“உங்கள் போன் நீங்கள் பேசுவதை ஒட்டுக் கேட்கிறது” – பிரபல மார்கெட்டிங் நிறுவனம் ஒப்புதல்

வாஷிங்டன்: நம்முடைய ஸ்மார்ட்போன் நாம் பேசும் உரையாடல்களை கவனிப்பதாக, பேஸ்புக் மற்றும் அமேசான் நிறுவனங்களுடன் பணியாற்றும் பிரபல மார்க்கெட்டிங் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. நாம் சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது எதேச்சையாக ஏதாவது ஒரு விளம்பரத்தை க்ளிக் செய்திருந்தால் தொடர்ந்து அது பற்றிய விளம்பரங்களாகவே வருவதை கவனித்திருப்போம். இன்னும் ஒருபடி மேலே போய் போனிலோ அல்லது நேரிலோ ஏதாவது ஒரு பொருளை வாங்கவேண்டும் என்று யாரிடமாவது பேசிக் கொண்டிருந்த பிறகு, அது தொடர்பான விளம்பரங்கள் வருவதையும் நீங்கள் கவனித்திருக்கலாம். … Read more

செகண்ட் ஹேண்ட் ஐபோன் வாங்கறீங்களா… கவனம் தேவை… இல்லை என்றால் வருத்தப்படுவீங்க

பிரீமியம் போனான ஐபோன் வாங்க வேண்டும் என்ர ஆசை பலருக்கு இருக்கும். எனினும் புதிய ஐபோன் வாங்குவதற்கு பட்ஜெட் இடம் கொடுக்காததால் பழைய ஐபோனை வாங்க பலர் திட்டமிடலாம். எனினும் இந்த விஷயத்தில் கவனம் தேவை. இல்லையெனில் போனை வாங்கிய பிறகு நீங்கள் வருந்த வேண்டியிருக்கும். புதிய ஐபோன் சீரிஸ் வந்தவுடன் பலரும் பழைய ஆப்பிள் ஐபோனை (Apple iPhone) விற்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் . இதை பயன்படுத்திக் கொண்டு பலர் பழைய ஐபோனை வாங்குகிறார்கள். ஆனால் … Read more

உங்கள் போனில் இணைய வேகம் குறைவாக உள்ளதா… இந்த டிப்ஸ் கை கொடுக்கும்

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில், இணைய வசதி இல்லை என்றால், ஒன்றுமே நடக்காது என்ற நிலை தான் தற்போது உள்ளது. இணைய வசதி இல்லை என்றால், ஒரு கணம் உலகமே ஸ்தபித்து விடும். அந்த அளவிற்கு அன்றாட பணிகள் பலவற்றுக்கு நாம் இணையத்தை சார்ந்து இருக்கிறோம். இணையத்தின் உதவியுடன் தான், பண பரிவர்த்தனை மேற்கொள்ளுதல், மின்சாரக் கட்டணம் செலுத்துதல், ரீசார்ஜ் செய்தல், டிக்கெட் முன்பதிவு செய்தல் போன்ற பல பணிகளை மேற்கொள்ள முடியும். சில நேரங்களில் இண்டர்நெட் வேகம் … Read more

BSNL வழங்கும் மலிவான பிராட்பேண்ட் பிளான்கள்… ராக்கெட் வேகத்தில் இணைய சேவை

இந்தியாவின் முக்கிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ்  ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தங்கள் மொபைல் கட்டணங்களை சராசரியாக 15 சதவீதம் அதிகரித்ததன் விளைவாக, பல மொபைல் சந்தாதாரர்கள்  BSNL நிறுவனத்திற்கு மாறுகின்றனர். பிஎஸ்என்எல் நிறுவனமும் விரைவில் 4ஜி  நெட்வொர்க்கை வலுப்படுத்தி ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்களுக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது.  நாட்டின் பல நகரங்கள் மற்றும் நகரங்களில் பிராட்பேண்ட் சேவைகளை பிஎஸ்என்எல் வழங்குகிறது.  பிஎஸ்என்எல் தனது மொபைல் மற்றும் பிராட்பேண்ட் நெட்வொர்க்கை நாடு … Read more

இந்தியாவில் ரியல்மி 13+ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நிறுவனத்தின் 13+ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை … Read more

UPI பேமெண்ட்… இந்த தவறுகளை செஞ்சுடாதீங்க… பின்னாடி வருத்தப்படுவீங்க

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகி விட்ட நிலையில், இணையவழி பண பரிவர்த்தனை என்பது. கூகுள் பே, போன் பே போன்ற டிஜிட்டல் தளங்கள் நிதி பரிவர்த்தனைகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் நிலையில், ரொக்க பண பரிவர்த்தனைகள் மேற்கொள்வது பெருமளவில் குறைந்து விட்டது. இந்தியாவில் செல்போன் மூலம் உடனுக்குடன் பணம் அனுப்பும் மின்னிலக்கச் சேவையான UPI பரிவர்த்தனைகள் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 37% அதிகரித்துள்ளதாக உலகளாவிய பணப் பரிவர்த்தனை மின்னிலக்க மையமான பே செக்யூர் தெரிவித்துள்ளது. … Read more

ஐஎம்இஐ எண்ணை மாற்றினாலும் தொலைந்த செல்போனை கண்டுபிடிக்கலாம்!

சென்னை: ஐஎம்இஐ எண்ணை மாற்றினாலும் தொலைந்த செல்போனை கண்டுபிடிக்கலாம் என தேசிய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் இ.காளிராஜ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சைபர் க்ரைம் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை தடுக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. சைபர் தாக்குதல்கள் தொடர்பாக விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சைபர் குற்றங்களுக்கு எதிராக பொதுமக்கள் புகார் அளிப்பதை ஊக்குவிக்கும் வகையில், https://cybercrime.gov.in என்ற பிரத்யேக இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு அறிமுகம் … Read more

30 கிமீ மைலேஜ் தரும் புதிய Maruti Dzire… மிக விரைவில் அறிமுகம்

New Generation Maruti Dzire Launch: நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, அதன் மிகவும் பிரபலமான செடான் காரான டிசைரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. மிகவும் பாதுகாப்பான வாகனமாக கருதப்படும் மாருதி டிசையர் மாடல் மிகவும் நம்பகமான கார் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை புதிய காரில், அதன் வடிவமைப்பில் பல முக்கிய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவது, மாருதி சுஸுகி டிசையர் … Read more

சாம்சங் முதல் ரெட்மீ வரை… 15,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் அமேசானில் வாங்கலாம்

ஸ்மார்ட்போன் சந்தை நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் நிலையில், தினம் தினம் பல புதிய போன்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளன.  இப்போது சிறந்த அம்சங்கள் கொண்ட போன்கள் பல குறைந்த விலையில் கிடைக்கின்றன. இதனால் ஸ்மார்ட்போன் வாங்குவது அனைவருக்கும் எளிதாகிவிட்டது. அந்த வகையில்,  சுமார் ரூ.15,000 என்ற விலையில் கிடைக்கும் சில ஸ்மார்ட்போன்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். சாம்சங் முதல் ரெட்மீ வரை, பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் ரூ.15 ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளன. குறைந்த விலையில் … Read more

ஸ்பேம் கால்களுக்கு முடிவு கட்ட TRAI அதிரடி நடவடிக்கை… மாறும் விதிகள்

TRAI’s New Rule To Curb Spam Calls: இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) வியாபார நோக்கில் செய்யப்படும் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளுக்கு முடிவு கட்ட புதிய விதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மோசடி அல்லது ஸ்பேம் அழைப்புகளை மேற்கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று TRAI (Telecom Regulatory Authority of India) எச்சரித்துள்ளது. புதிய விதிகளின் நோக்கம் மொபைல் பயனர்களை தினமும் தொல்லைக்கு உள்ளாக்கும் ஸ்பேன் கால்களில் இருந்து பாதுகாப்பதாகும்.  … Read more