முதியோர், மாற்றுத் திறனாளிகள், கணவனை இழந்த பெண்களுக்கு பிஹாரில் ஓய்வூதியம் ரூ.1,100 ஆக அதிகரிப்பு
பாட்னா: முதியோர், மாற்றுத் திறனாளிகள் உட்பட குறிப்பிட்ட பிரிவினருக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ.400-ல் இருந்து ரூ.1,100 ஆக உயர்த்தி பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். பிஹார் மாநிலத்தில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பிஹார் மாநிலத்தில் ரூ.5,736 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் அவர் பேசும்போது, ‘‘காங்கிரஸ் – ஆர்ஜேடி கூட்டணியின் காட்டாட்சி நடத்தியவர்களிடம் இருந்து … Read more