வக்கீல்கள் கிடைக்காமல் 63 லட்சம் வழக்கு தேக்கம்: தலைமை நீதிபதி சந்திரசூட் பேச்சு

அமராவதி: வழக்குகளில் வாதாட வக்கீல்கள் கிடைக்காததால் நாடு முழுவதும் 63 லட்சம் வழக்குகள் தேங்கியுள்ளன என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம்,அமராவதியில் ஆந்திர பிரதேச நீதித்துறை அகாடமி துவக்க விழா நேற்று நடந்தது. இதில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேசும்போது,‘‘இந்திய கிரிமினல் நீதி அமைப்பின்படி வழக்குகளில் ஜெயில் தண்டனையை விட ஜாமீன் வழங்குவது முக்கியமானது. ஆனால் செயல்முறையில், இந்தியாவில் சிறைகளில் இருக்கும் விசாரணை கைதிகள் எண்ணிக்கை அதிகம். ஒருநாள் சிறை என்பது … Read more

மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் சேவை தொடக்கம்; ரயில்வேயை நவீனமயமாக்க வரலாறு காணாத முதலீடு: பிரதமர் மோடி பேச்சு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நாட்டின் 7வது வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, “நாட்டின் ரயில்வே கட்டமைப்பை நவீனமயமாக்க வரலாறு காணாத வகையில் முதலீடு செய்யப்படுகிறது,’’ என்று கூறினார். மேற்கு வங்கத்தில், வடகிழக்கின் நுழைவுவாயிலாக கருதப்படும் ஹவுரா – நியூஜல் பைகுரியை இணைக்கும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.  இதன் மூலம், ஹவுரா-நியூ ஜல்பைக்குரி இடையேயான 600 கி.மீ தூரத்தை 7.45 மணி நேரத்தில் … Read more

தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் ஒரே ஆண்டில் பாஜவுக்கு ரூ351 கோடி நன்கொடை

புதுடெல்லி: 2021-22ம் ஆண்டில் தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் பாஜ கட்சி ரூ.351 கோடி நன்கொடை பெற்று முதலிடத்தில் உள்ளது. 2021-22 நிதியாண்டில் தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த அறிக்கையை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) வெளியிட்டுள்ளது.  அதன்படி 89 கார்ப்பரேட், வணிக நிறுவனங்கள், 40 தனிநபர்கள் மொத்தமாக ரூ.487.0551 கோடியை ஆறு தேர்தல் அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக அளித்திருக்கிறார்கள். இந்த நிதி  பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. பாஜவுக்கு … Read more

2023 பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் பகுதி புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறும் என தகவல்!

புதுடெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதிக்கான பாராளுமன்றம் கூடும் மார்ச் மாதம் புதிய பார்லிமென்ட் கட்டடம் திறக்கப்படும் என தெரிகிறது. நாடாளுமன்ற கட்டிடத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், பிப்ரவரி மாதத்திற்குள் பணிகள் முடிவடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி புதிய பார்லிமென்ட் கட்டிடத்தில் நடைபெறும் என பிரஸ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. பட்ஜெட் கூட்டத்தொடர் வழக்கமாக இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி வழக்கமாக ஜனவரி 30 … Read more

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதிக்கு சிறப்பு பஸ்

திருமலை: வைகுண்ட ஏகாதசியையொட்டி தமிழகத்தில் இருந்து 25 சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்பட உள்ளதாக ஆந்திர மாநில போக்குவரத்து கழக திருப்பதி பிராந்திய மேலாளர் செங்கல்ரெட்டி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், திருப்பதியில் நேற்று மாநில போக்குவரத்து கழக திருப்பதி பிராந்திய மேலாளர் செங்கல்ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: ஜனவரி 1ம்  தேதி ஆங்கில புத்தாண்டு, 2ம் தேதி முதல் 11ம் தேதி வரை வைகுண்ட ஏகாதசிக்கான சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக, திருமலை … Read more

இந்து பெண் கொடூர கொலை; சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும்: பாக்.குக்கு இந்தியா எச்சரிக்கை

புதுடெல்லி:  பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிறுபான்மையினரை அந்நாட்டு அரசு பாதுகாக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு வலியுறுத்தி உள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் தயா பீல்(40) என்ற இந்து பெண் நேற்று முன்தினம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது தலை துண்டிக்கப்பட்டு, மார்பகங்கள் வெட்டப்பட்டு மிக கொடூரமாக சிதைக்கப்பட்டு இருந்தது. இந்த கொலையை ஊடகங்கள் பெரிதுபடுத்தவில்லை. இஸ்லாமாபாத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் சிந்து மாகாண தலைவர்கள் இது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இந்நிலையில் டெல்லியில் … Read more

அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மோடியின் தாயார் மரணம்: காந்தி நகர் மயானத்தில் இறுதி சடங்கு; உலக தலைவர்கள் இரங்கல்

அகமதாபாத்: அகமதாபாத் மருத்துவமனையில் சுவாச பிரச்னையால் சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் நேற்று அதிகாலை காலமானார். அவரது உடல் காந்திநகரில் தகனம் செய்யப்பட்டது. பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் (100), குஜராத் மாநிலம் காந்தி நகர் ரேசானில் பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் உள்ள தனது இளைய மகன் பங்கஜ் மோடியின் வீட்டில் வசித்து வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன் அவருக்கு திடீரென சுவாச பிரச்னை ஏற்பட்டதால், அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இருதயவியல் … Read more

மோடி குறித்து விமர்சனம் செய்த திரிணாமுல் செய்தி தொடர்பாளர் மற்றொரு வழக்கில் கைது

கொல்கத்தா: பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்த   திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே, மற்றொரு வழக்கில் குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்டார். குஜராத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் தொங்கு பாலம் அறுந்து  விழுந்த சம்பவத்தில், பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை   திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே  வெளியிட்டிருந்தார். அதையடுத்து கடந்த 6ம் தேதி குஜராத் சைபர் கிரைம்  போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் அவருக்கு ஜாமீன்  கிடைத்தது. … Read more

'தேச பாதுகாப்பை விட்டு தர மாட்டோம்! – ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்

“அண்டை நாடுகளுடனான நல்லுறவுக்காக தேச பாதுகாப்பை ஒருபோதும் விட்டுத் தர மாட்டோம்,” என, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார். கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில், சிவகிரி மடத்தின் 90-வது ஆண்டு புனிதப் பயண நிகழ்ச்சியில், பாஜக மூத்தத் தலைவரும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசியதாவது: முன்னாள் பிரதமர் வாஜ்பாய், ”நமது நண்பர்களை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் அண்டை வீட்டாரை மாற்ற … Read more

ஒன்றியம், மாநிலத்தில் பாஜக அரசு இருந்தும் பலனில்லை: கன்னட மொழிக்காக‘செய் அல்லது செத்துமடி’முன்னாள் பிரதமர் அறைகூவல்

பெங்களூரு: ஒன்றியம், மாநிலத்தில் பாஜக அரசு இருந்தும் பலனில்லை; கன்னட மொழிக்காக ‘செய் அல்லது செத்துமடி’ நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிறுவனருமான தேவகவுடா, கட்சியினருக்கு எழுதிய கடிதத்தில், ‘கன்னட மொழி பேசும் மக்கள் தங்கள் அடையாளத்தை எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. கன்னட கட்சியை வலுப்படுத்த வேண்டும். தண்ணீருக்காகவும், மொழிக்காகவும் தொடர்ந்து போராட வேண்டும். இன்றைய காலக்கட்டமானது, … Read more