துபாயில் 67மாடிகள் கொண்ட மெரினா அடுக்குமாடி கட்டித்தில் பயங்கர தீவிபத்து – 3800 பேர் மீட்பு…

துபாய்: துபாயில் உள்ள  67 மாடிகளைக்கொண்ட மெரினா கட்டிடத்தில்  இன்று திடீரென பயங்கர  தீ விபத்து  ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் இருந்து சுமார் 3800 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. துபாயில் 67 மாடிக் கட்டடத்தில் தீ விபத்துக்குள்ளானது.  இதையடுத்து, அங்கு உடனடியாக குளிரூட்டும் பணி தொடங்கியது. இதனால் தீ பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் தீயணைப்பு துறையினர் உள்பட பேரிடர் மீட்பு படையினர் விரைந்து பணியாற்றி சுமார் 6மணி நேரம் போராடி தீ … Read more

Gene therapy: வைரஸ் மூலம் மரபணு சிகிச்சை; பார்வையை மீட்ட குழந்தைகள்.. மருத்துவ உலகில் முக்கிய சாதனை!

பரம்பரை மரபணு நோயால் கண்பார்வை இழந்த குழந்தைக்கு இங்கிலாந்தில் மரபணு சிகிச்சை (Gene therapy) மூலம் கண்பார்வை கிடைக்கச் செய்துள்ளனர். இந்த சாதனை எப்படி நடந்தது என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். ஒவ்வொரு உயிரிகளின் உடலமைப்பும் மற்றும் செயல்பாடும் வித்தியாசமானவை. இந்த வித்யாசத்திற்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் உயிரிகளின் மரபணுத் தொகுப்பில்தான் (Genome) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவல்களின் அடிப்படையிலேயே அனைத்து உயிரிகளும் இயக்குகின்றன. மனித மரபணுத் தொகுப்பு மனித மரபணுத் தொகுப்பு சுமார் 320 கோடி … Read more

ரூ.2100 கோடி மதுபான ஊழல்: காங்கிரஸ் கட்சி அலுவலகம் மற்றும் முன்னாள் அமைச்சரின் சொத்துக்கள் முடக்கம்…

ராஞ்சி: சத்திஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற ரூ.2,100 கோடி மதுபான ஊழல் வழக்கில், மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகம் மற்றும் முன்னாள் அமைச்சரின் ரூ.6கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.  இது பா.ஜ.க-வின் அரசியல் சதி என்று சத்தீஸ்கர் காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. சத்தீஸ்கரில் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்ரூ.2,100 கோடி மதிப்பிலான மதுபான ஊழல்  நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதன்மீதான பணமோசடி வழக்கின் முக்கிய நடவடிக்கையாக, சத்திஷ்கர் … Read more

Israel: 'இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் ராணுவம்' – ஏன்?

இந்தியாவின் எல்லைகளைத் தவறாக காட்டியதற்காக மன்னிப்பு கேட்டுள்ளது இஸ்ரேல் ராணுவம். இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடுமையான மோதல்கள் எழுந்துள்ளன. ஈரானின் அணு ஆயுத மையம் உட்பட பல இடங்களில் இஸ்ரேல் நாடந்திய தாக்குதலில், அந்த நாட்டின் தலைமை ராணுவ அதிகாரி உயிரிழந்துள்ளார். ஈரான் இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது. குறிப்பாக இஸ்ரேல் தலைநகர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. Range of iran missiles இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் எப்போது வேண்டுமானாலும் முழுமையான … Read more

அதிகார மோதல்: ராமதாஸ் தலைமையில் நாளை பாமக புதிய மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

சென்னை: பாமகவில் தந்தை மகனுக்கு இடையே எழுந்துள்ள அதிகார மோதல் காரணமாக, பாமக நிறுவனர் ராமதாஸ் பல புதிய மாவட்டச் செயலாளர்களை நியமனம் செய்து அறிவித்துள்ள நிலையில், அவர்களுடன் நாளை ஆலோசனை மேற்கொள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பாமகவில் எழுந்துள்ள மோதல் காரணமாக,  ராமதாஸ் இதுவரை  55 மாவட்ட செயலாளர்கள், 33 மாவட்ட தலைவர்கள் மாற்றியுள்ளார். அவர்களுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.  பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே  ஏற்பட்டு வந்த  கருத்து … Read more

Israel Vs Iran: “Operation True Promise 3-இஸ்ரேலின் 6 இடங்களை குறிவைத்து தாக்கியிருக்கிறோம்"- ஈரான்

கடந்த சில நாள்களாக, ‘ஈரானில் அணு ஆயுத தயாரிப்பு’ என்ற பேச்சு அடிப்பட்டு வந்தது. இதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கிடையில் ஜூன் 12 அன்று ஈரானின் அணுசக்தி தளங்கள் மற்றும் இராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் ‘ஆபரேஷன் ரைசிங் லையன்’ என்றப் பெயரில் தாக்குதல் நடத்தியது. ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரித்துவிடுமோ என்கிற இஸ்ரேலின் அச்சம்தான் இந்தத் தாக்குதலின் பின்னணி என கூறப்படுகிறது. ஈரான் அதிபர் அதற்கு எதிர்வினையாற்றும் வகையில், இஸ்ரேலின் இராணுவத் … Read more

ஸ்பேஸ் ஆக்ஸ்- 4: ஜூன் 19ல் விண்வெளிக்கு பயணமாகிறார்கள் சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்கள்…

புளோரிடா: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர்  வரும் 19ந்தேதி  பயணமாகிறார்கள் என நாசா அறிவித்துஉள்ளது. ஏற்கனவே ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 பயணம் 5 முறை தொழில்நுட்ப கோளாறுகளால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஜூன் 19ல் விண்வெளிக்கு பயணமாகிறார்கள்  என அறிவிக்கப்பட்டு உள்ளது.  இதை இஸ்ரோவும் உறுதி செய்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான  நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக , சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு … Read more

“டிக்கெட் வாங்காமல் விமானத்தில் 120 தடவை பயணம்'' – மோசடி ஆசாமி செய்த வேலை..

அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயதான டைரன் அலெக்சாண்டர் என்பவர், தன்னை ஒரு விமான பணியாளராக காட்டிக்கொண்டு விமானங்களில் இலவசமாக பயணித்துள்ளார். கிட்டத்தட்ட 120-க்கும் மேற்பட்ட விமானங்களில் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளார். 2018 முதல் 2024 வரை அலெக்சாண்டர் விமான குழுவினர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய அணுகும் முறையை பயன்படுத்தி அவர்களுக்கான சலுகைகள் மூலம் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளார். Flight (Representational Image) அமெரிக்கன் ஏர்லைன்ஸ், ஸ்பிரிட், யுனைடெட், டெல்டா போன்ற முக்கிய அமெரிக்க விமான நிறுவனங்களில் டிக்கெட் … Read more

ரூ397 கோடி டிரான்ஸ்பார்மர் ஊழல் வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புதிய நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

சென்னை; தமிழ்நாட்டில், மின்மாற்றி கொள்முதலில் (டிரான்ஸ்பார்மர்) முறைகேடு நடைபெற்றுள்ளதாக ‘அறப்போர் இயக்கம்’ சார்பில் தொடரப்பட்ட வழக்கில், திமுகவைச்சேர்ந்த முன்னாள் மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  புதிய நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு மின்சாரத்துறையில் மின்மாற்றி கொள்முதல் டெண்டர் தொடர்பான முறைகேடு வழக்கில் அந்த துறையின் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு புதிய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (TANGEDCO) மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் சுமார் ரூ397 … Read more

Tourist family: `ஆட்டோவில் கிடைத்த மகிழ்ச்சி, அளவிட முடியாது' -இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நெகிழ்சி

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநர் ஆட்டோவில் பயணித்த போது, அங்கு நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அறிமுக இயக்குனரான அபிஷன் ஜீவிந்த், சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர் ஆகிய நடிகர் பட்டாளத்தை வைத்து டூரிஸ்ட் ஃபேமிலி என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி ஜனரில் மக்களுக்கு எடுத்துக்காட்டிருந்தனர். இந்த படத்திற்கு பொதுமக்கள் மத்தியில் … Read more