முதியோர், மாற்றுத் திறனாளிகள், கணவனை இழந்த பெண்களுக்கு பிஹாரில் ஓய்வூதியம் ரூ.1,100 ஆக அதிகரிப்பு

பாட்னா: ​மு​தி​யோர், மாற்​றுத் திற​னாளி​கள் உட்பட குறிப்​பிட்ட பிரி​வினருக்​கான மாதாந்​திர உதவித் தொகையை ரூ.400-ல் இருந்து ரூ.1,100 ஆக உயர்த்தி பிஹார் முதல்​வர் நிதிஷ்கு​மார் அறி​வித்​துள்​ளார். பிஹார் மாநிலத்​தில் வரும் அக்​டோபர் அல்​லது நவம்​பர் மாதங்​களில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில், கடந்த வெள்​ளிக்​கிழமை பிஹார் மாநிலத்​தில் ரூ.5,736 கோடி மதிப்​பிலான நலத்​திட்​டங்​களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்​தார். பிரம்​மாண்​ட​மான பொதுக் கூட்​டத்​தில் அவர் பேசும்​போது, ‘‘காங்​கிரஸ் – ஆர்​ஜேடி கூட்​ட​ணி​யின் காட்​டாட்சி நடத்​தி​ய​வர்​களிடம் இருந்து … Read more

பஹல்காம் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேரை கைது செய்தது என்ஐஏ

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். 16 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவின் உட்பிரிவான The Resistance Front என்ற அமைப்பு பொறுப்பேற்றது. இந்நிலையில், இந்த … Read more

ஹரியானா அரசு அலுவலங்களில் 5 நிமிடம் 'யோகா பிரேக்' – முதல்வர் நயாப் சிங் சைனி அறிவிப்பு

ஹரியானாவில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் 5 நிமிடம் யோகா பிரேக் அளிக்கப்படும் என்று முதல்வர் நயாப் சிங் சைனி அறிவித்துள்ளார். 11-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஹரியானாவின் குருஷேத்ராவில் மாநில அளவிலான யோகா நிகழ்ச்சி, யோகா குரு ராம் தேவ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி பங்கேற்று பேசியதாவது: 11-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டம் ஹரியானாவில் கடந்த மே 27-ம் தேதியே தொடங்கி விட்டது. அப்போது முதல் … Read more

7 மாதங்களுக்கு முன்பே நாங்கள் அறிவித்த திட்டம்: நிதிஷ் மீது தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

பாட்னா: முதி​யோர் பென்​ஷன் தொகையை ரூ.400-லிருந்​து, ரூ.1,100- ஆக உயர்த்தி முதல்​வர் நிதிஷ்கு​மார் அறி​வித்தது பற்றி ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். பிஹார் தேர்​தலில் பாஜக-ஐக்​கிய ஜனதா தளக் கூட்​ட​ணிக்​கும், ஆர்ஜேடி, காங்​கிரஸ் கட்​சிகள் அடங்​கிய கூட்​ட​ணிக்​கும் இடையே கடும் போட்டி உள்ளது. இந்​நிலை​யில் தேஜஸ்வி யாதவ் நேற்று செய்​தி​யாளர்​களிடம் பேசி​ய​தாவது: பிஹார் முதல்​வர் நிதிஷ் குமார், தற்​போது சுயநினை​வின்றி உள்​ளார். செயல்​ப​டாத முதல்​வ​ராக இருக்​கிறார். அவரால் அவரது கட்சி வேட்​பாளர்​களைக் கூட தேர்வு … Read more

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் விவகாரம்; இந்திய அரசு பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும்: சோனியா காந்தி வலியுறுத்தல்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் விவகாரத்தில் இந்திய அரசு தனது பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக `தி இந்து’ நாளிதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: காசாவில் ஏற்பட்ட பேரழிவு குறித்தும், தற்போது ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் குறித்தும் இந்திய அரசு அமைதி காப்பது நமது தார்மீக மற்றும் ராஜதந்திர வழக்கங்களை விட்டு விலகுவதற்கு சமமாகும். இது நமது குரல் மட்டுமின்றி, நமது … Read more

ஓய்வூதியத்தை 3 மடங்கு உயர்த்திய மாநில அரசு… கோடிக்கணக்கானோர் ஹேப்பி!

Pension Hike: தேர்தல் நெருங்கி வரும் சூழலில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்களுக்கான மாத ஓய்வூதிய தொகையை சுமார் 3 மடங்கு உயர்த்தி பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது.

தலைக்கு ரூ.8 லட்சம் அறிவிக்கப்பட்ட பெண் நக்சலைட் சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு

புதுடெல்லி: சத்​தீஸ்​கரின் கங்​கேர் மாவட்​டம் அமதோலா கல்​பார் எனும் மலைப்​பாங்​கான வனப்​பகு​தி​யில் நக்​சலைட்​டு​கள் நடமாட்​டம் இருப்​ப​தாக நேற்​று​முன்​தினம் தகவல் கிடைத்​துள்​ளது. உடனடி​யாக அங்கு சிஆர்​பிஎப் வீரர்​கள் விரைந்து சென்​றனர். அப்​போது, பாது​காப்​புப் படை​யினரை நோக்கி நக்​சலைட்​டு​கள் துப்​பாக்​கிச் சூடு நடத்​தினர். அப்​போது வீரர்​கள் பதில் தாக்​குதல் நடத்​தி​ய​தில், பிஎல்​ஜிஏ​வின் பெண் நக்​சலைட் சாந்தி என்ற தேவ் உயி​ரிழந்​தார். இவரை பற்றி தகவல் அளிப்​பவர்​களுக்கு ரூ.8 லட்​சம் சன்​மானம் அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இதுகுறித்து எஸ்​.பி. இந்​திரா கல்​யாண் எலிசேலா கூறுகை​யில், … Read more

முதியோருக்கு ரூ.20-க்கு தாலியை கொடுத்தது ஏன்? – மகாராஷ்டிர நகைக்கடைக்காரர் விளக்கம்

மும்பை: ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள தாலியை முதிய தம்பதிக்கு ரூ.20-க்கு கொடுத்தது ஏன் என்பது குறித்து மகாராஷ்டிர நகைக்கடைக்காரர் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கோபிகா ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை வைத்திருக்கும் நிலேஷ் கிவான்சரா கூறியதாவது: என்னுடைய கடைக்கு சில நாட்களுக்கு வந்த ஒரு மூத்த தம்பதியினர் நகைகளை பார்த்துவிட்டு எதுவும் வாங்காமல் திரும்பிச் சென்றனர். சில நாட்கள் கழித்து சத்ரபதி சாம்பாஜிநகரிலுள்ள எங்கள் கடையின் மற்றொரு கிளைக்கு அவர்கள் வந்தனர். … Read more

விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற யோகா தின விழா: மோடி தலைமையில் 3 லட்சம் பேர் கின்னஸ் சாதனை

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட பிரம்மாண்ட யோகா தின நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்று, யோகாசனங்கள் செய்தார். இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. உலகில் அமைதி நிலவ, ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு நாடும், சமுதாயமும் யோகாவை தங்கள்வாழ்வில் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். உலகம் முழுவதும் 11-வது ஆண்டு சர்வதேச யோகா தினம் நேற்று மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் … Read more

ஈரானில் இருந்து நேபாளம், இலங்கை மக்களை மீட்கும் இந்தியா

அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் இலங்கையின் கோரிக்கையை ஏற்று அந்த நாடுகளின் குடிமக்களையும் ஈரானில் இருந்து இந்தியா மீட்டு அழைத்துவர உள்ளது. ஈரான் – இஸ்ரேல் போரை தொடர்ந்து ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்காக ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் மத்திய அரசு மீட்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி ஈரானின் மஷாத் நகரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு விமானம் மூலம் 290 இந்திய மாணவர்கள் டெல்லி அழைத்துவரப்பட்டனர். இதையடுத்து துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாத் … Read more