இலங்கையில் பெட்ரோல் விலை 110 ரூபாவால் குறைக்க முடியும் – ஆனந்த பாலித தகவல்

உலக சந்தையில் எரிபொருளின் விலையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட வேண்டுமென தொழிற்சங்கங்களின் ஐக்கிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் அழைப்பாளர் ஆனந்த பாலித இதனைத் தெரிவித்தார். உலக சந்தையில் எரிபொருள் விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால் அரசாங்கம் முன்வைத்துள்ள விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலைகள் கணிசமாகக் குறைக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு எவ்வித நட்டமும் ஏற்படாது உலக சந்தையில் ஒரு பீப்பாய் எண்ணெயின் … Read more

சிறை கைதிகளுக்கு தொலைபேசி வசதி

நாட்டின் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள சிரமம் காரணமாக ,சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் உறவினர்கள் கைதிகளை பார்க்க வர முடியாததால், சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு தொலைபேசி வசதிகளை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கைதிகள் தமது உறவினர்களுடன் தொலைபேசி ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு அமைவாகவே இந்த வசதிகள் வழங்கப்படுவதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படும் வரை பதில் ஜனாதிபதியாக தாம் செயல்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு

பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படும் வரை இலங்கையின் பதில் ஜனாதிபதியாக தாம் செயல்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பதில் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு நேற்று (15) விசேட உரையாற்றினார். இலங்கையின் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் இரண்டு முக்கிய தீர்மானங்கள் மேற்கொண்டதாக அவர் சுட்டிக்கட்டினார். முதலாவதாக, ஜனாதிபதிக்கு ப் பயன்படுத்தப்படும் ‘அதிமேதகு’  “His Excellency”, என்ற சொல் இனி பயன்படுத்தப்படாது என்று அவர் கூறினார். இரண்டாவதாக, நாட்டிற்கு ஒரே ஒரு … Read more

அரச ஊழியர்களுக்கான சம்பளம்

அரசாங்க  ஊழியர்களின் ஜூலை மாத சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகள் உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும் திட்டமிட்டபடி வழங்கப்படும் என நிதி அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் நேற்று (14)தெரிவித்துள்ளார். மேலும் பொதுத்துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக 92 பில்லியன் ரூபாவும், ஓய்வூதியம் வழங்குவதற்காக 25.5 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படும் எனவும், அதற்கான நிதியை திறைசேரி ஏற்கனவே ஒதுக்கியுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். அரச ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்க முடியாது என்று வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது … Read more

 ரஷ்ய ஏரோப்ளோட் Russian Aeroflot ஏர்லைன்ஸ் வழக்கு தள்ளுபடி

ரஷ்ய ஏரோப்ளோட் விமானம் (Russian Aeroflot)  தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்ய கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அயர்லாந்து நிறுவனம் ஒன்றினால் முன்வைக்கப்பட்ட இந்த வழக்கு, இன்று (15) வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி சுமித் அருண பெரேரா முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கை தொடர்ந்தும் கொண்டு செல்ல முடியாது, எனவே வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி குறிப்பிட்டார்.

இலங்கையின் நிலைமையை ஐக்கிய நாடுகள் சபை தீவிர கண்காணிப்பு

இலங்கை தற்பொழுது எதிர்கொண்டுள்ள தீவிர பொருளாதார, அரசியல் செயற்பாடுகளை ஐக்கிய நாடுகள் சபை உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் நேற்று (14) தனது டிவிட்டர் பக்கத்தில் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். மேலும் அவர் “இலங்கையின் எதிர்கொண்டுள்ள சவாலான நிலைமையை அவர் தொடர்ந்து உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் மற்றும் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் நிலையின் அடிப்படைக் காரணங்கள் மற்றும் எதிர்ப்பாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்வது முக்கியம் எனவும் மேலும் அமைதியான மற்றும் ஜனநாயக … Read more

India supports early solution in Sri Lanka through democratic means and values and a constitutional framework  

India reiterated that she will continue to stand with the people of Sri Lanka as they seek to realize their aspirations for prosperity and progress through democratic means and values as well as established institutions and a constitutional framework. Spokesperson of Ministry of External Affairs, Government of India at a media briefing on 14 July … Read more