பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட இந்தூர் கல்லூரி முதல்வர் உயிரிழப்பு – முன்னாள் மாணவர் மீது கொலை வழக்கு பதிவு

இந்தூர்: மத்தியப் பிரதேசம் சிம்ரோல் பகுதியில் உள்ளது பி.எம். பார்மஸி கல்லூரி. இங்கு அசுதோஸ் ஸ்ரீவஸ்தவா (24) என்ற மாணவர் பி.பார்ம் படித்துள்ளார். இவர் 7வது செமஸ்டரில் தோல்வியடைந்தார். இவரது மதிப்பெண் பட்டியலை பெறுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இக்கல்லூரியின் உதவிபோராசிரியர் டாக்டர் விஜய் படேலை, ஸ்ரீவஸ்தவா கடந்தாண்டு அக்டோபர் மாதம் கத்தியால் குத்தினார். இதில் ஸ்ரீவஸ்தவா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கல்லூரி முதல்வர் விமுக்தாசர்மா (54) என்பவருக்கும், முன்னாள் மாணவர் ஸ்ரீவஸ்தவா வாட்ஸ் … Read more

டெல்லி செங்கோட்டை பகுதியில் தீவிரவாத பயிற்சிக்காக பாக். செல்ல முயன்ற 2 பேர் கைது: தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள்

புதுடெல்லி: தீவிரவாத அமைப்புகளில் சேர்ந்து ஆயுத பயிற்சி பெறுவதற்காக பாகிஸ்தான் செல்ல முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவை சேர்ந்த ஒரு கும்பல் ஆயுத பயிற்சிக்காக பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும், அவர்கள் செங்கோட்டை பகுதியில் இருந்து பிப்ரவரி 14ம் தேதி செல்ல உள்ளனர் என்றும் டெல்லி காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, செங்கோட்டை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக … Read more

இன்னிங்ஸ் நிறைவு பெற்றதாக அறிவிப்பு – அரசியலில் இருந்து சோனியா காந்தி ஓய்வு?

ராய்ப்பூர்: ‘‘பாரத ஒற்றுமை யாத்திரையுடன் எனது அரசியல் பயணம் நிறைவு பெற்றுள்ளது’’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் 2 நாள் மாநாடு சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று நடந்த 2-வது நாள் மாநாட்டில் சோனியா காந்தி பேசியதாவது: பாஜக ஆட்சியில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒடுக்கப்படுகிறது. பிரிவினை தூண்டப்பட்டு, ஜனநாயகம் அழிக்கப்படுகிறது. சிறுபான்மையினர், பெண்கள், பழங்குடியினர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. சில குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்கு சாதகமாக மத்திய … Read more

மேகாலயா, நாகலாந்தில் நாளை வாக்குப்பதிவு: ஷில்லாங் தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு

ஷில்லாங்: மேகாலயா, நாகலாந்தில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இதைத்தொடர்ந்து நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. மேகாலயாவின் ஷில்லாங் தொகுதியில் வேட்பாளர் மறைவால் அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. கடந்த 16ம் தேதி திரிபுராவில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மேகாலயா மற்றும் நாகலாந்தில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேகாலயாவை பொருத்தவரை 60 இடங்களுக்கு பாஜ, காங்கிரஸ் உட்பட 11 கட்சிகளைச் சேர்ந்த 369 பேர் … Read more

அனைத்து மட்டங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது: உச்சநீதிமன்றம் கவலை

புதுடெல்லி: அஸ்வினிகுமார் உபாத்யாயா என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில்  ‘கடுமையான குற்ற வழக்குகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நபர் அரசு துறையில் துப்புரவு பணியாளராகவோ அல்லது காவலராகவோ சேர முடியாது. ஆனால் அதே போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு நபர் எம்எல்ஏவாகவோ, அமைச்சராகவோ கூட ஆகி விடலாம். அதனால் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நபர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதி … Read more

ரஷ்யா விவகாரத்தில் ஒருமித்த கருத்தின்றி முடிந்த ஜி20 கூட்டம்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்களின் மாநாடு பெங்களூருவில் நேற்று 2வது நாளாக நடந்தது. இந்த மாநாட்டில் ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் அந்நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்கள் பங்கேற்றனர். இந்தியா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் உலக நாடுகள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள், சவால்கள் குறித்து விவாதிக்கவே இந்தியா விரும்பியது. ஆனால், அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற உக்ரைனை ஆதரிக்கும் நாடுகள் உக்ரைன்-ரஷ்யா போர் ஓராண்டு நிறைவையொட்டி, ரஷ்யாவுக்கு கண்டனம் … Read more

திருநங்கை செய்தி வாசிப்பாளர் மீது துப்பாக்கிச்சூடு

லாகூர்: பாகிஸ்தானில் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 26 வயதான மர்வியா மாலிக். கடந்த 2018ம் ஆண்டு அந்நாட்டின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளராகி சாதனை படைத்தார். இவர் திருநங்கைகளின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறார். இதனால், அவருக்கு அவ்வபோது போன் மூலம் கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. இந்நிலையில், லாகூரில் கடந்த வியாழக்கிழமை மருந்து வாங்கிக் கொண்டு வீடு அருகே … Read more

3-க்கு 2 பெரும்பான்மையில் மோடியை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்க வேண்டும்.. பீகாரில் காட்டு ராஜ்ஜியத்தை போக்க அதுதான் ஒரே வழி – அமித் ஷா

அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 3-க்கு 2 என்ற பெரும்பான்மையில் நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்குவதுதான் பீகாரில் காட்டு ராஜ்ஜியத்தை போக்க ஒரே வழி என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பீகாரில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமித்ஷா, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும், அரசுக்கு எதிராக பேசும் பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். நாள்தோறும் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குறித்ததான செய்திகளைக் கேள்விபடுவதாக தெரிவித்த அமித்ஷா, பீகார் மக்கள் நிதிஷ் குமாருக்கும் அவரது … Read more

பிளாஸ்டிக் கவர் பயன்பாட்டை ஒழிக்க பனை ஓலை கூடையில் திருப்பதி லட்டு: செயல் அதிகாரி தகவல்

திருமலை: ‘திருப்பதியில் பிளாஸ்டிக் கவர் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் வகையில், ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தை பனை ஓலை கூடையில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று செயல் அதிகாரி தர்மா கூறினார். திருமலை திருப்பதி தேவஸ்தானம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஏற்கனவே பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் லட்டு பிரசாதம் வாங்கி அவற்றை பிளாஸ்டிக் கவர்கள் மூலம் கொண்டு சென்றனர். இதனால் … Read more

“பாரத் ஜோடா யாத்திரையுடன் எனது இன்னிங்ஸ் முடிவடைவது மகிழ்ச்சி”-சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சிக்கு திருப்புமுனையாக அமைந்த இந்திய ஒற்றுமை நடைபயணத்துடன், தனது இன்னிங்ஸ் முடிவடைவது மகிழ்ச்சியளிப்பதாக, 85-வது காங்கிரஸ் மாநாட்டில் பேசிய சோனியா காந்தி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரின் ராய்பூரில் நடைபெறும் 3 நாள் மாநாட்டில், இரண்டாம் நாளான இன்று கட்சியினரிடையே சோனியா காந்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மன்மோகன்சிங் தலைமையில், கடந்த 2004, 2009 நாடாளுமன்ற தேர்தல்களில் பெற்ற வெற்றிகள், தனிப்பட்ட முறையில் தனக்கு திருப்தியளித்ததாக தெரிவித்தார். Source link