தலைக்கு ரூ.8 லட்சம் அறிவிக்கப்பட்ட பெண் நக்சலைட் சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு

புதுடெல்லி: சத்​தீஸ்​கரின் கங்​கேர் மாவட்​டம் அமதோலா கல்​பார் எனும் மலைப்​பாங்​கான வனப்​பகு​தி​யில் நக்​சலைட்​டு​கள் நடமாட்​டம் இருப்​ப​தாக நேற்​று​முன்​தினம் தகவல் கிடைத்​துள்​ளது. உடனடி​யாக அங்கு சிஆர்​பிஎப் வீரர்​கள் விரைந்து சென்​றனர். அப்​போது, பாது​காப்​புப் படை​யினரை நோக்கி நக்​சலைட்​டு​கள் துப்​பாக்​கிச் சூடு நடத்​தினர். அப்​போது வீரர்​கள் பதில் தாக்​குதல் நடத்​தி​ய​தில், பிஎல்​ஜிஏ​வின் பெண் நக்​சலைட் சாந்தி என்ற தேவ் உயி​ரிழந்​தார். இவரை பற்றி தகவல் அளிப்​பவர்​களுக்கு ரூ.8 லட்​சம் சன்​மானம் அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இதுகுறித்து எஸ்​.பி. இந்​திரா கல்​யாண் எலிசேலா கூறுகை​யில், … Read more

முதியோருக்கு ரூ.20-க்கு தாலியை கொடுத்தது ஏன்? – மகாராஷ்டிர நகைக்கடைக்காரர் விளக்கம்

மும்பை: ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள தாலியை முதிய தம்பதிக்கு ரூ.20-க்கு கொடுத்தது ஏன் என்பது குறித்து மகாராஷ்டிர நகைக்கடைக்காரர் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கோபிகா ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை வைத்திருக்கும் நிலேஷ் கிவான்சரா கூறியதாவது: என்னுடைய கடைக்கு சில நாட்களுக்கு வந்த ஒரு மூத்த தம்பதியினர் நகைகளை பார்த்துவிட்டு எதுவும் வாங்காமல் திரும்பிச் சென்றனர். சில நாட்கள் கழித்து சத்ரபதி சாம்பாஜிநகரிலுள்ள எங்கள் கடையின் மற்றொரு கிளைக்கு அவர்கள் வந்தனர். … Read more

விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற யோகா தின விழா: மோடி தலைமையில் 3 லட்சம் பேர் கின்னஸ் சாதனை

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட பிரம்மாண்ட யோகா தின நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்று, யோகாசனங்கள் செய்தார். இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. உலகில் அமைதி நிலவ, ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு நாடும், சமுதாயமும் யோகாவை தங்கள்வாழ்வில் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். உலகம் முழுவதும் 11-வது ஆண்டு சர்வதேச யோகா தினம் நேற்று மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் … Read more

ஈரானில் இருந்து நேபாளம், இலங்கை மக்களை மீட்கும் இந்தியா

அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் இலங்கையின் கோரிக்கையை ஏற்று அந்த நாடுகளின் குடிமக்களையும் ஈரானில் இருந்து இந்தியா மீட்டு அழைத்துவர உள்ளது. ஈரான் – இஸ்ரேல் போரை தொடர்ந்து ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்காக ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் மத்திய அரசு மீட்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி ஈரானின் மஷாத் நகரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு விமானம் மூலம் 290 இந்திய மாணவர்கள் டெல்லி அழைத்துவரப்பட்டனர். இதையடுத்து துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாத் … Read more

கர்நாடகாவில் போலி செய்திகளை பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை: விரைவில் புதிய சட்டம் அமலுக்கு வருகிறது

கர்நாடகாவில் போலிச் செய்திகள், தவறான தகவல்களை பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவர அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. கர்நாடகாவில் கடந்த சில ஆண்டுகளாக ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களால் மோதல் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் 10-க்கும் மேற்பட்ட உயிர் சேதமும், கோடிக்கணக்கில் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க தனிச் சட்டம் கொண்டுவர அம்மாநில அரசு முடிவெடுத்தது. இதையடுத்து சமூக வலைதளங்களில் மத ரீதியான அவதூறான … Read more

ராக்கெட் தயாரிப்பு ஏலத்தில் எச்ஏஎல் வெற்றி

புதுடெல்லி: சிறிய வகை செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான ராக்கெட்டை தயாரிப்பதற்கான ஏலத்தில் தனியார் நிறுவனங்களை பின்னுக்குத்தள்ளி பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (எச்ஏஎல்) வெற்றிபெற்றுள்ளது. இதுகுறித்து இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் (ஐஎன்-ஸ்பேஸ்) தலைவர் பவன் கோயங்கா தெரிவித்துள்ளதாவது: இந்தியாவின் சிறிய செயற்கைக்கோள் ஏவுதள ராக்கெட்டுகளை தனிப்பட்ட முறையில் தயாரிப்பதற்கான ஏலத்தை எச்ஏஎல் வென்றுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் விண்வெளி துறையில் நிறுவனங்களின் பங்களிப்பை விரிவுபடுத்தும் அரசின் முயற்சிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாக … Read more

உ.பி. அரசு அலுவலகங்களில் ‘ஒய் பிரேக்’ – அலுவலர்கள் யோகா செய்ய அனுமதி

புதுடெல்லி: இன்று ஜூன் 21-ம் தேதி சர்​வ​தேச யோகா தினம் நாடு முழு​வதும் அனுசரிக்​கப்​படு​கிறது. இந்​நிலை​யில், மத்​திய அரசின் ஆயுஷ் அமைச்​சகத்​தின் வழி​காட்​டு​தலின்​படி, உ.பி.​யின் அனைத்து அரசு அலு​வல​கங்​களி​லும் ‘ஒய்​-பிரேக்’ எனும் பெயரில் அனை​வருக்​கும் யோகா செய்​வதற்​கான நேரம் ஒதுக்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து உ.பி. அரசு வெளி​யிட்ட உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: யோகா நெறி​முறையை அனைத்து அரசு அலு​வல​கங்​களி​லும் செயல்​படுத்த வேண்​டும். இந்த முயற்சி இந்​தி​யா​வின் யோகா பாரம்​பரி​யத்தை நிலைநிறுத்​து​வது மட்​டுமல்​லாமல், யோகாவை தினசரி வழக்​கத்​தின் ஒரு பகு​தி​யாக … Read more

விமான விபத்து எதிரொலி – 3 முக்கிய அதிகாரிகளை நீக்க ஏர் இந்தியாவுக்கு டிஜிசிஏ அறிவுறுத்தல்

புதுடெல்லி: அகமதாபாத் விமான விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு நடத்தி வரும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(டிஜிசிஏ), விமானக் குழுவினரை திட்டமிடுவது, இயக்குவது தொடர்பாக பல மீறல்கள் நிகழ்ந்துள்ளதாகக் கண்டறிந்துள்ளது. இதற்குக் காரணமான 3 அதிகாரிகளை அனைத்து பொறுப்புகளில் இருந்தம் நீக்குமாறு, ஏர் இந்தியாவுக்கு டிஜிசிஏ அறிவுறுத்தி உள்ளது. கடந்த 12ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து … Read more

“ஆதாரங்களை அழிப்பது ஜனநாயகத்துக்கு விஷம் போன்றது” – தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி காட்டம்

புதுடெல்லி: “வாக்குப் பதிவு மையங்களில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை 45 நாட்களுக்கு பிறகு அழித்து விடுமாறும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது உள்ளிட்ட செயல்பாடுகள் ‘ஜனநாயகத்துக்கு விஷம்’ போன்றது” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் வடிவில் வெளியிட தேர்தல் ஆணையம் மறுக்கிறது. மேலும், வாக்குப் பதிவு மையங்களில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை 45 நாட்களுக்கு பிறகு அழித்து … Read more

பாக். உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ஒருபோதும் அமல்படுத்தாது: அமித் ஷா

புதுடெல்லி: பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ஒருபோதும் அமல்படுத்தாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமித் ஷா, ​​“இல்லை, அது ஒருபோதும் அமல்படுத்தப்படாது. ஒரு கால்வாய் அமைப்பதன் மூலம் பாகிஸ்தானுக்குப் பாயும் தண்ணீரை, ராஜஸ்தானுக்கு எடுத்துச் செல்வோம். நியாயமற்ற முறையில் தண்ணீரைப் பெற்று வந்த பாகிஸ்தான் தண்ணீரின்றி தவிக்கும்.” என்று தெரிவித்துள்ளார். சிந்து நதி … Read more