மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க பிரித்தானிய தூதரகத்திற்கு சென்ற ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு விஜயம் செய்மு, உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனை சந்தித்து, இரண்டாவது எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துக்கொண்டுள்ளார். பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு சென்ற ஜனாதிபதியை, உயர்ஸ்தானிகர் வரவேற்றுள்ளார். இரங்கலை குறிப்பேட்டில் பதிவு செய்த ஜனாதிபதி  இதனையடுத்து அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட நினைவு குறிப்பேட்டிலும் இரங்கல் குறிப்பு ஒன்றை எழுதிய ஜனாதிபதி, இரண்டாவது எலிசபெத் மகாராணி 7 தசாப்தங்களாக உலக மக்களுக்காக ஆற்றிய மகத்தான சேவையை பாராட்டியுள்ளார். … Read more

ஜனாதிபதி,மகாராணியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வார்

கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு இன்று (11) முற்பகல் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் (Sarah Hulton) வரவேற்றார். பின்னர் அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட நினைவுப் புத்தகத்தில் அனுதாபக் குறிப்பை எழுதிய ஜனாதிபதி அவர்கள், 07 தசாப்தங்களாக இரண்டாம் எலிசபெத் மகாராணி, உலக மக்களுக்கு ஆற்றிய அளப்பரிய … Read more

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் தலைவரை சந்தித்த அலி சப்ரி மற்றும் விஜயதாஸ

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச ஆகியோர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் தலைவர் பெடாரியோ வில்லியர்ஸைச் சந்தித்துள்ளனர். உள்நாட்டுப் பொறிமுறைகள் உள்நாட்டுப் பொறிமுறைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இதன்போது மீண்டும் வலியுறுத்தியதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.  மனித உரிமை நடைமுறைகளை மேம்படுத்துவதில் இலங்கையின் தொடர்ச்சியான ஈடுபாடு பற்றி கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் மேலும், தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்கான பங்களிப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை … Read more

மட்டக்களப்பு கடற்பரப்பில் 85 பேர் கைது!

சட்டவிரோதமாக படகு மூலம் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட 85 பேரை ,இலங்கை கடற்படையினர் மட்டக்களப்பு கடற்பரப்பில் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் ,கடல் வழியாக வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த குழு என சந்தேகிக்கப்படும் 85 நபர்களை ஏற்றிச் சென்ற ,உள்ளூர் மீன்பிடி இழுவை படகொண்ரை ,இன்று முற்பகல் மட்டக்களப்பு  கடல் பகுதியில் முற்றுகையிடப்பட்டது. முற்றுகையிடப்பட்டது. இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நபர்களை ஏற்றிச் சென்ற மீனவ படகினையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைது … Read more

மின்வெட்டு நேரம் 12 மணித்தியாலங்களாக அதிகரிக்கும் அபாயம்! இ.மி.ச பொறியியலாளர் சங்கம்

அக்டோபர் 20ஆம் திகதிக்கு முன்னர் அனல் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி நாட்டிற்கு கிடைக்கவில்லை எனின் 10 தொடக்கம் 12 மணித்தியால மின் துண்டிப்பை முன்னெடுக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்துனுவர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், கூடிய விரைவில் அனல் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரிகளை கொண்டு வருமாறு கூறினோம். … Read more

மருத்துவப் பொருட்களை அவசரமாக கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சு திட்டம்

130 மில்லியன் அமெரிக்க டொலர் இந்தியக் கடன் வசதியின் கீழ் மருந்துகளைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் மருத்துவப் பொருட்களை அவசரமாக கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  300 மருந்துகளின் பட்டியல் அதன்படி அத்தியாவசிய மருந்துகளின் கடுமையான பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு அமைச்சு 300 மருந்துகளின் பட்டியலைத் தயாரித்து வருகிறது. பொருத்தமான இந்திய விநியோகஸ்தர்களை கண்டறிவதில் உள்ள சிரமம், இலங்கையில் விநியோகஸ்தர்களை பதிவு செய்வதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் ஸ்டேட் பேங்க் ஒஃப் இந்தியா … Read more

அரசாங்கத்தின் கடன் வட்டி அதிகரிப்பு

அரசாங்கத்தின் கடன் வட்டி 26,300 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. நிதியமைச்சின் சமீபத்திய புள்ளிவிபரங்களுக்கமைய, வங்கி வட்டி விகித உயர்வு மற்றும் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவதால், இந்த ஆண்டு அரசின் கடன் வட்டி செலவு அதிகரித்துள்ளது.   வட்டி வீதம் அதிகரிப்பு திரைச்சேரி உண்டியல்களின் வட்டி வீதம் 30 வீதத்தை தாண்டியமையும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். மேலும் ஒரு டொலருக்கான ரூபாவின் பெறுமதி 203 ரூபாயிலிருந்து 360 ரூபாயாக அதிகரித்தமையும் கடன் … Read more

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டி இன்று: எழுச்சி கண்ட இலங்கை ,பாகிஸ்தான் அணியை எதிர்கொள்வதாக இந்திய ஊடகங்கள் புகழாரம்

15-ஆவது ஆசிய கிரிக்கெட் கிண்ணத் தொடரின் ,இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை (11) துபாயில் நடைபெறவுள்ளது. போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. சுப்பர் போர் சுற்றில் சிறப்பாக ஆடிய இந்த இரு அணிகளும் நடப்புச் சம்பியனும் வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்த அணியுமான இந்தியாவை வெளியேற்றி ,இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளன.இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் அணி இந்த போட்டித் தொடரில் வெளிப்படுத்திய ஆற்றலை … Read more

இலங்கையில் அரசாங்க தொழில்களை விட்டு விலகும் ஊழியர்கள்

2020ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கை 21856 ஆல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு வெளியிட்டுள்ள 2021 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங் ஊழியர்கள் 2020 ஆம் ஆண்டில், 14 லட்சத்து 23 ஆயிரத்து 110 ஆக இருந்த மொத்த அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கை, 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 14 லட்சத்து ஆயிரத்து 260 ஆக குறைந்துள்ளது. … Read more