நீங்கள் பேசுவதை 24 மணி நேரமும் ஒட்டுகேட்கும் ஸ்மார்ட்போன்: தவிர்ப்பது எப்படி?

இன்று நாம் டிஜிட்டல் யுகத்தில் வாழ்கிறோம். காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை நமது அன்றாட வாழ்க்கையின் பெரும்பாலான செயல்பாடுகள் டிஜிட்டல் வடிவத்தில் மட்டுமே செய்யப்படுகிறது. டிஜிட்டல் மயமாக்கல் மனித வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதன் எதிர்மறை அம்சங்களையும் புறக்கணிக்க முடியாது. இணையம் ஒரு பெரிய தகவல் களஞ்சியமாக உருவெடுத்துள்ளது. எந்த ஒரு பொருள் தொடர்பான தகவல்களும் உங்களிடமிருந்து ஒரே ஒரு கிளிக் தொலைவில் உள்ளது. அதாவது உங்கள் ஸ்மார்ட்போனில் ஒரே … Read more

ஆன்லைன் ஷாப்பிங் மோசடி: நீங்கள் சிக்காமல் இருக்க செய்ய வேண்டியது இதுதான்

அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் ஷாப்பிங் தளங்களை குறிவைத்து அண்மைக்காலமாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக ஏராளமான சைபர் மோசடி வழக்குகளும் பதிவாகி வரும் நிலையில், நீங்கள் இதில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே, ஆன்லைன் ஷாப்பிங் இந்தியாவில் பிரபலமடைந்து வருகிறது. இப்போதெல்லாம், வாடிக்கையாளர்கள் ஆடைகள் முதல் எலக்ட்ரானிக்ஸ் வரை அனைத்திற்கும் ஆன்லைனில் ஆர்டர் செய்யத் தொடங்கியுள்ளனர். கோவிட்-19 காரணமாக போடப்பட்ட லாக்டவுன் … Read more

DeepFake AI: ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாகும் போலிகள் – வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்

கடந்த சில வருடங்களில், இணையத்தின் வீச்சு அதிகரித்துள்ளதால், சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் என நமது அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் தீவிர மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொழில்நுட்பத்தை நேர்மறையான திசையில் பயன்படுத்துவதன் மூலம் மனித வாழ்க்கையை மேம்படுத்த முடியும். அதன் தவறான பயன்பாடு சமூகத்திற்கு ஆபத்தானது என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும். அதனால் தான் இணையம் மூலம் போலி செய்திகளை பரப்புவது தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது. பொதுவாக மக்களை தவறாக வழிநடத்துதல், ஒருவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துதல், மத … Read more

தனிநபர் விவரம் கசிவு: ChatGPT-க்கு அபராதம் விதித்தது தென் கொரியா

சியோல்: சாட்ஜிபிடி (ChatGPT) செய்த வேலைக்காக ஓபன் ஏஐ நிறுவனத்துக்கு சுமார் 2.32 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது தென் கொரியா. இதை அந்நாட்டின் தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் விதித்துள்ளது. அதற்கான காரணம் குறித்து பார்ப்போம். இன்றைய ஏஐ சூழ் உலகில் பெரும்பாலான டிஜிட்டல் சாதன பயனர்களின் பார்வையை பெற்றுள்ளது சாட்ஜிபிடி. கதை சொல்ல, கட்டுரை படிக்க, பாடல் எழுத, கம்ப்யூட்டர் கோடிங் என பயனர்கள் கேட்கும் சகல கேள்வி மற்றும் சந்தேகங்களுக்கும் இதில் பதில் … Read more

ட்விட்டரில் டார்க் மோட் மட்டும் தான் இருக்கும்: எலான் மஸ்க் ட்வீட்

நியூயார்க்: ட்விட்டர் (எக்ஸ்) சமூக வலைதளத்தில் டார்க் மோட் மட்டுமே இருக்கும் என அதன் உரிமையாளர் எலான் மஸ்க் ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார். இது ட்விட்டர் பயனர்களுக்கு அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கி இருந்தார். அது முதல் அந்த தளத்தில் பல்வேறு மாற்றங்களை தன் விருப்பத்துக்கு ஏற்ப மேற்கொண்டு வருகிறார். ஊழியர்களை பணி நீக்கம் செய்வது, ட்விட்டர் அலுவலக பொருட்கள் விற்பனை, தடை செய்யப்பட்டவர்களை மீண்டும் ட்விட்டர் … Read more

பிரபலங்களின் போட்டோக்களுக்கு ஒரு லைக் போட்டால் ரூ. 3000 – புது சைபர் மோசடி… சிக்காதீங்க பசங்களா!

New Whatsapp Scam: இந்தியாவில் ஆன்லைன் மோசடி தற்காலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வீட்டில் இருந்து வேலை செய்யும் மோசடி முதல் வாட்ஸ்அப் மோசடி வரை பல விதங்களில் பாமர மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் ஏமாறுகின்றனர். கடந்த சில மாதங்களாகவே இதுபோன்ற மோசடி செய்பவர்கள் தலைமறைவாகி வருகின்றனர்.  சமீபத்திய வழக்கில், பாலிவுட் பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் இடுகைகளை லைக் செய்யும் பகுதி நேர வேலை என கூறிய நான்கு பேரிடம் 32 வயது நபர் ரூ.37 … Read more

மின்சார வாகனங்கள் வாங்குபவர்களுக்கு குட் நியூஸ்: இந்த வழிகளில் மானியம் பெறலாம்

மின்சார வாகனம் – மானிய போர்டல்: உத்தரப் பிரதேசத்தில் அக்டோபர் 14க்குப் பிறகு மின்சார வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மானியப் பலன்களை வழங்குவதற்காக யோகி அரசாங்கம் upevsubsidy.in என்ற மானியப் போர்ட்டலை லைவ் ஆக்கியுள்ளது. இப்போது அக்டோபர் 14 ஆம் தேதிக்குப் பிறகு EV -களை வாங்கிய வாடிக்கையாளர்கள் இந்த போர்ட்டலுக்குச் சென்று ஆன்லைனில் மானியத்திற்கு விண்ணப்பிக்க முடியும். போர்ட்டலில் விண்ணப்பித்த பிறகு, நான்கு நிலை சரிபார்ப்பு முடிந்தவுடன் மானியத் தொகை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும். … Read more

ஆபாச சாட்டிங்கில் சிக்க வைக்கும் வாட்ஸ்அப் கால் – மோசடி கும்பலின் புதிய யுக்தி: எச்சரிக்கை

நாளுக்கு நாள் மாறும் தொழில்நுட்பம் நமது அன்றாட வேலையை எளிதாக்குகிறது. நாம் அனைவரும் வாட்ஸ்அப் உள்ளிட்ட தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதை படிப்படியாக அதிகரித்து வருகிறோம். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது கவனமாக இருக்குமாறு நிபுணர்கள் பலமுறை கேட்டுக் கொண்டுள்ளனர். நம்மில் பெரும்பாலானோர் அதிகமான வாட்ஸ்அப்பை பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த வாட்ஸ்அப் உங்களை ஆபத்தில் ஆழ்த்தலாம். வாட்ஸ்அப்பை தவறாகப் பயன்படுத்தினால், உங்கள் கணக்கில் இருக்கும் லட்சங்கள் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய்கள் ஒரு நொடியில் பூஜ்ஜியமாகிவிடும். இந்த நாட்களில் மோசடி செய்பவர்கள் மக்களை … Read more

13th Gen லேப்டாப்பில் மிரட்டலான லேப்டாப்… அசரவைக்கும் அம்சங்கள்!

ASUS Zenbook Laptop: ஸ்மார்ட்போன்களை போல் தற்போது லேப்டாப்களும் அதிக பயன்பாட்டில் வந்துவிட்டது. அதுவும் கொரோனா பெருந்தொற்றுக்கு பின், வீட்டில் இருந்தே வேலை கலாச்சாரம் அதிகமாகிய பின் இந்த லேப்டாப்கள் தான் ராஜாவாக மாறிவிட்டது எனலாம். இப்போதெல்லாம், யார் வீட்டில் நுழைந்தாலும், எந்த பூங்காவை பார்த்தாலும், எந்த காஃபி ஷாப்பை பார்த்தாலும், எங்கு பார்த்தாலும் ஒரு லேப்டாப்புடன் தான் இருக்கின்றனர். இவர்களின் வேலைகள் அனைத்தும் அந்த மடிக்கணினிகளிலேயே முடிந்துவிடுகிறது.  அந்த காலத்தில் காலையில் காட்டுக்கு சென்று மாலையில் … Read more

இந்த 4 தொழில்களில் உடனடியாக AI மற்றும் Chatgpt பயன்படுத்தி அதிகமாக பணம் சம்பாதிக்கலாம்

சாட்ஜிபிடி போன்ற ஏஐ தொழில்நுட்பங்களை புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவதற்கும், நேரத்தைச் சேமிப்பதற்கும், தங்கள் ஊழியர்களுக்கு உதவுவதற்கும், அவர்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கும், அதிக பணம் சம்பாதிப்பதற்கும் வளர்ந்து வரும் இந்த தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகளை அதிகமான வணிக உரிமையாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர். பெரிய நிறுவனங்கள் பல ஆண்டுகளாக AI-ன் ஆற்றலைப் பயன்படுத்தி வருகின்றன. இப்போது சிறிய வணிகங்களுக்கு குறைந்த பட்ஜெட்டில் இதனை பயன்படுத்திக் கொள்ள முடியும் சூழல் உருவாகியுள்ளது.  நேரத்தை பணமாக்கும் ஏஐ தொழில்நுட்பங்கள் கார் டீடெய்லிங் பிளானட்டின் … Read more