பாஜகவுக்கு 40 எம்.எல்.ஏக்கள் கிடைக்கும்! ராகுல் காந்தியின் கர்நாடக தேர்தல் கணிப்பு

Karnataka Election 2023: பாஜகவுக்கு 40 இடங்களுக்கு மேல் கொடுக்க வேண்டாம் என்று ராகுல் காந்தி வேண்டுகோள் விடுக்கும் கோரிக்கை நிறைவேறுமா? சூடு பிடிக்கும் கர்நாடக தேர்தல் களம்

மத்தியில் காங். ஆட்சியமைத்தால், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையில் மாற்றம் செய்யப்படும் – ராகுல் காந்தி

மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைத்தால், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமைப்பு முறையில் மாற்றம் செய்யப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து ராகுல் காந்தி பரப்புரை மேற்கொண்டார். அப்போது, பேசிய அவர், நாட்டில் உள்ள வசதிபடைத்தவர்களுக்கு ஆதரவாகவே ஜி.எஸ்.டி. கொண்டு வரப்பட்டதாக குற்றம்சாட்டினார். ஜி.எஸ்.டி. தாக்கல் செய்யும் முறை பெருவாரியான மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதாகக் கூறிய அவர், இதனால் சிறு வணிகர்கள் கடுமையான பாதிப்பை சந்திப்பதாகவும் விமர்சித்தார்.  Source … Read more

பிரதமர் மோடி அலை கர்நாடக தேர்தலிலும் தொடரும்: மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.அசோகா நம்பிக்கை

கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸூக்கும் பாஜகவுக்கும் நேரடி மோதல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், 2 தொகுதிகளில் போட்டியிடும் கர்நாடக வருவாய்துறை அமைச்சர் ஆர்.அசோகா பெங்களூருவில் அளித்த பேட்டியில் கூறியதாவது… மூத்த தலைவர்களுக்கே தொகுதிகள் கிடைக்கவில்லை. உங்களுக்கும் சோமண்ணாவுக்கும் மட்டும் 2 தொகுதிகள் எப்படி கிடைத்தது? ஆச்சரியமாக இருந்தது. நானும் சோமண்ணாவும் பெங்களூருவை மையமாக வைத்து அரசியல் செய்தவர்கள். என்னை கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு எதிராக கனகப்புராவிலும், சோமண்ணாவை முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக வருணாவிலும் நிறுத்தி இருக்கிறார்கள். இது … Read more

விமானத்தில் மதுபோதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்தியர் கைது

நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், மதுபோதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட இந்திய பயணி, விமானத்தில் மதுபோதையில் சக பயணியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, அவர் மீது சிறுநீர் கழித்ததாகக் கூறப்படுகிறது. அவரது இந்த ஒழுங்கீனமான செயல் குறித்து, விமானம் தரையிறங்குவதற்கு முன்பாக டெல்லி விமானநிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் விமானம் தரையிறங்கிய பிறகு, சம்பந்தபட்ட நபரை தொழில் … Read more

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பழனிசாமி, ஓபிஎஸ் தரப்பு வேட்புமனுக்கள் வாபஸ்

சென்னை: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொண்டனர். கர்நாடக மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் மே 10-ம் தேதி ஒரே கட்டமாக நடக்க உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தரப்பிலும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் பாஜக கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டிருந்தனர். அதற்காக, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் … Read more

அத்தீக் அகமது கொலை, உ.பி என்கவுன்ட்டர் வழக்கு: ஏப்.28-ல் உச்ச நீதிமன்றம் விசாரணை

புதுடெல்லி: தாதாவாக இருந்து அரசியல்வாதியாக மாறிய அத்தீக் அகமது சுட்டுக்கொல்லப்பட்டது குறித்த வழக்கு வரும் 28-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அத்தீக் அகமதுவும், அவரது சகோதரர் அஷ்ரப்பும் கடந்த 15-ம் தேதி பிரயாக்ராஜ் நகரில் மூன்று பேரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அத்தீக் மற்றும் அஷ்ரப் கொல்லப்பட்டது தொடர்பாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கக் … Read more

இந்திய சர்க்கஸ்களின் முன்னோடி ‘ஜெமினி சங்கரன்’ உடல்நலக் குறைவால் காலமானார்

கண்ணூர்: இந்திய சர்க்கஸ் கலையின் முன்னோடியும், ஜெமினி சர்க்கஸின் நிறுவனருமான ‘ஜெமினி சங்கரன்’ உடல்நலக்குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருக்கு வயது 99. கடந்த சில நாட்களுக்கு முன்பு வயது மூப்பு காரணமாக ஏற்படும் உடல்நலக் குறைவுக்காக ஜெமினி சங்கரன் கண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார். சங்கரனின் மறைவுக்கு கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் தனது இரங்கல் குறிப்பில்,” வெளிநாட்டுக் கலைஞர்களின் … Read more

தெலங்கானா | போலீஸாரை கன்னத்தில் அறைந்த ஒய்.எஸ்.ஷர்மிளாவுக்கு 14 நாட்கள் சிறை

ஹைதராபாத்: போலீஸாரை கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஒய்.எஸ்.ஷர்மிளாவுக்கு 14 நாட்கள் காவல் அளிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TSPSC தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் அம்மாநிலத்தில் பரவலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால், மூன்று தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகளும், ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஷர்மிளா, இதே விவகாரத்தை முன்னிறுத்தி பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். கடந்த மாதம், ஹைதராபாத்தில் இந்த … Read more

இவரை பிடித்து கொடுப்பவருக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிப்பு..!!

உ.பி மாநிலத்தை சேர்ந்தவர் தீப்தி. இவர் பைக் பாட் மோசடியில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர். நாடு முழுவதும் பல மாநிலங்களில் இந்த மோசடி தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. சிபிஐ, அமலாக்கத்துறை, பொருளதாரக் குற்றப்பிரிவு என பல புலனாய்வு அமைப்புகள் இந்த மோசடி பற்றி விசாரித்து வருகின்றன. ரூ.4,500 கோடி முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.அதேநேரம் சிபிஐ விசாரணையில் 15,000 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் 40 வயதான … Read more

இரு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் எம்.பி., எம்எல்ஏ தேர்தலில் சீட் வழங்கக் கூடாது: அஜித் பவார் யோசனை

புனே: ”தேசத்தின் வளர்ச்சிக்காக எல்லோரும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள எம்.பி., எம்எல்ஏ.க்கள் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்களக அறிவிக்க வேண்டும்” என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும் மகாராஷ்டிர சட்டப்பேரவை எத்ரிக்கட்சித் தலைவருமான அஜித் பவார் தெரிவித்துள்ளார். உலக மக்கள் தொகை நிலை – 2023 அறிக்கையை ஐ.நா.வின் மக்கள் தொகை நிதியம் அண்மையில் வெளியிட்டது. அதில், “மக்கள் தொகையில் இந்தியா இந்த ஆண்டு சீனாவை … Read more