ஜனாதிபதிப் பதவிக்கு மூவரின் பெயர்கள் முன்மொழிவு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமாவை அடுத்து வெற்றிடமான ஜனாதிபதிப் பதவிக்கு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் இன்று (19) பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டன. அதற்கமைய, பதில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டலஸ் அழகப்பெரும மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அனுரகுமார திசாநாயக்க ஆகியோரின் பெயர்கள் இவ்வாறு முன்மொழியப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டலஸ் அழகப்பெருமவின் பெயரை எதிர்க்கட்சித்தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) … Read more

சலுகையுடன் நடைமுறைக்கு வரவுள்ள மின்சார கட்டண அதிகரிப்பு! வெளியானது அறிவிப்பு

மின்சார கட்டண உயர்வு தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அறிவித்துள்ளார். மின்கட்டண உயர்வு வீதம் அத்துடன், தற்போதுள்ள மின்சாரக் கட்டணம் 69 வீதத்தால் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் மின்சார சபை 130 வீத கட்டண உயர்வை கோரியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், குறைந்த மின்சார பாவனையாளர்களுக்கு சலுகைகளை வழங்கி … Read more

புதிய பேருந்து கட்டணம் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு! இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு

எரிபொருள் விலை குறைப்பு காரணமாக பேருந்து கட்டணங்களை 2 வீதத்தினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி திலான் மிரான்டா தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் விலை குறைப்பிற்கு ஏற்ற வகையில் விலைகளை குறைப்பதற்கான பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் எரிபொருள் விலை குறைப்பிற்கு அமைவாக பேருந்து கட்டண குறைப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. திருத்தப்பட்ட கட்டணங்கள் தொடர்பான பரிந்துரை நேற்று போக்குவரத்து அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். முச்சக்கரவண்டி … Read more

நாடளாவிய ரீதியில் அவசரகால நிலை பிரகடனம்

நாடளாவிய ரீதியில் நேற்று (18) தொடக்கம் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பதில் ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, பொதுப் பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல், பொதுவான வாழ்க்கைக்கு அத்தியாவசியமான சேவைகள் மற்றும் விநியோகங்களைப் பேணுதல் என்பனவற்றை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்காக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான விஷேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (18) வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.documents.gov.lk/files/egz/2022/7/2288-30_T.pdf

கொழும்பிலிருந்து தாமாக முன்வந்து வெளியேற அவுஸ்திரேலியா அங்கீகாரம்

கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலய பணியாளர்களை சார்ந்திருப்பவர்கள் தானாக முன்வந்து, நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையில் நாடளாவிய ரீதியில் பொது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும், குறுகிய அறிவித்தலில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தலாம் எனவும் அவுஸ்திரேலிய வெளிவிவகார திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பெரிய ஆர்ப்பாட்டங்களின் போது பல வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. ஆர்ப்பாட்டங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து, எல்லா நேரங்களிலும், தமது தொடர்புடைய பயண மற்றும் அடையாள … Read more

புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வேட்பு மனு இன்னும் சில மணித்தியாளங்களில்..- வாக்களிப்பு நாளை

வெற்றிடமாக உள்ள ஜனாதிபதி பதவிக்காக ஒருவரை தெரிவு செய்வதற்கான வேட்பு  இன்று இன்னும் சில மணித்தியாளங்களில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது. இதற்காக பாராளுமன்றம் இன்றும் (19) நாளையும் (20) கூட உள்ளது. பாராளுமன்றத்தில் இடம்பெறும்  இரகசிய வாக்களிப்பு  மூலம் புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்படவுள்ளார்.. ஜனாதிபதி தேர்வில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவத்தாட்சி அதிகாரியாக செயல்படுவார். வாக்கெடுப்பு நாளை இடம்பெறும். ஜனாதிபதி பதவிக்காக தாம் போட்டியிட உள்ளதாக ரணில் விக்ரமசிங்க,பாராளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேமதாச, டலஸ் அழகப்பெரும, அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் … Read more

சொத்துத் தகராறு – சகோதரியை கொடூரமாக கொலை செய்த சகோதரன்

சொத்துத் தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, மூத்த சகோதரியைக் கொடூரமாக கொலை செய்த சகோதரன் கைது செய்யப்பட்டதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேல் எலத்தலாவ திகல்ல பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரே அவரது இளைய சகோதரரால் கொல்லப்பட்டுள்ளார். சொத்து தகராறு தொடர்பான சண்டையின் பின்னர் சந்தேகநபரால் பலமுறை கத்தியால் குத்தப்பட்டதை தான் பார்த்ததாக உயிரிழந்தவரின் மருமகள் பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். மருமகளின் சாட்சியங்களின் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் இறந்தவரின் இளைய சகோதரனை பொலிஸார் கைது … Read more

21ம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் ஆரம்பம் – வெளியான அறிவிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் விநியோகம் ஜூலை 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் அது QR குறியீடு மற்றும் வாகனங்களின் இலக்கத் தகடுகளில் உள்ள கடைசி இலக்கத்தின் பிரகாரம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் (FSOA) தலைவர் குமார ராஜபக்ஷ இன்று இதனை தெரிவித்துள்ளார். எனவே, அன்றைய தினம் முதல் எரிபொருள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என … Read more

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட உரம்: அடுத்து இரண்டு வாரங்களில்…

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட உரம் அடுத்த இரண்டு வாரங்களில் ,இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் 21,000 மெட்ரிக் உரம் அடங்கும். இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கவுள்ள 65,000 மெட்ரிக் தொன் உரத்தில் 44,000 மெட்ரிக் தொன் உரம் அடங்கிய கப்பல் முதற்கட்டமாக கடந்த வாரம் இலங்கையை வந்தடைந்தது. இவ்வாறு கிடைக்கப்பெற்ற உரம் தற்போது இலங்கை உர நிறுவனம் மற்றும் லங்கா கொமர்ஷல் உர நிறுவனம் மூலமும் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன. அந்த உரத்தை  … Read more