காட்டாட்சியை அகற்றியதால் பிஹார் மாநிலம் வளர்கிறது: பிரதமர் மோடி கருத்து

சிவான்: பிஹாரில் காட்டாட்சியை அகற்றிய மக்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்தனர். இதன்காரணமாக பிஹார் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிஹார் மாநிலம், சிவானில் நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது ரூ.5,200 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பிஹாரின் மர்ஹோராவில் அமைந்துள்ள டீசல் ரயில் இன்ஜின் ஆலையில் கினியா நாட்டுக்கு ஏற்றுமதி … Read more

'மோதல்கள் நிறைந்த உலகில்… யோகாவே அமைதியை தரும்' – பிரதமர் மோடி பேச்சு!

PM Narendra Modi Vizag: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி ஆற்றிய உரையை இங்கு விரிவாக பார்க்கலாம். 

கைலாஷ் மானசரோவர் யாத்திரை 5 ஆண்டுகளுக்குப் பின்னர் தொடக்கம்

காங்டாக்: 5 ஆண்டுகளுக்குப் பின்னர் சிக்கிம் மாநிலகத்திலுள்ள நாதுலா கணவாய் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடங்கியுள்ளது. இந்தியா-சீன ராணுவத்தினர் இடையே கல்வான் பகுதியில் கடந்த 2020-ல் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை நாதுலா கணவாய் வழியாகச் செல்வது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது நாதுலா கணவாய் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த யாத்திரை ஜூன் முதல் செப்டம்பர் வரை நடைபெறும். கைலாஷ் மானசரோவர் யாத்திரை என்பது … Read more

ரேஷன் அட்டையே இல்லையா… இந்த திட்டங்கள் உங்களுக்கு கிடைக்கவே கிடைக்காது!

Ration Card: ரேஷன் அட்டை உங்களிடம் இல்லையென்றால் மத்திய மற்றும் மாநில அரசுகளின் இந்த திட்டங்களில் உங்களால் பயன்பெற முடியாது.

‘பிஹார் இளைஞர்கள் வேலைக்காக இடம்பெயர்வது நிறுத்தப்படுமா?’ – மோடிக்கு பிரசாந்த் கிஷோர் கேள்வி

பாட்னா: “பிரதமர் நரேந்திர மோடியின் பிஹார் வருகை என்பது மாநிலத்தின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்குகளைப் பெறுவதில் மட்டுமே பிரதமர் கவனம் செலுத்துகிறார்” என்று ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறினார் இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், “பிரதமர் மோடி முதல் முறையாக வரவில்லை. அதேபோல பிரதமர் மோடி பிஹாரின் நலனுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் வரவில்லை. பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு … Read more

இந்தியர்கள் நாடு திரும்ப வான்வெளியைத் திறக்கிறது ஈரான்!

புதுடெல்லி: ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப தனது வான்வெளியை ஈரான் திறக்க உள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஈரானிய துணைத் தலைவர் ஜாவத் ஹொசைனி, “இந்தியர்கள் பாதுகாப்பாகத் திரும்புவதற்காக ஈரான் வான்வெளியைத் திறக்கவுள்ளது. இன்றிரவு தொடங்கி மூன்று சிறப்பு விமானங்கள் மூலம் சுமார் 1,000 இந்தியர்களை அழைத்து வர இந்தியாவுடன் ஈரான் ஒத்துழைத்து வருகிறது. இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் இஸ்ரேலின் நடவடிக்கைகளைக் கண்டிக்க வேண்டும். இல்லையெனில் இஸ்ரேல் மற்ற நாடுகளைத் தன்னிச்சையாகத் … Read more

‘கங்கை தூய்மை’ என்பது பாஜகவின் வெற்று தேர்தல் கோஷம் ஆகிவிட்டது: காங்கிரஸ் விமர்சனம்

புதுடெல்லி: கங்கை நதியை தூய்மைப்படுத்துவது என்பது கடந்த 11 ஆண்டுகளில் வெறும் தேர்தல் கோஷமாக மாறிவிட்டது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். பிஹாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்கான நமாமி கங்கா திட்டத்தின் கீழ் ரூ.1800 கோடி மதிப்பில் 6 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பிஹார் பின்தங்கி இருப்பதற்கு அதன் முந்தைய ஆட்சியாளர்களான காங்கிரஸும், … Read more

ஆம் ஆத்மி ஆட்சியின்போது வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி ஊழல்: அமலாக்கத் துறை தீவிர விசாரணை

ஆம் ஆத்மி ஆட்சியின்போது டெல்லியில் வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடத்தியபோது 12,748 வகுப்பறைகள் கட்டப்பட்டன. இதுதொடர்பாக டெல்லி ஊழல் தடுப்புப் பிரிவு அண்மையில் விசாரணை நடத்தியது. அப்போது வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்கு பதிவு … Read more

ரூ.7.42 கோடி மோசடி வழக்கு: மகாராஷ்டிர ஐபிஎஸ் அதிகாரியின் கணவர் கைது

ரூ.7.42 கோடி மோசடி வழக்கில் மகாராஷ்டிர ஐபிஎஸ் அதிகாரியின் கணவரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர ஐபிஎஸ் அதிகாரி ராஷ்மி கரந்திகரின் கணவர் புருஷோத்தம் சவான். இவர் மும்பை, தானே மற்றும் புனே நகரில் அரசு ஒதுக்கீட்டு குடியிருப்புகளை சலுகை விலையில் வாங்கித் தருவதாக கூறி பலரிடம் ரூ.24.78 கோடி மோசடி செய்ததாக கடந்த மாதம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சூரத் நகரை சேர்ந்த ஒரு தொழிலதிபர் உள்ளிட்ட சிலரிடம் புருஷோத்தம் சவான் … Read more

2024 மக்களவைத் தேர்தலுக்காக பாஜக ரூ.1,494 கோடி, காங். ரூ.620 கோடி செலவு: ஏடிஆர் தகவல்

புதுடெல்லி: 2024 மக்களவைத் தேர்தலின்போது பாரதிய ஜனதா கட்சி ரூ.1,494 கோடியை செலவிட்டுள்ளது. இது மொத்த தேர்தல் செலவில் 44.56% ஆகும் என்று ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர் – ADR) தெரிவித்துள்ளது. மார்ச் 16 முதல் ஜூன் 6, 2024 வரை மக்களவை மற்றும் ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களின் போது அரசியல் கட்சிகள் ரூ.3,352.81 கோடியைச் செலவிட்டன என ஜனநாயக … Read more