வாக்குச்சீட்டுகள் மூலம் உள்ளாட்சி தேர்தல்: கர்நாடக அமைச்சரவை உத்தரவு

பெங்களூரு: உள்ளாட்சி தேர்தல்கள் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தியே நடைபெற வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு கர்நாடக அரசு பரிந்துரைத்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நம்பகத் தன்மையற்றவை என்றும் தெரிவித்துள்ளது. தேர்தல்களில் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில், வாக்குச்சீட்டுகளை மீண்டும் கொண்டுவர பரிந்துரைத்துள்ளதாக கர்நாடக சட்ட அமைச்சர் எச்.கே.பாட்டீல் கூறினார். அவர், “உள்ளாட்சித் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்த கர்நாடக அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது. மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கவும், … Read more

ஜிஎஸ்டி 2.0: மாநிலங்களுக்கு 5 ஆண்டுக்கு இழப்பீடு வழங்க கார்கே வலியுறுத்தல்

புதுடெல்லி: காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே கூறுகை​யில், “கிட்​டத்​தட்ட 10 ஆண்டு கால​மாக ஜிஎஸ்​டியை எளிமைப்​படுத்த வேண்டும் என்று காங்​கிரஸ் கோரி வரு​கிறது. மோடி அரசு, ஒரு நாடு ஒரு வரி என்​பதை ஒரு நாடு 9 வரி​கள் என மாற்​றியது. அதில், 0%, 5%, 12%, 18%, 28% மற்​றும் 0.25%, 1.5%, 3% மற்​றும் 6% என்ற சிறப்பு வரி விகிதங்​களும் அடங்​கும். 2019 மற்​றும் 2024 தேர்​தல் அறிக்​கை​யில் எளிமை​யான ஜிஎஸ்டி … Read more

காஷ்மீரில் மீண்டும் நிலச்சரிவு: வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை 9-ம் நாளாக நிறுத்தம்

ஸ்ரீநகர்: ​காஷ்மீரில் மீண்​டும் நிலச்​சரிவு ஏற்​பட்​ட​தால் மாதா வைஷ்ணவி தேவி கோயில் யாத்​திரை 9-வது நாளாக நேற்​றும் நிறுத்​தப்​பட்​டது. ஜம்மு காஷ்மீரில் கடந்த சில வாரங்​களாக கனமழை பெய்து வரு​கிறது. இதனால் ஆறுகளில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ளதுடன் மலைப் பகு​தி​களில் நிலச்​சரிவு ஏற்​பட்​டுள்​ளது. ரியாசி மாவட்​டத்​தில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்​லும் பாதை​யில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி நிலச்​சரிவு ஏற்​பட்​டது. இதில் 34 பக்தர்கள் உயி​ரிழந்​தனர். 20 பேர் காயமடைந்​தனர். இதையடுத்து வைஷ்ணவி தேவி … Read more

அனைத்து நக்சல்களும் ஒழிக்கப்படும் வரை மத்திய அரசு ஓயாது: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி

புதுடெல்லி: அனைத்து நக்​சல்​களும் ஒழிக்​கப்​படும் வரை பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான மத்​திய அரசு ஓயாது என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தெரி​வித்​தார். சத்​தீஸ்​கர் மாநிலம் கர்​ரேகுட்டா மலை​யில் சிஆர்​பிஎப். வீரர்​கள், சத்​தீஸ்​கர் மாநில காவல்​துறை, மாவட்ட ரிசர்வ் போலீஸ் படை மற்​றும் கோப்ரா படை​யினர் இணைந்து நடத்​திய ‘ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட்’ நடவடிக்​கைக்கு அமைச்​சர் அமித் ஷா பாராட்டு தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக நடை​பெற்ற பாராட்டு விழா​வில் அவர் பேசி​ய​தாவது: ஆபரேஷன் பிளாக் … Read more

தேவஸ்தான மருத்துவமனைகளில் சேவை புரிய பக்தர்களுக்கு வாய்ப்பு

திருமலை: ​திருப்​பதி தேவஸ்​தானத்​துக்கு சொந்​த​மான மருத்​து​வ​மனை​களில் சேவை புரிய பக்​தர்​களுக்கு வாய்ப்பு அளிக்​கப்​பட உள்ளது. திரு​மலை​யில் உள்ள அன்​னமைய்யா பவனில் தேவஸ்​தான அறங்​காவலர் பி.ஆர். நாயுடு மற்​றும் நிர்​வாக அதி​காரி சியாமள ராவ் ஆகியோர் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான மருத்​து​வ​மனை​களில் சேவை செய்ய விரும்​பும் பக்​தர்​களுக்கு ‘ஸ்ரீவாரி சேவா டிரைனர்’ எனும் பெயரில் 3 நாட்​கள் பயிற்சி அளிக்​கப்​படும். இந்த சேவை​யில் பங்​கேற்க விரும்​பும் பக்​தர்​கள் குறைந்​த​பட்​சம் பட்​டப்​படிப்பு படித்​திருக்க வேண்​டும். பயிற்சி … Read more

வர்த்தக உறவை மேம்படுத்த 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்தார் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ்

புதுடெல்லி: இந்​தியா – சிங்​கப்​பூர் இடையே தூதரக உறவு​கள் ஏற்​பட்டு 60 ஆண்​டு​கள் ஆகிறது. இதை முன்​னிட்டு சிங்​கப்​பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், இந்​தியா வரும்​படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்​திருந்​தார். இதை ஏற்று அவர் 3-நாள் அரசு முறைப் பயண​மாக, நேற்று இந்​தியா வந்​தார். மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமனை, லாரன்ஸ் வாங் நேற்று சந்​தித்து பேசி​னார். அவர் பிரதமர் மோடியை இன்று சந்​திக்கிறார். அப்​போது பசுமை எரிசக்​தி, கப்​பல் கட்​டு​தல், சிவில் விமான போக்​கு​வரத்து … Read more

மணிப்பூர் தேசிய நெடுஞ்சாலையை திறந்துவிட குக்கி-ஸோ கவுன்சில் ஒப்புதல்: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: மணிப்பூர் தேசிய நெடுஞ்சாலையை திறந்துவிடுவதற்கு குக்கி-ஸோ பழங்குடியின கவுன்சில் சம்மதம் தெரிவித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக குக்கி-ஸோ கவுன்சில் பிரதிநிதிகளுக்கும், மணிப்பூர் அரசுக்கும், உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இதற்கான முடிவு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொது போக்குவரத்துக்கும், அத்தியவாசியப் பொருட்கள் மாநிலத்துக்குள் வந்து செல்வதற்கும் தோதாக தேசிய நெடுஞ்சாலை எண் 2-ஐ திறந்துவிட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. குக்கி-ஸோ கவுன்சில், பாதுகாப்புப் படையினரும் முழு … Read more

இந்தூர் மருத்துவமனையில் எலிகள் குதறியதில் 2 குழந்தைகள் உயிரிழப்பு: ராகுல் காந்தி கண்டனம்

இந்தூர்: இந்​தூர் நகரில் மிக​வும் பிரபல​மான மகா​ராஜா யஷ்வந்த் ராவ் மருத்​து​வ​மனையில் பச்​சிளம் குழந்​தைகள் தீவிர சிகிச்​சைப் பிரிவில் (நியோ நேட்டல் சிகிச்சைப் பிரிவு) அனுமதிக்கப்பட்டிருந்த 2 குழந்தைகள் எலிகள் கடித்துக் குதறியதில் உயிரிழந்த சம்பவத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “இது விபத்தல்ல; அப்பட்டமான கொலை. இந்தச் சம்பவம் அச்சம் தருகிறது. இது சற்றும் மனிதாபிமானமற்ற சம்பவம். இதைக் கேட்கும்போது உடம்பு சில்லிடுகிறது. ஒரு தாயின் குழந்தை நிரந்தரமாக களவாடப்பட்டுள்ளது. … Read more

காசோலை மோசடி வழக்கில் சிறை தண்டனை தவிர்க்கலாம்: உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

புதுடெல்லி: உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்ட காசோலை மோசடி வழக்கு ஒன்​றில் நீதிப​தி​கள் அரவிந்த் குமார், சந்​தீப் மேத்தா ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: காசோலை மோசடி வழக்​கில் ஒரு​வர் நீதி​மன்​றத்​தால் தண்​டிக்​கப்​பட்ட பிறகு புகார்​தா​ரருடன் சமரசம் செய்து கொண்​டால் சிறை தண்​டனையை தவிர்க்​கலாம். இரு தரப்​பினர் இடையே சமரச ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி​விட்​டால், என்ஐ சட்​டத்​தின் (Negotiable Instruments Act) பிரிவு 138-ன் கீழ் விதிக் கப்​பட்ட தண்​டனை ரத்​தாகி​விடும். இவ்வாறு நீதிபதிகள் … Read more

‘இப்படியே சென்றால் காடுகளே இருக்காது’ – மரம் வெட்டுதலை கண்டித்து உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: சட்டவிரோதமாக மரம் வெட்டுதல் தொடர்ந்தால் காடுகளே இருக்காது என்று உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. மலைப் பிரதேசங்களில் சுற்றுச்சூழல் சீரழிவு ஏற்படுவது தொடர்பாக தொடரப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது. சமீபத்தில், உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழையும், வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டு மக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இமாச்சல் பிரதேச வெள்ள பாதிப்பு தொடர்பாக வெளியான ஊடகச் செய்திகளில் வெட்டப்பட்ட … Read more