ஜனாதிபதி மற்றும் உலக வங்கிக் குழுமத்தின் தலைவருக்கு இடையில் சந்திப்பு

2025 இல் திறக்கப்படவுள்ள 20 தெற்காசிய கூட்டு அலுவலகங்களின் அனுசரணை நாடாக இலங்கை இணைவு இலங்கையின் வறுமையை ஒழித்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல்,பொருளாதார அபிவிருத்தி குறித்து அவதானம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கல்வி மற்றும் சுகாதார துறைகளை மேம்படுத்துவது குறித்து கவனம் இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் உலக வங்கியின் தலைவர் அஜே பங்கா (Ajay Banga) ஆகியோருக்கு இடையில் நேற்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் இணையத் தொடர்பாடல் … Read more

யாழ்ப்பாணத்தில் அனர்த்த நிவாரணப் பணிகளை பாதுகாப்புச் செயலாளர் பார்வையிட்டார்

பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) இன்று (நவம்பர் 28) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து அங்கு நடைபெற்று வரும் அனர்த்த நிவாரணப் பணிகளை பார்வையிட்டடார். அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் (DMC) மேஜர் ஜெனரல் உதய ஹேரத் (ஓய்வு) மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள சிரேஷ்ட முப்படை அதிகாரிகளுடன் அவர் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகளை சந்தித்து தற்போதைய நிலைமை மற்றும் முப்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நிவாரணப் … Read more

பிரதி பாதுகாப்பு அமைச்சர் கடமை பொறுப்பேற்பு 

மேஜர் ஜெனரல் கேபீஎ ஜயசேகர (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ பிரதி பாதுகாப்பு அமைச்சராக (25 நவம்பர் 2024)  நேற்றைய தினம் கொழும்பு – 07, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார். இந் நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார்.  நிகழ்வின் போது, அதிமேதகு ஜனாதிபதியும், இலங்கை ஆயுத படைகளின் சேனாதிபதியுமான அனுரகுமார திஸாநாயக்க, வினைத்திறனான அனர்த்த முகாமைத்துவத்திற்கு … Read more

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அனர்த்த நிலைமை நிவாரண நடவடிக்கைகளை பார்வையிட மன்னார் விஜயம்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மன்னார் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலைமை மற்றும் நிவாரணப் பணிகளை பார்வையிட்ட நேற்று முன்தினம் (நவம்பர் 26) மாலை அவசர விஜயமொன்றை மேற்கொண்டார். பிரதி அமைச்சர் ஜயசேகர, இராணுவ மற்றும் கடற்படை தளபதிகள், மாவட்ட செயலாளர், அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் மற்றும் முப்படை அதிகாரிகளுடன் தற்போது நிலவிவரும் அசாதாரண காலநிலை காரணமாக அனர்த்ததினால் இப்பிரதேசத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்தார்.அனர்த்ததினால் … Read more

மட்டக்களப்பில் தொடர்கிறது வெள்ள அனர்த்தம் :15,900 குடும்பங்கள் பாதிப்பு – அரசாங்க அதிபர் களத்தில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை சற்று ஓய்ந்துள்ள நிலையில் மாவட்டத்தின் பிரதான தரை வழிப்போக்குவரத்து சில இடங்களில் தற்போது வரையிலும் முற்றாகத் தடைப்பட்டுள்ள நிலையே காணப்படுகின்றதுடன் மாவட்டத்தில் இதுவரை 15,900 குடும்பங்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்டு இரண்டு இடைத்தங்கல் முகாம்களான ஆனைப்பந்தி மகா வித்தியாலயம் மற்றும் கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை இன்று (28) திகதி … Read more

அசாதாரண காலநிலை காரணமாக உயர் தரப்பரீட்சை மேலும் 03 நாட்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது

நிலவுகின்ற அசாதாரண காலநிலை காரணமாக 2024 க.பொ.த உயர் தரப்பரீட்சை மேலும் 03 நாட்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் டிசம்பர் மாதம் 03ஆம் திகதி வரை உயர் தரப்பரீட்சைகள் இடம்பெறமாட்டாது என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்தார். பரீட்சைத் திணைக்களத்தில் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் டிசம்பர் மாதம் 04ஆம் திகதி முதல், முன்னர் வெளியிடப்பட்ட கால அட்டவணைக்கமையவே பரீட்சைகள் இடம்பெறும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் … Read more

புதிய சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வலவுக்கு சீன பாராளுமன்ற சபாநாயகரின் வாழ்த்து

ஊடக அறிக்கை புதிய சபாநாயகர் கௌரவ கலாநிதி அசோக ரன்வலவுக்கு சீன பாராளுமன்ற சபாநாயகரின் வாழ்த்து இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் சபாநாயகர் கௌரவ கலாநிதி அசோக ரன்வலவை அண்மையில் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார். சீன தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்ற சபாநாயகர்) ஸாவோ லெஜி (Zhao Leji)  அவர்களின் வாழ்த்துக்களை இதன்போது சீனத் தூதுவர் பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள … Read more

சீரற்ற காலநிலை காரணமாக 66,947 குடும்கங்கள் பாதிப்பு

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த, 141 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட 66,947 குடும்பங்களைச் சேர்ந்த 230,743 பேர் பாதிப்புக்குயள்ளாகியுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் உதய ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (27) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதேவேளை, தற்போது மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண சேவைகள் இடம்பெற்று வருவதாக, இந்த ஊடகவியலாளர் … Read more

அம்பாறைக்கு கண்காணிப்புக்காக சென்ற ஹெலிகாப்டர் மூலம் வாழைச்சேனையில் ஒருவர் காப்பாற்றப்பட்டார்

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக மேலும் விமானப் படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதன்படி நேற்று (2024 நவம்பர் 27) ஏழாம் இலக்க பிரிவின் பெல் 212 ஹெலிகாப்டர் விமானம் அம்பாறை பிரதேசத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்டது. இதன் போது வாழைச்சேனை, தொழுவிளச்சிய பிரதேசத்தில் அனர்த்தத்திற்கு உள்ளான நபர் ஒருவர் விமானப்படையினால் காப்பாற்றப்பட்டதுடன், அவ்விமானம் மூலம் மட்டக்களப்பு விமானப்படை முகாமிற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு, ஒப்படைக்கப்பட்டார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் தன்னார்வ பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் முரண்பாடுகள் குறித்து சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு..

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தன்னார்வ தொண்டு சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் முரண்பாடு தொடர்பாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது மூன்று வருடங்களுக்கும் அதிகமான காலம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில், தன்னார்வ தொண்டு கனிஷ்ட சேவையில் ஈடுபட்டுள்ள 300க்கும் அதிகமான தன்னார்வ ஊழியர்கள் எதிர்கொள்ளும் முரண்பாடுகள் தொடர்பாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ விடம் முன்வைப்பதற்காக ஊழியர்களின் பிரதிநிதிகள் நேற்று (26) சுகாதார … Read more