பர்மிங்காமில் நடைபெற்ற உலக வில்வித்தை போட்டியில் இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம்

பர்மிங்காமில் நடைபெற்ற உலக வில்வித்தை போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது.

அமர்நாத் யாத்திரையில் 250 பக்தர்கள் தவிப்பு; கர்நாடக அரசு உதவி எண்கள் அறிவிப்பு| Dinamalar

பெங்களூரு : அமர்நாத் யாத்திரைக்கு சென்ற கர்நாடகாவின் 250 பக்தர்கள் உதவிக்கு சிக்கி தவிக்கின்றனர். இவர்களில் 15 பேர் மட்டுமே இதுவரை தொடர்புக்கு கிடைத்துள்ளனர். மாநில அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோவிலில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்கும் யாத்திரையை பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மோசமான வானிலையால், மேக வெடிப்பு காரணமாக நேற்று முன்தினம் திடீரென பலத்த மழை கொட்டியது. கோவிலுக்கு அருகே … Read more

மத நம்பிக்கைகளை இழிவுபடுத்த யாருக்கும் உரிமை கிடையாது – வெங்கையா நாயுடு

புதுடெல்லி, பெங்களூருவில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:- ஒருவர் தான் விரும்பும் மதத்தை கடைபிடிக்கலாம், தனது மதத்தை குறித்து பெருமைப்பட்டு கொள்ளலாம். ஆனால் மற்றவர்களின் மத நம்பிக்கைகளை இழிவுப்படுத்த யாருக்கும் உரிமை கிடையாது. மதச்சார்பின்மை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவை இந்தியாவின் நெறிமுறைகளின் முக்கிய பகுதியாகும். பன்மைத்துவம் மற்றும் அதன் மதிப்புகள் மீதான இந்தியாவின் உறுதிப்பாட்டை, நாட்டின் சில பகுதிகளில் நடக்கும் சம்பவங்களால் குறைத்து விட முடியாது. இந்தியர்கள் அனைத்து … Read more

சோழர் காலத்தில் கொண்டாடப்பட்ட மாடக்கோயில்; முற்பிறவிகளின் வினைகளை அகற்றும் நாலூர் மயானம்!

உலகத்திலுள்ள ஜீவர்களின் வாழ்வியல் முடியும் இடம் ‘மயானம்’.  மயானம் என்ற வார்த்தையே சற்று பயம் தரக்கூடியதுதான்.‌ ஆயினும் ஜீவர்கள் சகல பற்றுகளும் விட்டொழித்து உண்மை நிலையினை உணர்ந்து மெய்ஞானம் அடையக்கூடிய இடம் இதுவே. எனவே இவ்விடம் மெய்ஞானம் எனப்பெறுகிறது. கும்பகோணம், திருச்சேறை அருகே திருமெய்ஞானம் கிராமத்தில் ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ ஞானபரமேஸ்வரர் திருத்தலம் அமைந்துள்ளது. பொதுவாக கச்சி மயானம், கடவூர் மயானம், காழி மயானம், வீழி மயானம், நாலூர் மயானம் என ஐந்து மயானங்கள் முக்கியமானவைகளாகப் பேசப்படுகின்றன. … Read more

பக்ரீத் திருநாளையொட்டி முதல்வர், கவர்னர் வாழ்த்து

சென்னை: பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அமைதியான, வளமான வாழ்க்கையை வாழ்வதற்கு, நமது இளம் தலைமுறையினருக்கு நற்சிந்தனை, கருணை, பெருந்தன்மை ஆகியவற்றை வழங்குவதற்கு இந்நன்னாளில் உறுதி கொள்வோம். இந்த தியாகத் திருநாளானது நம் அனைவருக்கும் அன்பின் வலிமையையும், நல்லிணக்கத்தையும், உடல்நலன், மகிழ்ச்சியையும், நமது பெரும் முயற்சிகளில் வெற்றியையும் அளிக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்: அமெரிக்கா

வாஷிங்டன்: இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு நீண்ட காலம் பலன் தரும் வகையில் தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது.

சித்தராமையாவுக்கு ரிட்டையர்மென்ட்கைத்தடி வாங்குமாறு பா.ஜ., கிண்டல்| Dinamalar

பெங்களூரு : ”சித்தராமையாவுக்கு, தேர்தல் முடிந்த அத்தியாயம். அவரது இறுதி தேர்தலில் தோற்பது உறுதி,” என பா.ஜ., தெரிவித்துஉள்ளது.இது தொடர்பாக, டுவிட்டரில் பா.ஜ., நேற்று கூறியதாவது:அடுத்த முறை, எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், சித்தராமையா தோற்பது உறுதி. அது, அவரது கடைசி தேர்தல் என்பதில், மாற்று கருத்தே இல்லை. அவருக்கு தேர்தல் முடிந்த அத்தியாயம்.இவரது தோல்விக்கு, காங்கிரசாரே காரணமாக இருப்பர் என்பதை மறக்கக்கூடாது. நீங்கள் (சித்தராமையா) கைத்தடி பிடிக்க வேண்டியதில்லை. மக்களே பிடிக்க வைப்பர். 2023 வரை காத்திருக்காதீர்கள். … Read more

தெலுங்கானாவில் தொடர் மழை; 3 பேர் பலி

ஐதராபாத், தெலுங்கானாவில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.தலைநகர் ஐதராபாத் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதைப்போல நல்கொண்டா, பத்ராத்ரி கொதகுடம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அத்துடன் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அவை வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் பல நீர்த்தேக்கங்கள் திறக்கப்பட்டு … Read more

தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம்

சென்னை: தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று தமிழகம் முழுவதும் 31வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஒரு லட்சம் இடங்களில் நடைபெறும் என அறிவித்து உள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ள இந்த முகாமில், இதில் 2-ம் தவணை, பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவோருக்கு முக்கியத்துவம் … Read more

தமிழ்நாடு முழுவதும் இன்று 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்ததால் மக்கள் நல் வாழ்வுத்துறை மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்களை நடத்துகிறது. தற்போது 78.78 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தகவலை தெரிவித்துள்ளது.