ஏஐ மூலம் டீப் பேக் வீடியோ : அபிராமி கோபம்

சமீபகாலமாக ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் டீப் பேக் வீடியோக்கள் அதிகமாக வெளியாகி கொண்டிருக்கின்றன. ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைப், ஆலியா பட், கஜோல் ஆகியோரின் போலியான ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. தற்போது நடிகை அபிராமி வெங்கடாசலத்தின் டீப் பேக் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் அவர் நிர்வாணமாக சித்தரிக்கப்பட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அபிராமி வெங்கடாசலம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் சந்தித்த மோசமான மனிதர்களுக்கு கூட இப்படி நடக்க கூடாது. இதன் … Read more

Malaikottai Vaaliban box office: மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன்.. 5 நாளில் அள்ளிய வசூல் எவ்வளவு?

திருவனந்தபுரம்: இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த ஜனவரி 25ம் தேதி வெளியான மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், வசூல் ரீதியாக படம் எப்படி ஓடுகிறது என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மலைக்கோட்டை வாலிபன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த ரசிகர்கள் பீமசேனன் போல மாயாவியாக மோகன்லால்

தெலுங்கு சீரியலில் நடிக்கும் பாத்திமா பாபு

செய்திவாசிப்பாளரான பாத்திமா பாபு சின்னத்திரையில் மிகவும் பிரபலமான முகமாக வலம் வருகிறார். சின்னத்திரைக்கு முன்பாக ஏராளமான படங்களில் குணச்சித்ர கதாபாத்திரங்களில் நடித்து வந்த பாத்திமா பாபு யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக என்ட்ரி கொடுத்து அசத்தினார். அதன்பின் சீரியலில் அவரை பார்க்க முடியவில்லை. இந்நிலையில் அவர் தற்போது தெலுங்கு சீரியல் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள பாத்திமா பாபு, 'இன்று – புதிய தெலுங்கு சீரியலில் முதல் நாள்' என்று தனது புகைப்படங்களுடன் … Read more

Samantha: சிட்டாடல் படப்பிடிப்பில் மயங்கி விழுந்த சமந்தா.. பதறிப்போன படக்குழு!

சென்னை: மையோசிடிஸ் என்னும் தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட சமந்தா, சினிமாவிலிருந்து பிரேக் எடுத்தார். அதன் பின் சாகுந்தலம் படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அடுத்ததாக குஷி படத்தில் நடித்தார். ஆனால் இரண்டு படங்களுமே சரியாக போகவில்லை. இதனையடுத்து குட்டி பிரேக் எடுத்துக்கொண்ட சமந்தா, சிட்டாடல் வெப் சீரிஸின் இந்திய வெர்ஷனில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பின்

அப்பாக்களின் மகிழ்ச்சியில் சாந்தனு, பிரித்வி

'வாரிசுகள்' என்று சொன்னாலும் அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி வெற்றி என்பது தானாக வந்துவிடாது. அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும், அதற்கான நேரமும் வர வேண்டும். அப்போதுதான் பெயரும் கிடைக்கும், புகழும் கிடைக்கும். 80களில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்கள் மற்றும் நடிகர்களாக விளங்கியவர்கள் பாக்யராஜ், டி ராஜேந்தர், பாண்டியராஜன். இவர்களில் டி ராஜேந்தர் மகன் கதாநாயகனாக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுவிட்டார். ஆனால், பாக்யராஜ் மகன் சாந்தனு, பாண்டியராஜன் மகன் பிரித்வி ஆகியோர் சில படங்களில் கதாநாயகனாக … Read more

அய்யோ என்ன இதெல்லாம்.. ஒரு கையில் சரக்குடன் போஸ் கொடுத்த மிருணாள் தாகூர்!

சென்னை: சீதாராமம் படத்தில் நடித்து இந்தியா முழுக்கவே பிரபலமான நடிகை மிருணாள் தாகூர் கையில் சரக்குடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து ரசிகர்களை திக்குமுக்காடவைத்துள்ளார். மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கி ஹிந்தி நாடகங்களில் கதாநாயகியாக நடித்து, சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால் பதித்தவர் தான் நடிகை மிருணாள் தாக்கூர். மிருணாள் தாகூர், ஹிந்தி, மராத்தி,தெலுங்கு மற்றும் தமிழ்

Blue Star: "வெற்றி விழா மேடைகளை நிறையப் பார்த்திருக்கேன்; இப்போ நானே அந்த மேடையில்…" – பிரித்வி

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் கடந்த வாரம் திரையரங்கில் வெளியாது ‘ப்ளூ ஸ்டார்’. அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பிரித்வி உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். கிரிக்கெட்டே வாழ்க்கையாகக் கருதும் இரு அணிகள் வழியாக சமூக அரசியல் பேசும் இத்திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பையும், நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, நடிகரும், இயக்குநர் பாண்டியராஜன் மகனுமான பிரித்வி நடித்த ‘சாம்’ கதாப்பத்திரம் … Read more

திரையுலகில் 28 ஆண்டுகள் நிறைவு : நன்றி சொல்லும் சுதீப்

'நான் ஈ' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர் கன்னட நடிகர் சுதீப். அதன்பின் தமிழில் 'பாகுபலி 1, புலி, முடிஞ்சா இவன புடி' ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி, தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ள சுதீப் திரையுலகில் நுழைந்து 28 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். “இந்த அற்புதமான என்டர்டெயின்மென்ட் துறையில் 28 அழகான ஆண்டுகள் என்பது எனது வாழ்க்கையில் மிக அழகானதொரு பகுதி. இந்த ஈடு இணையற்ற பரிசுக்குக் கடவுளுக்கு … Read more

Dhanush: ரத்தான படப்பிடிப்பு..ஏழுமலையானை நாடி வந்த தனுஷ்!

சென்னை: சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷின் 51வது படம் உருவாகிறது. படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கத் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் இப்படத்தின் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பூஜை நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு

சிட்டாடல் – சமந்தா தந்த அப்டேட்

தமிழ், தெலுங்கு, அடுத்து ஹிந்தி வரை சென்றுள்ள சமந்தா தற்போது ஹிந்தியில் 'சிட்டாடல்' வெப் சீரிஸில் நடித்துள்ளார். 'த பேமிலிமேன் 2' வெப் சீரிஸை இயக்கிய ராஜ், டிகே ஆகியோர்தான் இத்தொடரையும் இயக்கியுள்ளார்கள். இத்தொடர் குறித்த அப்டேட் ஒன்றை சில புகைப்படங்களுடன் சமந்தா, வருண் தவான் இருவரும் இணைந்து கொடுத்திருக்கிறார்கள். “கடைசியாக, சிலவற்றை நாங்கள் பார்த்தோம், அது எங்களுக்குப் பிடித்திருந்தது,” என்பதுதான் 'சிட்டாடல்' பற்றி அவர்கள் கொடுத்த அப்டேட். லேப்டாப்பில் இயக்குனர்கள் ராஜ், டிகே ஆகியோருடன் சமந்தா, … Read more