T20 World Cup Final: "இந்தப் போட்டியிலும் அது நடக்க வேண்டும்!" – டாஸில் ரோஹித் சர்மா சொன்ன மெசேஜ்

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி தொடங்கியிருக்கிறது. டாஸை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வென்றிருக்கிறார். டாஸில் இரண்டு அணிகளின் கேப்டன்களும் பேசியவை இங்கே. Rohit Sharma டாஸில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியவை, “நாங்கள் முதலில் பேட் செய்கிறோம். இது நல்ல பிட்ச்சாக தெரிகிறது. இங்கே ஒரு போட்டியில் ஆடியிருக்கிறோம். இங்கே நல்ல ஸ்கோர்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இது ஒரு மாபெரும் தருணம். ஆனாலும் நாங்கள் பதற்றப்படாமல் அமைதியாக இருக்க வேண்டும். இதை … Read more

நீட் கேள்வித் தாள் கசிவு விவகாரம் தொடர்பாக குஜராத்தில் 7 இடங்களில் சிபிஐ ரெய்டு…

நீட்-யுஜி தாள் கசிவு வழக்கில் குஜராத்தில் 7 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனந்த், கெடா, அகமதாபாத் மற்றும் கோத்ரா ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் MBBS, BDS, AYUSH மற்றும் மருத்துவம் தொடர்புடைய பிற படிப்புகளுக்கான சேர்க்கைக்காக NTA ஆல் NEET-UG தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5ஆம் தேதி வெளிநாடுகளில் 14 … Read more

சென்னை: புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் லிஃப்ட் அறுந்து விபத்து – ஒருவர் பலி

சென்னை, புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு சுமார் 112 கோடி ரூபாய் செலவில் 1,920 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டது. இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீடுகள் தரமற்றதாக இருப்பதாக அந்த குடியிருப்பில் உள்ள மக்கள் புகார் அளித்ததை அடுத்து, இதுபற்றிய விவாதங்கள் அப்போதைய சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. அதைத் தொடர்ந்து ஐ.ஐ.டி நிறுவனம் அங்கு ஆய்வு மேற்கொண்டதில் தரமற்ற கட்டுமானப் பொருள்களைக் கொண்டுதான் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டது தெரியவந்தது. இது பெரும் … Read more

சென்னை யானை கவுனி ரயில்வே மேம்பாலம் விரைவில் திறக்கப்படும் ?

வேப்பேரிக்கும் – யானை கவுனிக்கும் இடையே கட்டப்பட்டு வந்த ரயில்வே மேம்பாலத்தின் இரண்டாவது வழித்தடம் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனையடுத்து இந்த மேம்பாலம் விரைவில் முழு அளவிலான வாகன போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மேம்பாலம் சிதிலமடைந்ததை அடுத்து 2019ம் ஆண்டு இந்த மேம்பாலம் இடிக்கப்பட்டது. புதிய மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இதன் ஒரு பகுதி பணிகள் முடிக்கப்பட்டது வாகன போக்குவரத்துக்கு … Read more

குற்றாலம் ஐந்துருவி சொகுசு லாட்ஜ்.. ஆண்கள் மத்தியில் அவ்வளவு கிராக்கி.. உள்ளே பார்த்து மிரண்ட போலீஸ்

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்ட தொடங்கி உள்ளது. ஐந்தருவில் உள்ள தனியார் விடுதியில் ‘ஸ்பா’ என்ற பெயரில் ஆண்களுக்கு மசாஜ் செய்யும் சென்டர் திடீரென பிரபலம் ஆகி உள்ளது. அங்கு சென்று போலீசார் விசாரித்த போது தான் அங்கு என்ன நடந்தது என்பது தெரியவந்துள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஏராளமான அருவிகள் உள்ளன. Source Link

தங்கம் விலை அதிரடி உயர்வு… நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியவை!

Gold Rate: தங்கம் விலை ஏற்ற இறக்கமாகவே காணப்படும் நிலையில், திடீரென இரண்டு நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. உலக சந்தையில் ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் தங்கம் விலை கிட்டத்தட்ட 2 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்திய சந்தையில் தங்கம் விலை 1 சதவிகிதம் மேல் உயர்ந்து உள்ளது. தங்கம் விலை திடீர் உயர்வுக்கு காரணம் என்ன? அமெரிக்காவில் மே மாதத்துக்கான பணவீக்க விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, பணவீக்கம் எதிர்பார்ப்புக்கு ஏற்பவே இருக்கிறது. மேலும், … Read more

நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகர் பிறந்தநாள் இன்று…

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலைவெங்கடேசன் முகநூல் பதிவு… ஆர்.எஸ்.மனோகர்.. நாடகக் காவலர் என பெருமை பெற்றவர். இன்று 99 ஆவது பிறந்தநாள். அதாவது நூற்றாண்டு தொடங்குகிறது.. ராஜாம்பாளில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கி வில்லனாக மாறியவர். தாய் உள்ளம் 1952) படத்தில் இவர் ஹீரோ. அப்போது ஹீரோ வாய்ப்பு கிடைக்காத, ஜெமினி கணேசன் வில்லன். போதையில் பாடுகிற, “அடிக்கிற கைதான் அணைக்கும்” என்ற இவரின் வண்ணக்கிளி(1959) பாடல் என்றைக்குமே மறக்க முடியாது. அதேபோல வல்லவன் ஒருவன் படத்தில் ஷீலா … Read more

டெல்லியை தொடர்ந்து.. குஜராத்தின் ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து!

காந்தி நகர்: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. நேற்றுதான் டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல்-1ன் மேற்கூரை இடிந்து விழுந்திருந்தது. இதில், இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று அதிகாலை வரை பெய்த மழை காரணமாக Source Link

திமுக அரசின் மதுவிலக்கு திருத்தச் சட்டம் பலன் தருமா?! – ஒரு பார்வை

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. மேலும், அந்தச் சம்பவம் தி.மு.க அரசுக்கு அவப்பெயரை உண்டாக்கியது. தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகளே போராட்டத்தில் இறங்கின. கள்ளச்சாராயம் இந்த நிலையில், மதுவிலக்கு திருத்தச் சட்டத்தை தமிழக அரசு தற்போது கொண்டுவந்திருக்கிறது. தற்போது நடைபெற்றுவரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார். அப்போது அவர், “கள்ளச்சாராயம், போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு … Read more

வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டு புள்ளி விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்! அவையில் இருந்து பாமக வெளிநடப்பு

சென்னை: வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டு புள்ளி விவரங்களை வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையில் இருந்து இன்று (சனிக்கிழமை) வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பாமக சட்டப்பேரவை தலைவர் ஜி.கே.மணி கூறியதாவது: சட்டப்பேரவையில் இடஒதுக்கீட்டுக்கான பிரச்சினை குறித்து பேசிய நேரத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இடஒதுக்கீடு குறித்து பேசிய போது, “பிஹார் மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தியதை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு … Read more