இந்தியாவில் தயாரித்து ஏற்றுமதி செய்யப்பட்ட இருமல் மருந்தால் உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழப்பு: விசாரணைக்கு ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: இந்தியாவில் தயாரித்து ஏற்றுமதி செய்யப்பட்ட இருமல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக உஸ்பெகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த விசாரணைக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. அதே போல் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மேரியோன் பயோடெக் நிறுவனத்தின் `டாக்-1 மேக்ஸ்’ இருமல் மருந்து உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் … Read more

கடந்த ஆண்டில் சாலை விபத்துக்களில் 1.53 லட்சம் பேர் பலி

புதுடெல்லி: ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் ‘இந்தியாவில் சாலை விபத்து-2021’ என்ற  தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; * 2021ம் ஆண்டில் 4,12,432 சாலை விபத்துக்கள்  நிகழ்ந்துள்ளன. * விபத்துக்களில் 1,53,972 பேர் இறந்துள்ளனர். 3,84,448 பேர் காயமடைந்துள்ளனர். * ஹெல்மெட் அணியாததால் 46,593 பேர் இறந்துள்ளனர். இதில் 32,877 பேர் ஓட்டுனர்கள். 13,716 பின்னால் அமர்ந்து பயணம் செய்தவர்கள். 93,763 பேர் காயமடைந்துள்ளனர். * சீட் பெல்ட் அணியாமல் பயணித்த 16,397 பேர் உயிரிழந்துள்ளனர். 39,231 … Read more

பச்சைக்கிளி சொல்லத்தெரியாதா? பிஞ்சு குழந்தையின் கையை உடைத்த டியூசன் டீச்சர்

போபால்: சரியாக வாசிக்க தெரியவில்லை என்று கூறி ஐந்து வயது பிஞ்சு குழந்தையின் கையை டியூசன் ஆசிரியை முறுக்கியதில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து ஆசிரியை கைது செய்யப்பட்டார். மத்தியப்பிரதேசத்தின் ஹபிகஞ்ச் பகுதியை சேர்ந்த பெற்றோர் தனது ஐந்து வயது பெண் குழந்தையை பிரபல பள்ளியில் சேர்ப்பதற்கு திட்டமிட்டனர். இதற்காக வீட்டிற்கு அருகிலேயே குழந்தைக்கு டியூசன் ஏற்பாடு செய்துள்ளனர். பிரயாக் விஸ்வகர்மா என்ற இளம்பெண் குழந்தைக்கு டியூசன் எடுத்துள்ளார். தினசரி குழந்தை டியூசனுக்கு சென்றுவந்துள்ளது. இந்நிலையில் கடந்த … Read more

பாதுகாப்பு வழிகாட்டுதல்களை 113 முறை ராகுல் மீறினார்: சிஆர்பிஎப் அதிகாரிகள் புகார்

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாதுகாப்பு வழிகாட்டுதல்களை 113 முறை மீறியதாக சிஆர்பிஎப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் கடந்த 24ம் தேதி டெல்லி வந்தபோது அதிக அளவில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தன. ராகுலுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு இருந்தும் டெல்லி போலீசார் உரிய பாதுகாப்பை வழங்கவில்லை என சர்ச்சை எழுந்தது. இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் ஒன்றிய உள்துறை அமைச்சர்  அமித்ஷாவுக்கு நேற்று முன்தினம் கடிதம் எழுதினார். … Read more

அடேங்கப்பா! 365 நாட்களில் 3330 உணவு ஆர்டர்: டெல்லி இளைஞரின் சுவாரசிய சாதனை

புதுடெல்லி: உணவு டெலிவரி நிறுவனத்தின் மூலம் ஒரு வருடம் முழுவதும் டெல்லியை சேர்ந்த இளைஞர் ஒருவர் 3330 உணவு ஆர்டர் செய்துள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்ட வருடாந்திர சுவாரசிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக பல்வேறு நிறுவனங்கள் நேரடியாக வீட்டிற்கே சென்று உணவு டெலிவெரி செய்து வருகின்றன. இந்நிலையில் அதில் ஒரு  நிறுவனமான சோமோட்டோ, 2022ம் ஆண்டிற்கான வருடாந்திர சுவாரசிய அறிக்கையை அதன் செயலியில் நேற்று வெளியிட்டுள்ளது. அதில்,‘‘டெல்லியைச் சேர்ந்த அங்கூர் என்பவர் 2022 ஆண்டில் 3330 முறை … Read more

ஆந்திர தேசிய நெடுஞ்சாலையில் போர் விமானங்கள் இறக்க சோதனை ஓட்டம்

திருமலை: ஆந்திர தேசிய நெடுஞ்சாலையில் அவசர காலத்தில் போர் விமானங்கள் இறங்க சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. இதனால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. பிரதமரின் கதி சக்தி மிஷன் திட்டத்தின்கீழ் அவசர காலத்தில் தரையிறங்கும் விமான ஓடுபாதைகள் நாடு முழுவதும் 20 இடங்களில்  அமைக்கப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் முதல் முறையாக ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டத்தில் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ரேணங்கிவரம்-  அட்டாங்கி  இடையே 4.1 கிமீ நீளம் மற்றும் 33 மீட்டர் அகலம் கொண்ட … Read more

தூங்கும் வசதியுடன் வந்தே பாரத் ரயில் – சென்னை ஐசிஎப்.க்கு ரயில்வே உத்தரவு

புதுடெல்லி: நாட்டில் பயண நேரத்தை குறைக்கும் நோக்கில், வந்தே பாரத் அதிவேக ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்த ரயில்களுக்கான பெட்டிகள் இருக்கை வசதியுடன் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 117 வந்தே பாரத் ரயில்களுக்கான பெட்டிகள் தயாரிக்க ஐசிஎப் ஆர்டர் பெற்றுள்ளது. இந்நிலையில், இவற்றில் 75 ரயில்கள் மட்டும் இருக்கை வசதியுடன் தயாரிக்கப்படும். மீதமுள்ள ரயில்களில் இரவு நேர பயணத்தின் போது தூங்கும் வசதி ஏற்படுத்தப்படும் என்று … Read more

குடியரசு தின விழா அணிவகுப்பில் 7வது ஆண்டாக பீகார் புறக்கணிப்பு: ஒன்றிய அரசு மீது ஆளும் ஐ.ஜ.த குற்றச்சாட்டு

பாட்னா: குடியரசு தின அணிவகுப்பில் 7வது ஆண்டாக பீகார் புறக்கணிக்கப்பட்டதாக அம்மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர் குற்றம்சாட்டி உள்ளார். வரும் 2023ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவியேற்று முதன் முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுடன் உரையாற்றுவார். தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். அன்றைய தினம் பல்வேறு மாநிலங்களின் அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையிலான அணிவகுப்பும் … Read more

காங்கிரஸ் கட்சியின் 138-வது நிறுவன தின விழா

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் 138-வது நிறுவன தின நிகழ்ச்சி டெல்லியில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: மக்களிடையே பாஜக பிரி வினையை உருவாக்கி, நாட்டில் வேலைவாய்ப்பின்மையை நீடிக்க வைக்கிறது. இந்தியா என்ற எண்ணத்தின் மீதே தொடர் தாக்குதல் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் வெறுப்புணர்வை ஒவ்வொரு நாளும் பாஜக அதிகப்படுத்துகிறது. பணவீக்கம் மற்றம் வேலைவாய்ப்பின்மை ஆகியவை மக்களுக்கு … Read more

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மோடியின் தாயார் எப்படி இருக்கிறார்?: விரைவில் குணமடைய பிரார்த்தனை

அகமதாபாத்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதமர் மோடியின் தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக் குறைவால் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இதையறிந்த பிரதமர் மோடி, அகமதாபாத் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது தாயாரை சந்தித்து நலம் விசாரித்தார். தற்போது ஹீராபெனின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து … Read more