ராக்கெட் தயாரிப்பு ஏலத்தில் எச்ஏஎல் வெற்றி

புதுடெல்லி: சிறிய வகை செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான ராக்கெட்டை தயாரிப்பதற்கான ஏலத்தில் தனியார் நிறுவனங்களை பின்னுக்குத்தள்ளி பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (எச்ஏஎல்) வெற்றிபெற்றுள்ளது. இதுகுறித்து இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் (ஐஎன்-ஸ்பேஸ்) தலைவர் பவன் கோயங்கா தெரிவித்துள்ளதாவது: இந்தியாவின் சிறிய செயற்கைக்கோள் ஏவுதள ராக்கெட்டுகளை தனிப்பட்ட முறையில் தயாரிப்பதற்கான ஏலத்தை எச்ஏஎல் வென்றுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் விண்வெளி துறையில் நிறுவனங்களின் பங்களிப்பை விரிவுபடுத்தும் அரசின் முயற்சிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாக … Read more

உ.பி. அரசு அலுவலகங்களில் ‘ஒய் பிரேக்’ – அலுவலர்கள் யோகா செய்ய அனுமதி

புதுடெல்லி: இன்று ஜூன் 21-ம் தேதி சர்​வ​தேச யோகா தினம் நாடு முழு​வதும் அனுசரிக்​கப்​படு​கிறது. இந்​நிலை​யில், மத்​திய அரசின் ஆயுஷ் அமைச்​சகத்​தின் வழி​காட்​டு​தலின்​படி, உ.பி.​யின் அனைத்து அரசு அலு​வல​கங்​களி​லும் ‘ஒய்​-பிரேக்’ எனும் பெயரில் அனை​வருக்​கும் யோகா செய்​வதற்​கான நேரம் ஒதுக்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து உ.பி. அரசு வெளி​யிட்ட உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: யோகா நெறி​முறையை அனைத்து அரசு அலு​வல​கங்​களி​லும் செயல்​படுத்த வேண்​டும். இந்த முயற்சி இந்​தி​யா​வின் யோகா பாரம்​பரி​யத்தை நிலைநிறுத்​து​வது மட்​டுமல்​லாமல், யோகாவை தினசரி வழக்​கத்​தின் ஒரு பகு​தி​யாக … Read more

விமான விபத்து எதிரொலி – 3 முக்கிய அதிகாரிகளை நீக்க ஏர் இந்தியாவுக்கு டிஜிசிஏ அறிவுறுத்தல்

புதுடெல்லி: அகமதாபாத் விமான விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு நடத்தி வரும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(டிஜிசிஏ), விமானக் குழுவினரை திட்டமிடுவது, இயக்குவது தொடர்பாக பல மீறல்கள் நிகழ்ந்துள்ளதாகக் கண்டறிந்துள்ளது. இதற்குக் காரணமான 3 அதிகாரிகளை அனைத்து பொறுப்புகளில் இருந்தம் நீக்குமாறு, ஏர் இந்தியாவுக்கு டிஜிசிஏ அறிவுறுத்தி உள்ளது. கடந்த 12ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து … Read more

“ஆதாரங்களை அழிப்பது ஜனநாயகத்துக்கு விஷம் போன்றது” – தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி காட்டம்

புதுடெல்லி: “வாக்குப் பதிவு மையங்களில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை 45 நாட்களுக்கு பிறகு அழித்து விடுமாறும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது உள்ளிட்ட செயல்பாடுகள் ‘ஜனநாயகத்துக்கு விஷம்’ போன்றது” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் வடிவில் வெளியிட தேர்தல் ஆணையம் மறுக்கிறது. மேலும், வாக்குப் பதிவு மையங்களில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை 45 நாட்களுக்கு பிறகு அழித்து … Read more

பாக். உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ஒருபோதும் அமல்படுத்தாது: அமித் ஷா

புதுடெல்லி: பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ஒருபோதும் அமல்படுத்தாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமித் ஷா, ​​“இல்லை, அது ஒருபோதும் அமல்படுத்தப்படாது. ஒரு கால்வாய் அமைப்பதன் மூலம் பாகிஸ்தானுக்குப் பாயும் தண்ணீரை, ராஜஸ்தானுக்கு எடுத்துச் செல்வோம். நியாயமற்ற முறையில் தண்ணீரைப் பெற்று வந்த பாகிஸ்தான் தண்ணீரின்றி தவிக்கும்.” என்று தெரிவித்துள்ளார். சிந்து நதி … Read more

ஈரானில் இருந்து நேபாளம், இலங்கை குடிமக்களையும் வெளியேற்ற இந்தியா முடிவு

புதுடெல்லி: நேபாளம் மற்றும் இலங்கை அரசாங்கங்களின் வேண்டுகோளின் பேரில் அந்நாடுகளின் குடிமக்களை ஈரானில் இருந்து வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஈரானும் பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால், ஈரானில் உள்ள வெளிநாட்டவர்கள் அந்நாட்டைவிட்டு வெளியேறி வருகிறார்கள். ஈரானில் உள்ள இந்தியர்களை அழைத்து வர ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈரானில் உள்ள இந்திய மாணவர்கள் மற்றும் மத … Read more

பெண்களுக்காக ஹெல்மெட் விஷயத்தில்… மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு – புது ரூல்ஸ்!

Bikes In India: பெண்கள் மற்றும் இருச் சக்கர வாகனத்தில் செல்வோரின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் மத்திய அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.400-ல் இருந்து ரூ.1,100 ஆக உயர்வு: பிஹார் முதல்வர்

பிஹார்: பிஹாரில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.400-ல் இருந்து ரூ.1,100 ஆக அதிகரிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். பிஹார் தேர்தல் இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி, ஜேடியு- பாஜக கூட்டணி, ஜன் சுராஜ் என மும்முனை போட்டி நிலவும் என்றும் கணிக்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. … Read more

“பிரதமர் மோடி முழக்கங்களில் நிபுணர்; தீர்வுகளில் அல்ல” – ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, முழக்கங்களை வழங்குவதில் நிபுணராக இருப்பதாகவும், ஆனால் தீர்வுகளில் அல்ல என்றும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், இந்தியாவில் தயாரிப்போம் (Make in India) என்ற மத்திய அரசின் முழக்கம், அதிக அளவில் தொழிற்சாலைகளை ஏற்படுத்தும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும் ஆனால், நாட்டின் பொருளாதாரத்தில் உற்பத்தி 14% ஆக குறைந்துள்ளது என்றும் அவர் விமர்சித்துள்ளார். … Read more

ஆபரேஷன் சிந்து: ஈரானில் சிக்கிய இந்திய மாணவர்கள்! பத்திரமாக நாடு திரும்பிய 290 பேர்!

What Is the Operation Sindhu: இஸ்ரேல் ஈரான் போரில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக திப்பி அழைத்து வர இந்திய அரசு ஆபரேஷன் சிந்து மிஷனை தொடங்கியுள்ளது.