2024க்குள் மாவோயிஸ்ட்கள் முழுவதுமாக ஒழிக்கப்படுவார்கள்; அமித்ஷா உறுதி.!

ஆயுதப் போராட்டத்தின் மூலமாக நாட்டின் அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது மாவோயிஸ்ட்களின் லட்சியம். நக்சலைட் என்ற பெயரில் இயங்கிவந்தவர்கள்தான் தற்போது மாவோயிஸ்ட்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஆந்திரா, தெலங்கானா, சத்தீஸ்கர், ஒடிசா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்ட்களின் செயல்பாடுகள் அதிகம். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, குண்டுவைத்து அவரைக் கொலை செய்வதற்கு நக்சலைட்கள் முயன்றனர். காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் மீது ஆயுதங்களைக்கொண்டு தாக்குவதை வழக்கமாகக்கொண்டிருந்தனர். கடந்த … Read more

பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம்: குற்றவாளி பெங்களூருவில் கைது.! அமெரிக்க பதவியும் பறிபோனது

புதுடெல்லி: விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம் தொடர்பாக குற்றவாளியை பெங்களூருவில் போலீசார் கைது செய்தனர். மேலும், அவரை பணியில் இருந்து அவரது நிறுவனம் நீக்கியுள்ளது. நியூயார்க்கில் இருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து ெடல்லி போலீசார் கூறுகையில், ‘விமானத்தில் தகாத முறையில் நடந்து கொண்ட சங்கர் மிஸ்ராவை பெங்களூருவில் கைது செய்துள்ளோம். அவர் மீது 294 (பொது … Read more

அதைச் சொல்ல நீங்கள் ராமர் கோயில் பூசாரியா? – அமித் ஷா பேச்சுக்கு மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் 

பானிபட்: வரும், 2024 ஆம் ஆண்டு ஜன.1 ம் தேதிக்குள் அயோத்தியில் ராமர் கோயில் தயாராகிவிடும் என்ற அமித் ஷாவின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அதைச் சொல்ல நீங்கள் என்ன ராமர் கோயில் பூசாரியா என்று கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த வியாழக்கிழமை திரிபுராவில் ஜன விஸ்வாஸ் ரத யாத்திரையை தொடங்கி வைத்துப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் முயற்சியை நீதிமன்ற வழக்குகள் … Read more

தினமும் ஒரு டோஸ் வெறுப்பு விஷம் கக்கப்படுகிறது; முன்னாள் அரசு அதிகாரிகள் கடிதம்.!

கர்நாடகா மாநிலம் சிவமொக்காவில் நேற்று நடைபெற்ற இந்து ஜாகரன வேதிகேயின் தென் மண்டல ஆண்டு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய பிரதேச பாஜக பெண் எம்பி பிரக்யா சிங் தாக்கூர் , “கடவுளால் படைக்கப்பட்ட இவ்வுலகில், எல்லா ஒடுக்குமுறையாளர்களையும், பாவங்களையும் ஒழிக்க வேண்டும் என்று சன்யாசி கூறுகிறார். லவ் ஜிஹாத், அவர்களுக்கு ஜிஹாத் பாரம்பரியம் உண்டு, எதுவும் செய்யாவிட்டாலும் லவ் ஜிஹாத் செய்கிறார்கள். அவர்கள் நேசித்தாலும் அதில் ஜிஹாத் செய்கிறார்கள். நாமும் (இந்துக்கள்) கடவுளை நேசிக்கிறோம், … Read more

கோயிலுக்கு சாமி கும்பிட வந்த பெண்ணின் முடியை பிடித்து இழுத்து வெளியேற்றிய அறங்காவலர்

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகரில் அமிர்தஹள்ளி பகுதியில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் வழிபாடு செய்ய சென்ற பெண் ஒருவரை கோயிலின் அறங்காவலர்களில் ஒருவரான முனிகிருஷ்ணப்பா என்பவர் அடித்து தாக்கிய வீடியோ வைரலாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘கோயிலுக்கு வந்த பெண் தூய்மையாக இல்லை என்றும், அவர் குளிக்காமல் கோயிலுக்கு வந்ததாகவும், கருப்பாக இருப்பதாகவும் கூறி, அறங்காவலர் முனிகிருஷ்ணப்பா திட்டியுள்ளார். பின்னர் அந்த பெண்ணை கோயிலுக்குள் வர கூடாது என கூறி, இரும்பு … Read more

சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்!!

பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடங்கியது. பீகார் மாநிலத்தின் மக்கள் தொகை சுமார் 12.70 கோடி. அம்மாநிலத்தில் மொத்தம் 38 மாவட்டங்களில் சுமார் 2.58 கோடி குடும்பங்கள் உள்ள நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளை மே மாத இறுதிக்குள் முடிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இரு கட்டங்களாக நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பு பணிகளுக்காக சுமார் ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், MGNREGA பணியாளர்கள் என பலருக்கும் கடந்த மாதம் பயிற்சி … Read more

பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு ஆரம்பம்: முதல்வர் நிதிஷ் குமார் தொடங்கிவைத்தார்

பாட்னா: பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு இன்று (ஜன்.7) தொடங்கியது. இதனை தொடங்கிவைத்த முதல்வர் நிதிஷ் குமார், இந்த கணக்கெடுப்பின் மூலம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பலன் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு இன்று தொடங்கியது. தலைநகர் பாட்னாவில் முதல்வர் நிதிஷ் குமார் இதனை தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், ”சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் அனைவருக்கும் பலன் கிடைக்கும். மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு உதவும் நோக்கில் அரசு செயல்பட இது உதவும். கணக்கெடுப்புப் பணி … Read more

ஏர் இந்தியா விமானத்தில் சிறுநீர் கழித்த சம்பவம்: ஷங்கர் மிஸ்ராவுக்கு 14 நாட்கள் சிறை!

ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஷங்கர் மிஸ்ராவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு, ஏர் இந்தியா விமானம் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதி புறப்பட்டது. அப்போது, சக பயணி ஒருவர் குடி போதையில், அதே வகுப்பில் பயணித்துக் கொண்டிருந்த 70 வயது பெண்ணின் இருக்கை அருகே … Read more

மோடி அரசின் கொள்கைகளால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே: பிருந்தா காரத் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 13வது அகில இந்திய மாநாடு  திருவனந்தபுரத்தில் நேற்று  துவங்கியது. திருவனந்தபுரம் எம்.சி.ஜோசபின் நகரில் பொது  மாநாட்டை கேரள கலாமண்டலம் பல்கலைக்கழக (தன்னாட்சி) வேந்தரும் நடனக்  கலைஞருமான மல்லிகா சாராபாய் துவக்கி வைத்தார். அகில இந்திய தலைவர் மாலினி  பட்டாச்சார்யா கொடி ஏற்றினார். சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும் புரவலருமான பிருந்தா  காரத், கியூப புரட்சியாளர் சே  குவேராவின் மகள் டாக்டர் அலெய்டா குவேரா, மனித உரிமைப் போராளி டீஸ்டா  செதல்வாத் … Read more

கடுங்குளிரில் இருந்து தப்பிப்பது எப்படி? முழுவிவரம்!!

கடந்த சில தினங்களாக வட மாநிலங்களில் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பலருக்கு உடல் சார்ந்த பிரச்னைகளும் ஏற்படுகிறது. வழக்கமாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் குளிர் அதிகம் இருக்கும் என்றாலும், இம்முறை வழக்கத்திற்கு மாறாக அதிக குளிர் நிலவுகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் குளிர்பிரசேதங்களை விட அதிக குளிர் பதிவாகிறது. இந்நிலையில் இந்த குளிரில் இருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று விரிவாக பார்க்கலாம். கடுங்குளிரால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? கடுமையான குளிர் … Read more