தொடர் தோல்விகளால் ஓட்டல் தொழிலுக்கு மாற இருந்தேன்; ஷாருக்கான் பளிச்

மும்பை: எனது படங்கள் தொடர் தோல்வி கண்டதால் ஓட்டல் தொழிலை தொடங்கலாம் என்றும் சினிமாவை விட்டு விலகலாம் என்றும் முடிவு செய்தேன் என்றார் ஷாருக்கான். 4 வருடங்களுக்கு பிறகு ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் இந்தி படம், உலகம் முழுவதும் 5 நாளில் ரூ.543 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தின் வெற்றி விழா மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஷாருக்கான் பேசியது: எனது படங்களால் அன்பைத்தான் விதைக்கிறேன். உங்கள் அன்புக்காக ஏங்கித்தான் படங்களில் நடிக்கிறேன். … Read more

ஒரு வருடத்துக்கு பிறகு மகளின் முகத்தை காட்டினார் பிரியங்கா

லாஸ்ஏஞ்சல்ஸ்: பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டில் கலக்கி வரும் நடிகை பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் நடிகர் நிக் ஜோனஸை காதலித்து மணந்தார். இந்த தம்பதியின் மகள் மால்டி மேரிக்கு தற்போது ஒரு வயது ஆகிறது. தனது மகளின் முகத்தை இதுவரை வெளியே காட்டாமல் இருந்த பிரியங்கா சோப்ரா, தற்போது முதன் முறையாக தனது மகளின் முகத்தை பொதுவெளியில் காட்டியுள்ளார். க்யூட்டான அந்த குழந்தையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது பற்றி பிரியங்கா சோப்ரா கூறும்போது, ‘மகளின் முகத்தை … Read more

ராஜமவுலி, தனுஷ் வெளியிட்ட தசரா டீசர்

ஐதராபாத்: நானி நடிக்கும் தசரா பான் இந்தியா படத்தின் டீசரை ராஜமவுலி, தனுஷ் உள்ளிட்டோர் வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து தரமான படங்களை தேர்வு செய்து அதில் சிறப்பான நடிப்பை கொடுத்து வருகிறார் நானி. தெலுங்கில் அவர் நடிப்பில் அடுத்து வெளியாகும் படம் தசரா. இந்த படத்தை தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் திரையிட உள்ளனர். வரும் மார்ச் 30ல் படம் ரிலீசாகிறது. அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒதெலா இயக்குகிறார். சுதாகர் செருகுரி தயாரிக்கிறார். இதில் நானி ஜோடியாக … Read more

இலியானாவுக்கு என்ன நோய்?..மருத்துவமனையில் திடீர் அட்மிட்

மும்பை: நடிகை இலியானா, மருத்துவமனையில் இருந்தவாறே, அவரது ரசிகர்களுக்காக புகைப்படங்களை வெளியிட்டுள்ளதால் அவர் என்ன நோய்க்காக மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார் என்ற குழப்பம் நீடிக்கிறது. தமிழில் கேடி, விஜய்யுடன் நண்பன் படங்களில் நடித்தவர் இலியானா. தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். இப்போது பாலிவுட்டில் நடித்து வருகிறார். இலியானா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மருத்துவமனை படுக்கையில் இருந்து கொண்டே சில செல்ஃபி படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘எனக்கு மூன்று பேக் IV என்ற திரவ ஊசி போடப்பட்டுள்ளது. … Read more

திருப்பதியில் 8 மணிநேரத்தில் ஏழுமலையான் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால், தரிசனத்திற்கு பல மணி ஆனது. இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென பக்தர்களின் வருகை குறைந்தது. இதனால், 74 ,242 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 25 ,862 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது. இதில் ரூ.4.8 கோடி கிடைத்தது. நேற்றைய நிலவரப்படி வைகுண்டம் க்யூ காம்ப்ளக்சில் உள்ள 2 அறைகள் … Read more

ஜார்க்கண்ட் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 14 பேர் உயிரிழப்பு; பலர் காயம்

தன்பாத்: ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள பல அடுக்குமாடி குடியிருப்பில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். இன்னும் பலர் கட்டிடத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநிலத் தலைநகர் ராஞ்சியில் இருந்து 160 கிமீ தொலைவில் உள்ள தன்பாத்தின் ஜோராபடாக் பகுதியில் உள்ள ஆஷிர்வாத் டவர் அடுக்குமாடி குடியிருப்பில் மாலை 6 மணியளவில் … Read more

மக்களை எதிர்கொள்ள பாஜக பயப்படுகிறது. உமர் அப்துல்லா சாடல்.!

காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரையில் பல அரசியல் கட்சிகள் பங்கேற்காதது ஏமாற்றம் அளிப்பதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியில், ஒமர் அப்துல்லா கூறும்போது, “இந்த யாத்திரை பிரதமர் வேட்பாளருக்கு அபிஷேகம் செய்வது அல்ல. அதனால் விலகி இருக்கத் தேர்ந்தெடுத்த கட்சிகள் அந்த முடிவை எடுக்கத் தூண்டியது என்ன என்பதைத் தீவிரமாக சுயபரிசோதனை செய்ய வேண்டும். தேர்தல் கூட்டணியை உருவாக்குவது பற்றி, நாட்டைப் பற்றி ஒன்றுக்கு … Read more

புதுச்சேரி கடல் பகுதியில் கடல் சீற்றம் அதிகரிப்பு: கடலோரத்தில் மணல் அலை வீசுவதால் மக்கள் பாதிப்பு

புதுச்சேரி: வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புதுச்சேரியில் கடலில் இருந்து வீசும் தரை காற்றினால் மணல் அலை அலையாக சாலைகளில் பரவி வருகிறது. இலங்கை அருகே தென்மேற்கு கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வருகின்ற 3-ம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 45 கிலோ மீட்டர் முதல் 55 … Read more

பாகிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்; இந்தியா கண்டனம்.!

பாகிஸ்தானின் அமைதியான வடமேற்கு பெஷாவர் நகரில் உள்ள உயர் பாதுகாப்பு மண்டலத்தில் நேற்று மதிய பிரார்த்தனையின் போது வழிபாட்டாளர்கள் நிரம்பியிருந்த மசூதிக்குள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்று மதியம் 1.40 மணியளவில் போலிஸ் லைன்ஸ் பகுதியில் உள்ள மசூதிக்குள் காவல்துறை, ராணுவம் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் படையினர் உட்பட வழிபாட்டாளர்கள் சுஹ்ர் (பிற்பகல்) தொழுகையை நடத்திக் கொண்டிருந்த போது சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டது. முன் வரிசையில் இருந்த தற்கொலை குண்டுதாரி தன்னைத்தானே வெடிக்கச் செய்து கொண்டதால், பக்தர்கள் … Read more

காவல் நிலையம் முன் அமர்ந்து கொண்டு ‘ஹூக்கா’ புகைத்து ‘ரீல்’ வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது

ஹபூர்: உத்தரபிரதேசத்தில் காவல் நிலையம் முன்பு அமர்ந்து  ‘ஹூக்கா’ புகைத்துக் கொண்டிருந்ததை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டம் ஹபீஸ்பூர் காவல் நிலையத்திற்கு எதிரே அதேபகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், போதை வஸ்துவான ‘ஹூக்கா’ புகைத்துக் கொண்டிருந்தார். பின்னர் அதனை வீடியோவாக எடுத்து சமூக ஊடக தளங்களிலும் ரீல் வீடியோவாக பகிர்ந்துள்ளார். இந்த ரீல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, சம்பந்தப்பட்ட வாலிபரை போலீசார் தேடிவந்தனர். … Read more