வாக்காளர் பட்டியல் திருத்தத்தை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட், காங்., மதிமுக மனு தாக்கல்: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை 

புதுடெல்லி: வாக்​காளர் பட்​டியல் திருத்தத்தை ரத்து செய்​யக் கோரிமார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், காங்கிரஸ், மதி​முக, மனிதநேயமக்​கள் கட்சி உள்​ளிட்டவை சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள ரிட் மனுக்​கள் இன்று விசா​ரணைக்கு வரு​கின்​றன. தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்தத்தைஅறி​வித்த தேர்​தல் ஆணை​யத்தின் அக். 27-ம் தேதி​யிட்ட அறிக்கை அரசமைப்​புச் சட்​டத்​தின் அடிப்​படை உரிமைகளை​யும், மக்​கள் பிர​தி​நி​தித்துவச்சட்​டத்​தை​யும் மீறு​வதாக உள்​ள​தால், திருத்த நடவடிக்​கைகளுக்கு தடை கோரி திமுக சார்​பில் ஏற்கெனவே மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், மார்க்​சிஸ்ட் … Read more

குஜராத்தில் 3 ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு தீவிரவாதிகள் கைது எதிரொலி: தமிழகத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்திய போலீஸார்

சென்னை: ​நாட்​டின் பல்​வேறு பகு​திகளில் நிகழ்த்​தப்பட இருந்த ரசாயன தாக்​குதல் திட்​டம் முறியடிக்​கப்​பட்ட நிலையில், தமிழகத்தில் தீவிர​வாத தடுப்​புப் பிரிவுபோலீ​ஸார் கண்காணிப்பை முடுக்​கி​விட்டு உள்​ளனர். ஜம்மு – காஷ்மீரின் பெஹல்​காமில் கடந்த ஏப்​ரலில் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலில் 26 சுற்​றுலாப் பயணி​கள் உயி​ரிழந்​தனர். பின்​னர் இந்​தியா பாகிஸ்​தானுக்​குள் புகுந்து தீவிர​வா​தி​கள் முகாம்​கள் மீது தாக்​குதல் நடத்தி பதிலடி கொடுத்​தது. இதற்கு பதிலடி​யாக தீவிர​வா​தி​கள் மீண்​டும் இந்​தி​யா​வுக்​குள்புகுந்து நாச வேலைகளில் ஈடுபடவாய்ப்பு உள்​ள​தாக மத்திய புல​னாய்​வுத் துறை எச்​சரித்​தது. … Read more

டாஸ்மாக் முறைகேடு புகாரில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு தடை கோரிய அமலாக்கத் துறையின் மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி 

புதுடெல்லி: ​டாஸ்​மாக் முறை​கேடு புகாரில் திரைப்பட தயாரிப்​பாளர் ஆகாஷ் பாஸ்​கரனின் நீதி​மன்ற அவம​திப்பு வழக்​குக்கு தடை கோரிய அமலாக்​கத் துறை மனுவை உச்ச நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​துள்​ளது. ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்​மாக் முறை​கேடு புகார் தொடர்​பாக, திரைப்பட தயாரிப்​பாளர் ஆகாஷ் பாஸ்​கரன், தொழில​திபர் விக்​ரம் ரவீந்​திரன் ஆகியோரின் வீடு​கள் மற்​றும் அலு​வல​கங்​களில் அமலாக்​கத் துறை​யினர் சோதனை நடத்​தி வீடு​கள் மற்​றும் அலு​வல​கத்​துக்கு சீல் வைத்​தனர். அமலாக்​கத் துறை நடவடிக்​கைக்கு எதிராக ஆகாஷ்பாஸ்​கரன் மற்​றும் விக்​ரம்ரவீந்​திரன் ஆகியோர் … Read more

“அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்” – டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: டெல்லி செங்கோட்டை அருகே ஏற்பட்ட கார் வெடிப்பு சம்பவத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “டெல்லி செங்கோட்டை அருகே நடந்த வெடிப்பு சம்பவத்தில் பல அப்பாவிகள் பலியானதை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் உண்மையிலேயே மனதை உடைக்கின்றன. துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயங்களுடன் போராடுபவர்கள் வலிமை பெறவும், விரைவில் குணமடையவும் விழைகிறேன்” என்று தெரிவித்துள்ளார். டெல்லி … Read more

டெல்லி கார் வெடிப்புச் சம்பவம்: நாடு முழுவதும் உஷார் நிலை

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக நாடு முழுவதும் … Read more

டெல்லி வெடிப்புச் சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது: காங்கிரஸ்

புதுடெல்லி: டெல்லியில் செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதிக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று வெடித்தது. இதில் 8 பேர் உயிரிழந்தனர்; 24 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த வெடிப்புச் சம்பவம் மிகவும் வேதனை அளிப்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. “இந்த துயரமான நேரத்தில் நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பத்துக்கும் ஆதரவாக இருக்கிறோம். காயமடைந்தவர்கள் விரைந்து குணம்பெற வேண்டுகிறோம். இந்தச் சம்பவம் குறித்து அரசு ஆழமாகவும், விரைந்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என … Read more

டெல்லி குண்டுவெடிப்பு : 8 பேர் பலி, 3 பேர் படுகாயம்! உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்பு?

Delhi Bomb Blast Death Toll : டெல்லி செங்கோட்டை அருகேயுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்தபோது திடீரென வெடித்துச் சிதறியது. இதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் முதல்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்காக இறந்த பெண்ணின் உடலில் ரத்த ஓட்டம் கொண்டு வந்த டாக்டர்கள்

புதுடெல்லி: டெல்​லி​யில் உறுப்​பு​களை தானம் செய்​வதற்​காக இறந்த பெண்​ணின் உடலில் மீண்​டும் ரத்த ஓட்​டத்தை கொண்டு வந்து மருத்​து​வர்​கள் சாதனை படைத்​துள்​ளனர். டெல்லி துவாரகா பகு​தியை சேர்ந்தவர் கீதா சாவ்லா (55). நரம்​பியல் கோளாறு காரண​மாக பக்​க​வாதம் ஏற்​பட்டு படுத்த படுக்​கை​யாக இருந்​தார். கடந்த 5-ம் தேதி அவருக்கு மூச்​சுத் திணறல் ஏற்​பட்​டது. இதையடுத்து துவார​கா​வின் எச்​சிஎம்​சிடி மணிப்​பால் மருத்​து​வ​மனை​யில் கீதாவை சேர்த்​தனர். அங்கு அவருடைய உடல்​நிலை மிக​வும் மோசமடைந்​தது. அவர் உயிர்ப் பிழைக்க வாய்ப்​பில்லை என்ற … Read more

டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு! யார் காரணம்? முழு விவரம்!

இன்று செங்கோட்டை அருகே நிகழ்ந்துள்ள வெடிவிபத்து சம்பவம், டெல்லி மக்களிடையே மீண்டும் ஒரு முறை பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எங்கள் ஆட்சியில் எந்த பிஹாரியும் வேலைக்காக வேறு மாநிலம் செல்ல வேண்டியிருக்காது: தேஜஸ்வி யாதவ்

பாட்னா: “பிஹார் மாற்றத்துக்குத் தயாராக உள்ளது. எங்கள் ஆட்சியில் பிஹார் மிகவும் வளர்ந்த மாநிலமாக மாறும். எந்த ஒரு பிஹாரியும் வேலைக்காக வேறு மாநிலத்துக்குச் செல்ல வேண்டியதில்லை என்பதை நாங்கள் உறுதி செய்வோம்” என ஆர்ஜேடி தலைவரும், மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் கூறினார். பிஹார் சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்ட தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக, பாட்னாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தேஜஸ்வி யாதவ், “கடந்த 20 ஆண்டுகளில் பிஹார் எந்த வெற்றியையும் காணவில்லை. … Read more