தமிழக முதல்வர் விரைவில் அமெரிக்கா பயணம்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார். இன்று சட்டசபை கூட்டத்தொடரில் தொழில்துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு தமிழக் அமைச்சர் டி ஆர் பி ராஜா பதில் அளித்தார் அப்போது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ”தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆண்டுக்கு 10 லட்சம் என்ற அடிப்படையில், 31 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளார். அந்த வரிடையில் விரைவில் 50வது சிப்காட் பூங்காவை முதல்வர் தொடங்கி வைப்பார். தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க தமிழக … Read more

88 ஆண்டுகள் இல்லாத மழை… வெள்ளத்தில் தத்தளிக்கும் தலைநகர்

புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. சுட்டெரிக்கும் வெப்பத்துக்கு மத்தியில் குடிநீர் தட்டுப்பாடும் நிலவியதால் குடியிருப்புவாசிகள் சிரமப்பட்டனர். கோடை வெப்பம் எப்போது தணியும், மழை எப்போது பெய்யும் என்று டெல்லிவாசிகள் காத்திருந்தனர். இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசான மழை பெய்து, வெப்பத்தை குறைத்திருந்தது. இதற்கிடையே நேற்று முன்தினம் நள்ளிரவுக்குப் பிறகு வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து நேற்று அதிகாலை 2 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் … Read more

தலைமறைவாக இருந்த பயங்கரவாதி சென்னையில் கைது

சென்னை சென்னை கோயம்பேட்டில் பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். அனோவர் என்ற பயங்கராவதி உபா சட்டத்தில் தேடப்பட்டு வந்தவர் ஆவார்  இன்று பயங்கரவாதி அனோவர் கோயம்பேட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அனோவர் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார் இவர் அன்சார் அல் இஸ்லாம் என்ற பயங்கரவாத அமைப்பில் தொடர்புடையவர் என தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்காளத்தில் இருந்து தலைமறைவாகி சென்னையில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த அனோவரை மேற்கு வங்காள காவல்துறையினர் கைது … Read more

மத்திய வெளியுறவுத்துறை செயலாளராக விக்ரம் மிஸ்ரி நியமனம்

புதுடெல்லி, மத்திய வெளியுறவுத்துறை செயலாளராக வினய் குவாத்ரா பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் ஜூலை 14-ம் தேதி முடிவடைய உள்ளது.இந்நிலையில், புதிய வெளியுறவுத்துறை செயலாளராக விக்ரம் மிஸ்ரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் தேசிய பாதுகாப்பு உதவி ஆலோசகராக இருந்து வருகிறார்.1989-ம் ஆண்டு பிரிவு ஐ.எப்.எஸ். அதிகாரியான விக்ரம் மிஸ்ரி ஜூலை 15-ம் தேதிமுதல் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் பொறுப்பை ஏற்கவுள்ளார். தினத்தந்தி Related Tags : மத்திய … Read more

டிசம்பருக்குள் மருத்துவத்துறை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் : அமைச்சர்

சென்னை தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவத்துறை பணியிடங்கள் வரும் டிசம்பருக்குள் நிரப்படும் என அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இன்று தமிழக சட்டசபையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கொள்கை விளக்கக் குறிப்பை தாக்கல் செய்தார். அந்த விளக்கக் குறிப்பில். ”உதவி மருத்துவர் (பொது) பதவியில் உள்ள 2,553 பணியிடங்கள், உதவி மருத்துவ அலுவலர் (சித்தா) பதவியில் உள்ள 26 பணியிடங்கள், மருந்தாளுநர் பதவியில் உள்ள 425 இடங்கள், கிராம சுகாதார செவிலியர்/தாய்மை துணை செவிலியர் … Read more

பீகாரில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்தது… 9 நாட்களில் 5-வது சம்பவம்

பாட்னா, பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. ரூ.3 கோடி செலவில் கட்டப்படும் இந்தப் பாலம் 2021ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்டு வருகிறது. பீகார் அரசின் ஊரகப் பணிகள் துறையால் இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. பீகாரில் தொடர்ச்சியாக பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் கடந்த ஒன்பது … Read more

காங்கிரஸ் பெண் எம் பி மாநிலங்களவையில் மயக்கம்

டெல்லி இன்று நாடாளுமன்ற மாநிலக்களவையில் காங்கிரஸ் எம் பி புலோ தேவ் நேதம் மயங்கி விழுந்துள்ளார். தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவையில் இன்று ஜனாதிபதியின் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால் அதற்கு முன்பாக நீட் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் முழக்கங்களை எழுப்பினர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. புலோ தேவி நேதம்,அப்போது மயங்கி … Read more

நீட் தேர்வு மற்றும் வினாத் தாள் கசிவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் | பிரதமர் மோடியிடம் ராகுல் காந்தி வலியுறுத்தல்

நீட் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை என்று இந்தியா கூட்டணி கட்சிகள் வலியுறுத்திய நிலையில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “நீட் தேர்வு மற்றும் கேள்வித் தாள் கசிவு விவகாரம் இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் அரசுடன் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த விரும்புகின்றன. இன்று … Read more

Maldives: அதிபருக்கு பில்லி, சூனியம் வைத்த அமைச்சர்? – கைதுசெய்த போலீஸ் – மாலத்தீவில் பரபரப்பு!

மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவுக்கு எதிராக பில்லி, சூனியம் வைத்த சந்தேகத்தின்பேரில் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பேசுபொருளாகியுள்ளது. முன்னதாக, மாலத்தீவு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் ஃபாத்திமா ஷம்மாஸ், அதிபருக்கு எதிராக பில்லி, சூனியம் வைத்ததாக, அவரின் வீட்டில் சந்தேகத்தின் பேரில் போலீஸார் சோதனை நடத்தினர். மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு சோதனையின் இறுதியில் பில்லி, சூனியம் வைத்தது தொடர்பாக பல்வேறு பொருள்கள் அமைச்சரின் வீட்டில் கிடைத்ததாக, ஃபாத்திமாவை … Read more

ஹரியானா அரசுப் பள்ளிகளில் போலியாக 4 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு… சிபிஐ விசாரணைக்கு உத்தரவு…

ஹரியானா அரசுப் பள்ளிகளில் போலியாக 4 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 2014 – 2016ம் ஆண்டுக்கு இடையே போலியாக சேர்க்கப்பட்ட மாணவர்களின் தரவு மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுப் பணம் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த சிபிஐ-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட், நெட் கேள்வித் தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஹரியானா அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் பெயரில் நடைபெற்றிருக்கும் இந்த … Read more