மணிப்பூர் தலைநகரில் வீடுகளுக்கு தீவைப்பு – உச்ச நீதிமன்றத்தில் பழங்குடி கூட்டமைப்பு சார்பில் வழக்கு

இம்பால்: மணிப்பூர் தலைநகர் இம்பாலில் ஒரு கும்பல் நேற்று வீடுகளுக்கு தீ வைத்தது. இதன்காரணமாக தலைநகரில் கலவரம் ஏற்பட்டது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதன்காரணமாக கடந்த மே 3-ம் தேதி முதல் ஒரு மாதத்துக்கும் மேலாக அந்த மாநிலத்தில் வன்முறை, கலவரம் நீடிக்கிறது. இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளனர். மணிப்பூரின் கமென்லாக் கிராமத்தில் குகி சமூகத்தை சேர்ந்த தீவிரவாதிகள் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் மேதேயி சமூகத்தை … Read more

சாலை பணிகளில் தரத்துக்கு முதலிடம் – பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு

புதுடெல்லி: சாலை பணிகளில் தரத்துக்கு முதலிடம் அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். துவாரகா எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்தில் டெல்லி, குருகிராம் பகுதிகளை இணைக்கும் வகையில் 29 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரங்புரியில் புதிய பாலம் கட்டப்படுகிறது. கடந்த 14-ம் தேதி பாலத்தின் ஒரு பகுதி இடிந்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி ஓட்டுநர் ஷகீல் உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாக தேசிய நெடுஞ்சாலை, எக்ஸ்பிரஸ் … Read more

எந்தச் சூழலையும் எதிர்கொள்ள நவீன தொழில்நுட்பங்களுடன் இந்திய விமானப் படை தயார் – குடியரசுத் தலைவர் முர்மு உறுதி

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதரா பாத்தில் விமானத்துறை பயிற்சி நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது நாட்டின் பாதுகாப்புத் துறையின் வளர்ச்சி குறித்தும், நவீன தொழில்நுட்பங்களின் முக்கியத்தும் குறித்தும் அவர் பேசினார். “இந்திய பாதுகாப்புத் துறை இந்திய நில எல்லையையும், கடல் எல்லையையும், வான் பரப்பையும் பாதுகாத்து வருகிறது. தற்போது ராணுவம் தொடர்பாக புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருகின்றன. நவீன பாதுகாப்புக் கட்டமைப்புக்கு இந்தத் தொழில்நுட்பங்கள் இன்றியமையாதவை. இந்திய பாதுகாப்புத் … Read more

ராமநாதபுரத்தில் போட்டியிட பிரதமர் மோடி தீவிர யோசனை

புதுடெல்லி: கடந்த 2014 மக்களவைத் தேர்தல் முதல் வீசத் தொடங்கிய மோடி அலையை, வட மாநிலங்கள் அளவுக்கு தென் இந்தியாவிலும் நிலைநாட்டுவது பாஜகவின் திட்டமாக உள்ளது. இதில் தமிழகத்தை குறிவைத்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுகிறது. உலகின் மூத்த மொழி தமிழ் எனக் கூறிய பிரதமர் மோடி, தமிழ் இலக்கியங்களின் முக்கியத்துவத்தை பறைசாற்றத் தொடங்கினார். புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் செங்கோல் வைக்கப்பட்டது. அடுத்த திட்டமாக மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட விரும்புகிறார் பிரதமர் மோடி. இந்த வருடம் ஜனவரியில் … Read more

ஆங்கிலம் பயில மாணவர்களுக்கு தடை – உ.பி.யின் தியோபந்த் மதரஸா உத்தரவால் சர்ச்சை

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலத்தின் சஹரான்பூர் மாவட்டம், தியோபந்தில் உலகப் புகழ்பெற்ற தாரூல் உலூம் மதரஸா உள்ளது. சுமார் 4,000 மாணவர்கள் பயில்கின்றனர். இது கடந்த1866-ல் தொடங்கப்பட்டது. பாகிஸ்தான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளில் நன்மதிப்பை இந்த மதரஸா பெற்றுள்ளது. இங்கு மாணவர்களுக்கு இஸ்லாமிய மறைக் கல்வியுடன் ஆங்கிலம், அறிவியல், கணிதம் போன்ற பொதுக் கல்வியும் போதிக்கப்படுகிறது. இதன்பலனாக மதரஸாவில் படித்த பிறகு இதர பொதுக் கல்வி நிறுவனங்களிலும் இம்மாணவர்கள் சேர்ந்து உயர்க்கல்வி பயில்வது உண்டு. இதற்கு அவர்களுக்கு ஆங்கிலம் … Read more

ஒரே ஒரு பாகுபலி சமோசா சாப்பிட்டால் போதும்… கையில் ரூ. 71 ஆயிரம் – சவாலுக்கு ரெடியா?

Bahubali Samosa: 12 கிலோ எடையுள்ள ‘பாகுபலி’ சமோசாவை 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்தால், ரூ.71,000 வெல்லாம் என்ற சவால் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த தொகுப்பில் காணலாம். 

வெயிலை சமாளிக்க மான்களுக்கு குளிர்சாதன வசதி… நீர்ச்சத்து குறையாமல் இருக்க குளுக்கோஸ், பழங்கள் போன்ற உணவுகள் வழங்கல்

ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் உள்ள தண்டே உயிரியல் பூங்காவில் வெயிலை எதிர்கொள்ள மான்களுக்கு வனவிலங்கு பாதுகாப்பு துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தண்டே உயிரியல் பூங்காவில் தற்போது 32 புள்ளி மான்கள் இருப்பதாகவும், அவற்றை வெப்பத்தில் இருந்து காக்க, அவ்வப்போது தண்ணீர் தெளிக்கப்பட்டு வருவதாகவும் வனவிலங்கு மண்டல அலுவலர் தெரிவித்துள்ளார். சுட்டெரிக்கும் வெயிலில் மான்கள் நிம்மதியாக இளைப்பாற குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், குளுக்கோஸ், பழங்கள் போன்ற உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். Source link

நேதாஜி உயிருடன் இருந்திருந்தால் இந்தியா இரண்டாக பிரிந்திருக்காது – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கருத்து

புதுடெல்லி: சுதந்திரத்தின் போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் இருந்திருந்தால் இந்தியா இரண்டாக பிரிந்திருக்காது என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜியின் முதல் நினைவு சொற்பொழிவு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசியதாவது: நேதாஜி தனது வாழ்நாளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் துணிச்சலை வெளிப்படுத்தி உள்ளார். குறிப்பாக மகாத்மா காந்திக்கு சவால் விடுக்கும் துணிச்சலும் அவரிடம் இருந்தது. ஆனால் காந்தி அரசியல் … Read more

மல்யுத்த வீராங்கனைகள்: பபிதா போகட் மீது சாக்ஷி மாலிக் வைக்கும் 5 குற்றச்சாட்டுகள்!

Wrestlers Protest: பபிதா போகத் மல்யுத்த வீரர்களை தனது சுயநலத்திற்காக பயன்படுத்துவதாகவும், தனது எதிர்ப்பை பலவீனப்படுத்துவதாகவும் சாக்ஷி மாலிக் குற்றம் சாட்டினார்  

”2 லட்சம் பொதுத் துறை வேலைகளை ஒழித்த மோடி அரசு” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: பிரதமர் மோடியின் அரசாங்கம், பொதுத்துறை நிறுவனங்களில் இரண்டு லட்சம் வேலைகளை ஒழித்துக் கட்டி, ஒப்பந்த வேலைகளை அதிகரித்திருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து இன்று (ஜூன் 18) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி: பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவின் பெருமையாக இருந்ததோடு, இந்திய இளைஞர்களின் வேலை வாய்ப்புக் கனவாகவும் இருந்தது. ஆனால், இன்று இவை அரசாங்கத்தின் முன்னுரிமை அல்ல. நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களில் 2014ஆம் ஆண்டில் 16.9 லட்சமாக இருந்த … Read more