தலைப்பு செய்திகள்
மகள்களை காப்பாற்ற உயிரை விட்ட பிரித்தானிய பெண்! எல்லாம் அழிந்துவிட்டதாக கதறும் கணவர்
அவுஸ்திரேலியாவில் பிரித்தானிய குடும்பத்தின் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில், இரண்டு பிள்ளைகளின் தாய் கொல்லப்பட்டார். பிரித்தானிய பெண்ணின் குடும்பம் அவுஸ்திரேலியாவின் குயிஸ்ன்லாந்து நகரில் பிரித்தானியாவைச் சேர்ந்த எம்மா லொவெல் என்ற பெண், தனது கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். எம்மாவின் குடும்பம் 11 ஆண்டுகளுக்கு முன் பிரித்தானியாவின் Suffolk நகரில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தது. இந்த நிலையில், எம்மாவின் வீட்டிற்குள் 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர். கையில் கத்தி வைத்திருந்த அவர்கள் … Read more
கத்தார் உலகக்கோப்பைக்கு பின் முதல் கோல் அடித்த ஜேர்மன் வீரர்! செல்சி மிரட்டல் வெற்றி
இங்கிலிஷ் கால்பந்து தொடரில் செல்சி அணி 2-0 என்ற கோல் கணக்கில் போர்னேமவுத் அணியை வீழ்த்தியது. மிரட்டிய ஹாவெர்ட்ஸ் இங்கிலாந்தின் Stamford Bridge மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், செல்சி அணி வீரர்கள் துடுப்புடன் ஆட்டத்தை துவங்கினர். அவர்களின் வேகமான ஆட்டத்தின் மூலம் முதல் பாதியிலேயே செல்சி அணிக்கு 2 கோல்கள் கிடைத்தது. ஜேர்மனின் கை ஹாவெர்ட்ஸ் 16வது நிமிடத்தில் கோல் அடித்தார். @GETTY IMAGES/Marc Atkins கத்தார் உலகக்கோப்பையில் கோஸ்டாரிகாவுக்கு எதிராக இரண்டு கோல்கள் அடித்த … Read more
வருமான வரி தாக்கல் டிச.,31 கடைசி நாள்| December 31 is the last date for income tax filing
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: திருத்தப்பட்ட மற்றும் தாமதமான வருமான வரி தாக்கலுக்கான கடைசி வாய்ப்பு, டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, இந்த காலக்கெடுவுக்குள் வருமான வரி தாக்கலை செய்துவிடுமாறு, வருமான வரி துறை அறிவுறுத்தி உள்ளது.கடந்த 2021 – 22ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு கடைசிநாள் ஜூலை 1 ஆகும். அதன் பிறகு அபராதத்துடன் தாக்கல் செய்வதற்கு, கடைசி நாள் டிசம்பர் 31ம் தேதியாகும். மேலும் திருத்தப்பட்ட … Read more
மாலத்தீவுகள், லிதுவேனியாவில் புதிய தூதரகங்கள் திறக்க ஒப்புதல்| Approval to open new embassies in Maldives, Lithuania
புதுடில்லி: மாலத்தீவுகள், லிதுவேனியா ஆகிய நாடுகளில் புதிய தூதரகங்களை திறக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் ஐ.நா.வில் உறுப்பினர்களாக உள்ள 193 நாடுகளில் 48 நாடுகளில் இந்தியா தனது தூதரக அலுவலகங்கள் வைத்துள்ளது.இந்நிலையில் மாலத்தீவுகள் நாட்டில் புதிய தூதரக அலுவலகம் திறக்க கடந்த 2021ம் ஆண்டு மே மாதமும், லிதுவேனியா நாட்டில் புதிய தூதரக அலுவலகம் திறக்க இந்தாண்டு ஏப்ரல் மாதமும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.இதன் அடுத்த நடவடிக்கையாக புதிய … Read more
சுய முன்னேற்றத்துக்கு வாசிப்பு பழக்கம் அவசியம் – ஜனாதிபதி திரவுபதி முர்மு
கல்வியே அடித்தளம் ஜனாதிபதி திரவுபதி முர்மு, தெலுங்கானாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். ஐதராபாத்தில் உள்ள கேசவ் நினைவு கல்வி நிறுவனத்தில் நடந்த 75-ம் ஆண்டு சுதந்திர தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே அவர் உரையாற்றினார். அவர் பேசியதாவது:- கல்வி என்ற அடித்தளத்தில்தான் ஒரு நாடு கட்டி எழுப்பப்படுகிறது. ஒவ்வொரு தனிநபரின் முழு திறமையை வெளிக்கொணர கல்விதான் திறவுகோல். வாசிப்பு பழக்கம் இது, இணையதளம் மற்றும் சமூக வலைத்தள காலம். … Read more
தவிர்க்க முடியாத தோல்வியை கன்சர்வேடிவ் கட்சி சந்திக்கும்! ரிஷி சுனக்கின் தீவிர விமர்சகர் எச்சரிக்கை
பிரித்தானிய கன்சர்வேடிவ் கட்சி தவிர்க்க முடியாத தோல்வியை சந்திக்க நேரிடும் என முன்னாள் அமைச்சர் ஜேக்கப் ரீஸ்-மோக் எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுத் தேர்தல் 2025 பிரித்தானியாவில் 2025ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதைய வாக்கெடுப்பின்படி கன்சர்வேடிவ் கட்சி தொழிலாளர் கட்சியை விட 20 புள்ளிகள் வரை பின் தங்கியுள்ளது. இந்த நிலையில் பிரதமர் ரிஷி சுனக்கின் தீவிர அரசியல் விமர்சகரும், முன்னாள் அமைச்சருமான ஜேக்கப் ரீஸ்-மோக் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பதிலாக தேர்தலில் … Read more
இந்திய அரசியலிலேயே மிகப்பெரிய ஊழல் குடும்பம், சோனியாகாந்தி குடும்பம்தான் – பா.ஜனதா
இந்திய அரசியலிலேயே மிகப்பெரிய ஊழல் குடும்பம், சோனியாகாந்தி குடும்பம்தான் என்று பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. ராபர்ட் வதேரா மனு தள்ளுபடி காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பணபரிமாற்ற விசாரணை நடத்தி வருகிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, ராஜஸ்தான் மாநிலம் பிகனேரில் வதேராவுடன் தொடர்புடைய நிறுவனம் நிலம் வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக இந்த விசாரணை நடக்கிறது. இந்த விசாரணையை ரத்து செய்யக்கோரி, ராபர்ட் வதேரா … Read more