வரையான திசைகளிலிருந்துவீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை … Read more

தேயிலை தொழிற்துறையை நவீனமயப்படுத்த வேண்டும் என்கிறார் ஜனாதிபதி.

போட்டிமிகு தேயிலைச் சந்தையில் நிலைத்திருக்க வேண்டுமாயின் தேயிலை தொழிற்துறையை நவீனமயப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட பொருளாதாரத்தில் இது மிகவும் இன்றியமையாதது எனக்கூறிய ஜனாதிபதி, ஆரம்பத்தில் தேயிலை தொழிற்துறையில் கிடைத்த வெற்றியை மீண்டும் உறுதி செய்ய வேண்டுமென்றும் சுட்டிக்காட்டினார். பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று முன்தினம் (30) பிற்பகல் நடைபெற்ற இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் 32வது வருடாந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி … Read more