ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ் கௌரவ சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வலவை சந்தித்தார்

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ் (Marc-André Franch) கௌரவ சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வலவை நேற்று (04) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்து கொண்டார். இன மற்றும் மத பதட்டங்களைக் குறைத்து தேசிய ஒற்றுமையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட அரசாங்கத்தின் கொள்கைகளை பிராஞ்ச் பாராட்டினார். அரசியல்வாதிகள் மீது பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்காக, சட்டமியற்றும் செயற்பாட்டில் பொதுமக்கள் ஆலோசனையின் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், இலங்கையில் ஐக்கிய … Read more

2025 வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

2025 வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு குறித்த தீர்மானம் பாராளுமன்றத்தில் இன்று (06) வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது. 2025 வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் பணிகள் மற்றும் கடன் சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு கடந்த 03ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.  இதற்கமைய, நேற்றைய தினமும் (05) இன்றையதினமும் (06) மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை விவாதம் நடைபெற்றது. இன்றைய … Read more

பொது கணக்கு மீதான குழு (கோப்) வின் தலைவர் பதவி எதிர்க் கட்சிக்கு …

அரச கணக்கீட்டு குழுவின்  (கோப்) தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற  குழுக்களின் தலைவர் பிமல் ரத்னாயக்க இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய பாராளுமன்ற  குழுக்களின் தலைவர்; “அரச கணக்கீட்டுக் குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.  அது போல் அரச கணக்கீட்டுக் குழுவின் அங்கத்தவர்களின் எண்ணிக்கையை நிலையியற்  கட்டளையை விட கூடுதலாக அதிகரித்துள்ளோம்” என்றும் குழுக்களின் தலைவர் பிமல் ரத்னாயக்க மேலும் சுட்டிக் காட்டினார்.

தரமற்ற மருந்துகள் அரசாங்க வைத்தியசாலைக் கட்டமைப்பின் ஊடாக வழங்கப்படுவதில்லை – சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்

தரமற்ற மருந்துகள் அரசாங்க வைத்தியசாலைக் கட்டமைப்பின் ஊடாக வழங்கப்படுவதில்லை – சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் தரமற்ற மருந்துகள் அரசாங்க வைத்தியசாலைக் கட்டமைப்பினால் வழங்கப்படவில்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தரமற்ற மருந்துகள் தொடர்பாக நேற்று (05) செய்தித்தாள்களில் வெளியான செய்தி குறித்து எதிர்க்கட்சியின் பிரதான இணைப்பாளர் கயந்த கருணாதிலக முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய … Read more

பாராளுமன்ற செயற்பாடுகளை ஒழுங்கு முறைப்படுத்துவதற்காகவே நிலையியற் கட்டளையில் சில விடயங்கள்

பாராளுமன்ற செயற்பாடுகளை ஒழுங்கு முறைப்படுத்துவதற்காகவே நிலையியற் கட்டளையில் சில விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன – ஆளும் கட்சி பிரதான இணைப்பாளர் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்ற செயற்பாடுகளை நெறிப்படுத்துவதற்காக நிலையியற் கட்டளையில் சில சில விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் இணைப்பாளர் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்ற செயற்குழுவின் தொடர்பாக நிலமைகளை அதிகரித்தல் தொடர்பாக இன்று (06) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த அமைச்சர் … Read more

இனிப்பு புளியம்பழ” உற்பத்தி அறிமுகம்

சொரணாத்தொட்ட பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்காக புதிய தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் நோக்கில் பயிற்சி நிகழ்ச்சியொன்று சமீபத்தில் சொரணாத்தொட்ட பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இந்த தயாரிப்புகளுக்கு சீனாவில் அதிக தேவை உள்ளதுடன் பிரதேச செயலாளரின் சீன பயணத்திற்குப் பிறகே அவரது யோசனைப்படி இந்த தயாரிப்பானது தொடங்கப்பட்டுள்ளது.இதற்கான நிதி உதவியை சொரணாத்தொட்ட விதாத்தா வள நிலையம் வழங்கியுள்ளது. அத்துடன் விரைவில் இந்தத் தயாரிப்புகளை கடைகளில் பெற்றுக் கொள்ள முடியும்

விவசாயிகளின் வாழ்க்கையை உயர்த்துவதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் – விவசாய அமைச்சர் 

* விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை நோக்காகக் கொண்டு சகல விவசாய வேலைத் திட்டங்களுக்கான யோசனைகளும் தயாரிக்கப்படும். * அரசியல் கலாச்சாரத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் அரசாங்க சேவையிலும் ஏற்படுத்தப்பட வேண்டும். * தோல்வியுற்றவர்களை பழிவாங்குவதற்கு வரலாறு முழுவதும் காணப்பட்ட அரசியல் கலாச்சாரம் தற்போதைய அரசாங்கத்தினால் மாற்றப்பட்டது விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் கே. டி. லால் காந்த நேற்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இடைக்கால கணக்கறிக்கையுடன் சம்பந்தப்பட்ட … Read more

ஜனாதிபதிக்கும் மதுவரித் திணைக்கள  சிரேஷ்ட  அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதிக்கும் மதுவரித் திணைக்கள  சிரேஷ்ட  அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு மதுவரி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் ஒழுங்கான முறைமை பின்பற்றப்பட வேண்டும்                                                                                   … Read more

விவசாயிகளுக்கு நல்ல சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்கு உத்தரவாதம்

விவசாயிகளுக்கு மிகவும் சிறந்த சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்கான உத்தரவாதத்தை விவசாயிகளுக்கு வழங்குவதாக கமத்தொழில் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ண தெரிவித்தார். கடந்த சில நாட்களாக காணப்பட்ட அசாதாரண காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமை தொடர்பாக நேற்று (04)பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டார். தற்போது 8 இலட்சம் ஹெக்டயர் நிலத்தில் நெல் செய்கை பண்ணப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்திற்கும் விவசாயிகளுக்கு எதிர்வரும் சில தினங்களில் பசளைக்காக நிதி … Read more

கேகாலை மாவட்டத்தில்  மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது

டிசம்பர் மூன்றாம் திகதி உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சமூக சேவைத் திணைக்களம் மற்றும் மாவட்ட செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தினக் கொண்டாட்டம் நேற்று கேகாலை நகரசபை மண்டபத்தில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. அனைவரையும் வரவேற்று மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாக) கே.ஜி.எஸ். நிஷாந்த் வரவேற்புரையை நிகழ்த்தியதோடு , சமூக சேவைத் திணைக்களத்தின் இயக்குநர் தர்ஷினி கருணாரத்ன மற்றும் மாவட்ட செயலாளர் ஃ மாவட்ட நீதிபதி ரஞ்சன் ஜயசிங்க ஆகியோர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் … Read more