வன்னியில் முன்பள்ளி குழந்தைகளுக்கு இலங்கை இராணுவப் படையினரின் உபசரிப்பு

வன்னியில் உள்ள இலங்கை இராணுவப் படையினர் அண்மையில் நடந்த விளையாட்டு விழாவின் போது பாலர் பாடசாலைக் குழந்தைகளுக்கு மதிய உணவை வழங்கினர். இலங்கை இராணுவ ஊடகங்களின்படி, வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கட்டளையின் கீழ் உள்ள 56ஆவது படைப் பிரிவின் தலைமையகத்தின் 562ஆவது படைப் பிரிவின் துருப்புக்கள், ஈச்சங்குளம் முன்பள்ளிப் பிள்ளைகளுக்கு அண்மையில் (ஜூன் 17) நடைபெற்ற வருடாந்த விளையாட்டு விழாவின் போது அவர்களுக்கும் அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு சுவையான மதிய உணவை வழங்கி உபசரித்தனர். … Read more

இரானுவத்தினரால் புதுப்பிக்கப்பட்ட ஏழு பீரங்கி துப்பாக்கிகள் கையளிப்பு

இலங்கை இராணுவ மின் மற்றும் இயந்திரப் பொறியியலாளர்கள் (SLEME) படைப்பிரிவு, ஏழு 25 பவுண்டர் பீரங்கி துப்பாக்கிகளை புதுப்பித்து, பனாகொடவில் உள்ள இலங்கை பீரங்கி (SLA) படைப்பிரிவினருக்கு சம்பிரதாய நிகழ்ச்சிகளின் போது பயன்படுத்துவதற்காக சமீபத்தில் கையளித்தது. மின் மற்றும் இயந்திரப் பொறியியலாளர்கள் (SLEME) படைப்பிரிவு துருப்புக்கள் அந்த பீரங்கிகளை புதுப்பித்ததன் மூலம் இராணுவத்திற்கு பாரியளவு நிதியை மீதப்படுத்த முடிந்துள்ளது என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிகழ்வில் இலங்கை பீரங்கி (SLA) படைப்பிரிவின் கட்டளைத் தளபதியும் முல்லைத்தீவு பாதுகாப்புப் … Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய கொழும்பைச் சேர்ந்த பெண்!

ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை தனது நெஞ்சுப் பகுதியில் வைத்து கடத்தி வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.   சுங்கப் பிரிவினரின் தகவல்  கைது செய்யப்பட்ட பெண் கொழும்பு – வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.  டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் இந்த பெண் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.  அவரிடம் இருந்து 650 … Read more

10 அத்தியாவசிய உணவுப் பொருட்களை திறந்த கணக்கு மூலம் பணம் செலுத்தி இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி

10 அத்தியாவசிய உணவுப் பொருட்களை திறந்த கணக்கு மூலம் பணம் செலுத்தி இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. திங்கட்கிழமை (27) 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களை திறந்த கணக்குகள் மூலம் இரண்டு மாதங்களுக்கு இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. உண்டியல் / ஹவாலா தீர்வு முறைகள் மூலம் செய்யப்படும் அதிகாரப்பூர்வமற்ற பணப் பரிமாற்றங்களைத் தடுப்பதற்காக, திறந்த கணக்கு மூலம் பணம் செலுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் தற்போது ஏற்பட்டுள்ள சவாலான நெருக்கடியை சமாளிக்க பிரதமர் … Read more

கைத்தொழிற் பிணக்குகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் உள்ளிட்ட 3 மூன்று சட்டமூலங்களுக்கு சபாநாயகரின் சான்றுரை

பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட கைத்தொழிற் பிணக்குகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு  (23) சான்றுரைப்படுத்தினார். கைத்தொழிற் பிணக்குகள் தீர்ப்பதில் நீதவான் நீதிமன்றங்களில் காணப்படும் நெரிசலைக் குறைப்பதற்கு தொழில் நியாய சபைகளின் தலைவர்களை மேலதிக நீதவான்களாக கருதுவதற்கும் அதனுடன் தொடர்புபட்ட விடயங்களுக்கு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் கைத்தொழிற் பிணக்குகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தினால் எதிர்பார்க்கப்படுகின்றது.  … Read more

ஈழப்பிரச்சினை குறித்து பைடன் அரசுடன் பேசுவதற்கு தயாராகும் முக்கிய குழு (VIDEO)

தமிழ் மொழியில் பயிலும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தாய் தமிழ் பள்ளிகளும் தமிழ் இருக்கையும் என்ற சிறப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டு உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை செயலாளர் பாலா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.  ஈழப்பிரச்சினை குறித்து பைடன் அரசிள் நகர்வு குறித்து எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வடகிழக்கு இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்கள் சொல்லண்ணா துயரத்தை அனுபவித்துள்ளனர்.இவர்களின் துயரத்தை … Read more

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்…

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பு நேற்று (24) பிற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. ஒரு வார காலம் இந்நாட்டில் தங்கியிருக்கும் பிரதிநிதிகள் குழு நிறைவேற்று பணிக்குழாம் மட்டத்திலான உடன்படிக்கையை எட்டுவது தொடர்பாகவும் மற்றும் கொள்கை ரீதியான விடயங்கள் தொடர்பிலும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளும். பிரதமர், நிதியமைச்சு, மத்திய வங்கி மற்றும் ஏனைய பொருளாதார அதிகாரிகள், நிபுணர்களுடனான கலந்துரையாடல்கள் மற்றும் தற்போதைய நிலைமை … Read more

பாடசாலைகள் மீள ஆரம்பம்! கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்

எதிர்வரும் வாரத்தில் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் விதம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த வாரம் மூடப்பட்ட பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகள் இனி வாரத்திற்கு 3 நாட்கள் மாத்திரமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் இவ்வாறு பாடசாலைகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  காலை 07.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரை கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஏனைய பாடசாலைகள்  கடந்த வாரத்தில் செயற்பட்டமை … Read more

கந்தகாடு விவசாயப் பண்ணையை எதிர்வரும் பெரும்போகப் பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்த நடவடிக்கை

தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான பொலன்னறுவை கந்தகாடு விவசாயப் பண்ணையை எதிர்வரும் பெரும்போகப் பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்த விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. கந்தகாடு பண்ணையின் 1,215 ஹெக்டேயரை இராணுவத்தினருக்கும், மேலும் 500 ஏக்கரை புனர்வாழ்வு திணைக்களத்திற்கும் வழங்குவதற்கு சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக விவசாய மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். மேலும், இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார … Read more

வெளிநாட்டுச் செலாவணியை உடமையில் வைத்திருத்தல் மீதான வரையறைகளை, நியதிகளை மற்றும் நிபந்தனைகளைத் திருத்துதல்

பொதுமக்களின் கைகளிலுள்ள வெளிநாட்டு நாணயத்தை முறைசார்ந்த வங்கித்தொழில் முறைமையினுள் கொண்டுவரும் நோக்குடன், நிதி அமைச்சர் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட கட்டளைக்கு பின்வருமாறு திருத்தமொன்றினை வழங்கியுள்ளார். இலங்கையிலுள்ள, அல்லது வதிகின்ற ஆளொருவரினால் உடமையில் வைத்திருக்கப்படும் வெளிநாட்டு நாணயத் தொகையை ஐ.அ.டொலர் 15,000 இலிருந்து ஐ.அ.டொலர் 10,000 அல்லது வேறு வெளிநாட்டு நாணயங்களில் அதற்குச் சமனான தொகைக்குக் குறைத்தல்.வெளிநாட்டு நாணயத்தை உடமையில் வைத்திருக்கின்ற இலங்கையிலுள்ள, அல்லது வதிகின்ற ஆட்களுக்காக … Read more